Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆங்கில ஆதிக்கம்
Page 1 of 1 • Share
ஆங்கில ஆதிக்கம்
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசின் நிர்வாகத்தில், தொழில்துறையில், வர்த்தகத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில், முக்கியமான பல துறைகளில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலம் தொடர்பான சில தவறான நம்பிக்கைகளே.
தவறான நம்பிக்கை 1: நவீன உலகத்துக்கு ஆங்கிலம் தேவை.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாறு தல்களைத் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், உலகின் முன் னணி நாடுகள் ஆங்கிலத்தில்தான் இவற்றைக் கையாண் டிருக்க வேண்டும். அப்படி இல்லையே? ஜப்பான், ஜெர்மனி போன்றவை அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதித்துவருகின் றன. அந்த நாடுகளில் பாடங்கள் அவரவர் தாய்மொழிகளில்தான் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகம்.
தவறான நம்பிக்கை 2: உலகோடு ஒட்டிவாழ ஆங்கில மொழியறிவு அவசியம்.
ஏற்றுமதியில் உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில் 8 நாடுகள், அவர்களுடைய தாய்மொழியில்தான் நாட்டு நிர்வாகத்தை நடத்துகின்றன, ஆங்கிலத்தில் அல்ல. நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்துவரும் அரசு நிர்வாகத்தையும் வணிகத்தையும் அதே முறையில், அதே மொழியில் மேற்கொள்கின்றனர். உலக அரங்கில் வெற்றிகரமாக அவர்கள் வலம்வருகின்றனர்.
தவறான நம்பிக்கை 3: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆங்கிலம் அத்தியாவசியம்.
இந்தியாவில் ஆங்கில அறிவு அதிகமாக இருப்பதால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவால் சாதிக்க முடிந்தது என்போர் பலர். ஆங்கிலம் தெரிந்தவர்களைச் சேர்த்து இந்தத் துறையில் வேலைவாங்க முடிகிறது என்பது உண்மையாக இருந்தாலும், ஆங்கிலத்தால்தான் இது சாத்தியம் என்பது தவறான எண்ணப்போக்கே.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தொழில்நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம்தான் பல ஆண்டுகளாக முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டில் கொரிய மொழிக்குத்தான் முக்கியத்துவம். 1969-ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம், 2012-ல் உலக அளவில் 18,900 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்பனை செய்திருக்கிறது. ஐ.பி.எம்., (10,500 கோடி டாலர்கள்), மைக்ரோ சாஃப்ட் (7,800 கோடி டாலர்கள்) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டுவிற்பனையைவிட அதிகம். ஆங்கிலம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்ற வாதத்தை சாம்சங் உடைத்துவிட்டது.
ஆங்கிலம் விளைவித்த கேடு
இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஆள வந்த பிறகு, இந்தியர் களில் மிகச் சிலரே முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நிர்வாகத்தில் உதவுவதற்கு அமர்த்திக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அப்போது வாழ்க்கையில் சலுகைகளும் மரியாதைகளும் கிடைத்தன. அது அப்படியே பரவி, பலரையும் பற்றிக்கொண்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின், இந்தியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு, இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரட்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் நிர்வாகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
nandri : the hindu
இதனால், கோடிக் கணக்கான மக்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றனர். மனித வளத்தை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நாடு, ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் பலரை ஒதுக்கிவைத்து, மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மொழி வழியாகப் புதியதொரு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது. உள்ளூர் மொழிகளைத் ‘தீண்டத் தகாத’தாக ஆக்கிவிட்ட இந்தியா, உலகிலேயே புதியதொரு உதாரணம்.
தவறான நம்பிக்கை 1: நவீன உலகத்துக்கு ஆங்கிலம் தேவை.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாறு தல்களைத் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், உலகின் முன் னணி நாடுகள் ஆங்கிலத்தில்தான் இவற்றைக் கையாண் டிருக்க வேண்டும். அப்படி இல்லையே? ஜப்பான், ஜெர்மனி போன்றவை அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதித்துவருகின் றன. அந்த நாடுகளில் பாடங்கள் அவரவர் தாய்மொழிகளில்தான் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகம்.
தவறான நம்பிக்கை 2: உலகோடு ஒட்டிவாழ ஆங்கில மொழியறிவு அவசியம்.
ஏற்றுமதியில் உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில் 8 நாடுகள், அவர்களுடைய தாய்மொழியில்தான் நாட்டு நிர்வாகத்தை நடத்துகின்றன, ஆங்கிலத்தில் அல்ல. நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்துவரும் அரசு நிர்வாகத்தையும் வணிகத்தையும் அதே முறையில், அதே மொழியில் மேற்கொள்கின்றனர். உலக அரங்கில் வெற்றிகரமாக அவர்கள் வலம்வருகின்றனர்.
தவறான நம்பிக்கை 3: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆங்கிலம் அத்தியாவசியம்.
இந்தியாவில் ஆங்கில அறிவு அதிகமாக இருப்பதால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவால் சாதிக்க முடிந்தது என்போர் பலர். ஆங்கிலம் தெரிந்தவர்களைச் சேர்த்து இந்தத் துறையில் வேலைவாங்க முடிகிறது என்பது உண்மையாக இருந்தாலும், ஆங்கிலத்தால்தான் இது சாத்தியம் என்பது தவறான எண்ணப்போக்கே.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தொழில்நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம்தான் பல ஆண்டுகளாக முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டில் கொரிய மொழிக்குத்தான் முக்கியத்துவம். 1969-ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம், 2012-ல் உலக அளவில் 18,900 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்பனை செய்திருக்கிறது. ஐ.பி.எம்., (10,500 கோடி டாலர்கள்), மைக்ரோ சாஃப்ட் (7,800 கோடி டாலர்கள்) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டுவிற்பனையைவிட அதிகம். ஆங்கிலம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்ற வாதத்தை சாம்சங் உடைத்துவிட்டது.
ஆங்கிலம் விளைவித்த கேடு
இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஆள வந்த பிறகு, இந்தியர் களில் மிகச் சிலரே முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நிர்வாகத்தில் உதவுவதற்கு அமர்த்திக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அப்போது வாழ்க்கையில் சலுகைகளும் மரியாதைகளும் கிடைத்தன. அது அப்படியே பரவி, பலரையும் பற்றிக்கொண்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின், இந்தியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு, இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரட்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் நிர்வாகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
nandri : the hindu
இதனால், கோடிக் கணக்கான மக்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றனர். மனித வளத்தை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நாடு, ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் பலரை ஒதுக்கிவைத்து, மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மொழி வழியாகப் புதியதொரு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது. உள்ளூர் மொழிகளைத் ‘தீண்டத் தகாத’தாக ஆக்கிவிட்ட இந்தியா, உலகிலேயே புதியதொரு உதாரணம்.
Re: ஆங்கில ஆதிக்கம்
தமிழ் நாட்டில் வேலை செய்கிறவருக்குத் தமிழே போதும்... இல்லன்னா ஆங்கில் தேவையே...
தமிழ்... தமிழ்ன்னா தமிழ் சோறு போடாது. என் அனுபவம் இது.
தமிழ்... தமிழ்ன்னா தமிழ் சோறு போடாது. என் அனுபவம் இது.
Re: ஆங்கில ஆதிக்கம்
தமிழ் படிப்பதால் ஆவப்போவதோ - எதிர் காலத்தில் அவர்களுக்குத் தேவையின்மை என்பதாலோ இவ்வாறு நடக்கலாம்.
தமிழ் படிப்பதும் படிக்காததும் அவரவர் தேவை பொருத்ததே...
தமிழ் படிப்பதும் படிக்காததும் அவரவர் தேவை பொருத்ததே...
Re: ஆங்கில ஆதிக்கம்
தாயை பழிப்பவனும் தாய் மொழியை பழிப்பவனும் ஒன்று. தமிழின் பெருமை தெரியாத ஒருவர் கவியருவி என தன்னை தானே சொல்லி கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. இது நாள் வரை உங்கள் கவிதைகள் படித்து கருத்துக்கள் பகிர்த்து தவறு என உணர்கிறேன்.
Re: ஆங்கில ஆதிக்கம்
நான் கவியருவிதான்... தமிழருவி அல்ல...
நான் தமிழில்தான் முனைவர் பட்டமும் செய்துள்ளேன்...
என் கவிதைகளை ரசிப்பதும் ரசிக்காமல் - படிக்காமலேயே விட்டுவிடுவதும் அவரவர் விருப்பமே!
சரி... தமிழ் மொழி பேசுவது என்பது வேறு. தமிழ்தான் படித்தாகவேண்டும் - பேசியாக வேண்டும் என்பது வேறு.
தமிழ் என்றும் வாழும்... ஒருவன் ஆங்கிலம் மீடியம் படிக்கிறான் என்பதாலோ - பேசுகிறான் என்பதாலோ தமிழ் அழிந்துவிடாது.
என் வாதம் எல்லாம்... தமிழ்மொழியால் வேலை வாய்ப்பு இல்லாதபோது அவன் தமிழ் படிக்க (பேச அல்ல) தேவையில்லை என்பதே.
படிப்பு என்பது அறிவைப் பெருக்க என்று சொல்லப்பட்டாலும் மிகமுக்கியமாக அது வேலைவாய்ப்புக்கே படிக்கிறோம் என்று மனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்...
நான் தமிழில்தான் முனைவர் பட்டமும் செய்துள்ளேன்...
என் கவிதைகளை ரசிப்பதும் ரசிக்காமல் - படிக்காமலேயே விட்டுவிடுவதும் அவரவர் விருப்பமே!
சரி... தமிழ் மொழி பேசுவது என்பது வேறு. தமிழ்தான் படித்தாகவேண்டும் - பேசியாக வேண்டும் என்பது வேறு.
தமிழ் என்றும் வாழும்... ஒருவன் ஆங்கிலம் மீடியம் படிக்கிறான் என்பதாலோ - பேசுகிறான் என்பதாலோ தமிழ் அழிந்துவிடாது.
என் வாதம் எல்லாம்... தமிழ்மொழியால் வேலை வாய்ப்பு இல்லாதபோது அவன் தமிழ் படிக்க (பேச அல்ல) தேவையில்லை என்பதே.
படிப்பு என்பது அறிவைப் பெருக்க என்று சொல்லப்பட்டாலும் மிகமுக்கியமாக அது வேலைவாய்ப்புக்கே படிக்கிறோம் என்று மனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்...
Re: ஆங்கில ஆதிக்கம்
வேலை வேலை என்கிறீர்களே, தமிழ் படிக்காமல் விட்டது யார். ஆங்கில மோகம் கொண்டு அலைந்தது யார். வடக்கே இருப்பவன் ஹிந்தி மீடியத்தில் தான் படிக்கிறான். அலுவலகத்தில் ஹிந்தியில் தான் பேசுகிறான். நாம் என்ன செய்கிறோம் தெரியாத ஆங்கிலத்தில் தப்பு தப்பாக பீட்டர் விடுகிறோம். இந்த மோகத்தில் தமிழ் கற்பதையும் கோட்டை விட்டோம். இவை அனைத்திற்கும் முழு பொறுப்பு நாம் தான். இதை நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்டு ஆக வேண்டும். மூலைக்கு மூலை ஆங்கில பள்ளி, இரவு முதலே பள்ளியில் சேர மனு வாங்க காத்திருப்பு. LKG ககு 2 லட்சம் அன்பளிப்பு கட்டாய வசூல் செய்யப் படுகிறது.
அரசு பள்ளியில் படித்தவர்கள் எல்லாம் என்ன பிச்சையா எடுக்கிறார்கள் அல்லது கான்வென்ட் படித்தவர்கள் எல்லோரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்களா?
நம் தாய் மொழியே நமக்கு தெரியவில்லை என்றால் பிற மொழி எப்படி படிப்பது? வல்லினம், மெல்லினம், யரலவழள தெரியாமல் தமிழன் என்று சொல்வது அவமானம் என கருதுகிறேன்.
இன்றைய தலைமுறை தமிழ் ஐ டாமில் என்று கூறுவதை பெருமையாக நினைகிறார்கள்.
கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும், ஆங்கில கவிதைகளா எழுதினார்கள். நாம் நல்ல தமிழ் படைப்பை தருவோம். வேண்டுபவன் அவன் மொழியில் அதை மொழியாக்கம் செய்து கொள்ளட்டும்.
வேலைக்கு மொழி தடையல்ல, நமது அறியாமை தான் முட்டுக் கட்டை.
வேறு மொழி கற்க 3 மாதம் போதும். சரளமாக பேச எழுத அறிந்து கொள்ளலாம். ஆனால் தாய் மொழியை அப்படி மேலோட்டமாக படிக்க முடியாது. வடநாட்டில் இருக்கும் ஒவ்வொருவனுக்கும் அவனது இலக்கியம் பற்றிய அறிவும் தெளிவும் உண்டு. இங்கோ வள்ளுவரையும் கம்பனையும், இளங்கோவையும் தெரியாத மூடர்கள் எவ்வளவு பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம் பச்சை தமிழர்கள் தான். ஆனாலும், Sorry I dont know, I studied in English Medium என சொல்வதில் பெருமை அடைகிறார்கள். .
என்ன தான் சொன்னாலும் தாய் மொழி பயிலாதவன் கண்ணிருந்தும் குருடனே, செவி இருந்தும் செவிடனே, வாய் இருந்தும் ஊமையே என்பதுதான் எனது அழுத்தமான வாதம்.
அரசு பள்ளியில் படித்தவர்கள் எல்லாம் என்ன பிச்சையா எடுக்கிறார்கள் அல்லது கான்வென்ட் படித்தவர்கள் எல்லோரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்களா?
நம் தாய் மொழியே நமக்கு தெரியவில்லை என்றால் பிற மொழி எப்படி படிப்பது? வல்லினம், மெல்லினம், யரலவழள தெரியாமல் தமிழன் என்று சொல்வது அவமானம் என கருதுகிறேன்.
இன்றைய தலைமுறை தமிழ் ஐ டாமில் என்று கூறுவதை பெருமையாக நினைகிறார்கள்.
கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும், ஆங்கில கவிதைகளா எழுதினார்கள். நாம் நல்ல தமிழ் படைப்பை தருவோம். வேண்டுபவன் அவன் மொழியில் அதை மொழியாக்கம் செய்து கொள்ளட்டும்.
வேலைக்கு மொழி தடையல்ல, நமது அறியாமை தான் முட்டுக் கட்டை.
வேறு மொழி கற்க 3 மாதம் போதும். சரளமாக பேச எழுத அறிந்து கொள்ளலாம். ஆனால் தாய் மொழியை அப்படி மேலோட்டமாக படிக்க முடியாது. வடநாட்டில் இருக்கும் ஒவ்வொருவனுக்கும் அவனது இலக்கியம் பற்றிய அறிவும் தெளிவும் உண்டு. இங்கோ வள்ளுவரையும் கம்பனையும், இளங்கோவையும் தெரியாத மூடர்கள் எவ்வளவு பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம் பச்சை தமிழர்கள் தான். ஆனாலும், Sorry I dont know, I studied in English Medium என சொல்வதில் பெருமை அடைகிறார்கள். .
என்ன தான் சொன்னாலும் தாய் மொழி பயிலாதவன் கண்ணிருந்தும் குருடனே, செவி இருந்தும் செவிடனே, வாய் இருந்தும் ஊமையே என்பதுதான் எனது அழுத்தமான வாதம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|