Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படுபாதக ஈயம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
படுபாதக ஈயம்
இன்று உலகின் படு ஆபத்தான சூழல் நஞ்சாக ஈயம் கருதப்படுகிறது. ஈயம் கலந்த பெட்ரோல் முன்பு சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வந்தது. தற்போது அது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், நாம் வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் பயன்படுத்தும் பெயிண்ட், தானியங்கி வாகனங்களில் பயன்படும் ஈய அமில மின்கலங்கள், நிலக்கரியை எரிக்கும் அனல்மின் நிலையங்கள், மின்னணு சாதனக் குப்பைகள், உலோக உருக்கு ஆலைகள், செராமிக் பொருட்கள், வளையல் தயாரிப்புகள் போன்றவற்றால் காற்றின் மூலமும் உணவின் மூலமும் அதிக அளவில் ஈயம், நம் உடலுக்குள் நுழைந்தவண்ணம் உள்ளது.
நமது உடலில் 100 மி.லி. லிட்டர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே நம் உடல் ஈய ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டது என்று அர்த்தம். இன்று உலகில் 12 கோடி மக்கள் ஈய ஆபத்துடன் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.
குழந்தைகள் எச்சரிக்கை!
பெரியவர்களைவிடக் குழந்தைகள்தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும் தீவிரமாகவும் ஆளாகிறார்கள். பெரியவர்களின் உடலை அடையும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன. ஆனால், குழந்தைகளின் உடலை அடையும் ஈயத்தில் 50 சதவீதத்தை, அவர்கள் உடல் அப்படியே ஈர்த்துக்கொள்கிறது. உடலும் மூளையும் வேகமாக வளரும் பருவம், குழந்தைப் பருவம். அப்பருவத்தில் அவர்களது உடல் வேதி மாசுகளை ஈர்க்கும் வேகமும் விகிதமும் அதிகமாக உள்ளன.
ஈயத்தால் மாசுபட்ட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுண்ணறிவுத் திறன், பேச்சுத் திறன், கல்வித் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் நாம் காணும் துறுதுறுப்பு, கவனக் குறைபாடு, நடத்தைக் குறைபாடு போன்றவற்றுக்கு அவர்கள் கருவில் இருக்கும்போதோ அல்லது வளரும் பருவத்திலோ ஈயத்தால் பாதிக்கப்படுவதும் காரணம்.
பொதுவாக நமது உடலில் வெளியில் இருந்து அந்நிய நச்சுப் பொருட்கள் நுழையும்போது, ரத்தத்தில் கலந்து மூளை, தண்டுவடம் தவிர மற்ற எல்லாப் பாகங்களுக்கும் பரவும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் போகும் ரத்தம் நச்சுப் பொருள்களைக்கொண்டு செல்லாமல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதனை மூளை ரத்த நஞ்சுத்தடை (பிளட் பிரைன் பேரியர் -BBB) என்பர். ஆனால், குழந்தைகளிடம் இந்தப் பிளட் பிரைன் பேரியர் அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது. எனவே, அவர்கள் உடலைச் சென்றடையும் ஈயம் போன்ற வேதி நஞ்சுகள் மூளைக்கு எளிதில் பரவிக் கடும் நரம்புமண்டலப் பாதிப்புகளை உருவாக்குகின்றன.
தாயின் ரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்திய நிலை
ஜார்ஜ் பவுண்டேஷன் என்ற தன்னார்வ நிறுவனம் 1999இல் இந்திய நகர்ப்புறக் குழந்தைகளிடம் ஈயத்தின் பதிப்பு பற்றி மிகப் பெரிய ஆய்வை நடத்தியது. இதில் 51.4 சதவீத நகர்ப்புறக் குழந்தைகளின் ரத்தத்தில் ஆபத்தான அளவில் ஈயம் இருந்தது தெரியவந்தது.
இந்திய அளவில் ஈயப் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக, ஈயம் கலந்த பெயிண்ட்கள் உள்ளன. வாழிடங்களிலும் பணியிடங்களிலும் சுவர்கள், ஃபர்னிச்சர் ஆகியவற்றுக்கு அடிக்கப்பட்டுள்ள பெயிண்ட்களில் இருந்து நம்மையும் குழந்தைகளையும் ஈயம் வந்தடைகிறது. உரிந்த பெயிண்ட்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம், சிறு குழந்தைகளுக்கு உண்டு. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஈயம் கலந்த பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வந்துவிட்டலும் ஈயம் கலந்த பெயிண்ட்கள் தற்போதும் சந்தையில் பரவலாக உள்ளன. டாக்சிக்ஸ் லிங்க் என்ற தேசிய அளவிலான நச்சு ஆய்வு அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய ஆய்வு ஒன்று, இந்தியச் சந்தையில் கிடைக்கும் பெயிண்ட்களில் 90 சதவீதப் பெயிண்ட்கள், தர நிர்ணயத்தைவிட அதிக ஈயத்தைக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பெண்கள் நெற்றியிலும் தலை வகிட்டிலும் இட்டுக்கொள்ளும் குங்குமத்தில் நிறமியாக ஈயம் சேர்க்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் ஈய முலாம் பூசி, சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பரவலாக உள்ளது.
பழக்கவழக்கங்களின் பேரில் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்க நமக்கு உரிமை இல்லை. சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவருவதற்குச் சூழல் சீர்கேடு முக்கியக் காரணம் என்பதை உணர வேண்டிய தருணம் இது. ஈயம் உட்பட நம் உடலையும் குழந்தைகளின் உடலையும் அடையும் வேதி மாசுகள் மனிதச் செயல்பாடுகளால் (ஆந்த்ரபோஜெனிக்) உற்பத்தியாகிவருபவைதான். நம்முடைய விழிப்புணர்வும், அரசின் கட்டுப்பாடுகளும் கடுமையான நடவடிக்கைகளுமே இந்த விஷயத்தில் மாற்றத்தை உருவாக்கும்.
Courtesy : The Hindu
நமது உடலில் 100 மி.லி. லிட்டர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே நம் உடல் ஈய ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டது என்று அர்த்தம். இன்று உலகில் 12 கோடி மக்கள் ஈய ஆபத்துடன் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.
குழந்தைகள் எச்சரிக்கை!
பெரியவர்களைவிடக் குழந்தைகள்தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும் தீவிரமாகவும் ஆளாகிறார்கள். பெரியவர்களின் உடலை அடையும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன. ஆனால், குழந்தைகளின் உடலை அடையும் ஈயத்தில் 50 சதவீதத்தை, அவர்கள் உடல் அப்படியே ஈர்த்துக்கொள்கிறது. உடலும் மூளையும் வேகமாக வளரும் பருவம், குழந்தைப் பருவம். அப்பருவத்தில் அவர்களது உடல் வேதி மாசுகளை ஈர்க்கும் வேகமும் விகிதமும் அதிகமாக உள்ளன.
ஈயத்தால் மாசுபட்ட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுண்ணறிவுத் திறன், பேச்சுத் திறன், கல்வித் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் நாம் காணும் துறுதுறுப்பு, கவனக் குறைபாடு, நடத்தைக் குறைபாடு போன்றவற்றுக்கு அவர்கள் கருவில் இருக்கும்போதோ அல்லது வளரும் பருவத்திலோ ஈயத்தால் பாதிக்கப்படுவதும் காரணம்.
பொதுவாக நமது உடலில் வெளியில் இருந்து அந்நிய நச்சுப் பொருட்கள் நுழையும்போது, ரத்தத்தில் கலந்து மூளை, தண்டுவடம் தவிர மற்ற எல்லாப் பாகங்களுக்கும் பரவும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் போகும் ரத்தம் நச்சுப் பொருள்களைக்கொண்டு செல்லாமல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதனை மூளை ரத்த நஞ்சுத்தடை (பிளட் பிரைன் பேரியர் -BBB) என்பர். ஆனால், குழந்தைகளிடம் இந்தப் பிளட் பிரைன் பேரியர் அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது. எனவே, அவர்கள் உடலைச் சென்றடையும் ஈயம் போன்ற வேதி நஞ்சுகள் மூளைக்கு எளிதில் பரவிக் கடும் நரம்புமண்டலப் பாதிப்புகளை உருவாக்குகின்றன.
தாயின் ரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்திய நிலை
ஜார்ஜ் பவுண்டேஷன் என்ற தன்னார்வ நிறுவனம் 1999இல் இந்திய நகர்ப்புறக் குழந்தைகளிடம் ஈயத்தின் பதிப்பு பற்றி மிகப் பெரிய ஆய்வை நடத்தியது. இதில் 51.4 சதவீத நகர்ப்புறக் குழந்தைகளின் ரத்தத்தில் ஆபத்தான அளவில் ஈயம் இருந்தது தெரியவந்தது.
இந்திய அளவில் ஈயப் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக, ஈயம் கலந்த பெயிண்ட்கள் உள்ளன. வாழிடங்களிலும் பணியிடங்களிலும் சுவர்கள், ஃபர்னிச்சர் ஆகியவற்றுக்கு அடிக்கப்பட்டுள்ள பெயிண்ட்களில் இருந்து நம்மையும் குழந்தைகளையும் ஈயம் வந்தடைகிறது. உரிந்த பெயிண்ட்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம், சிறு குழந்தைகளுக்கு உண்டு. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஈயம் கலந்த பெட்ரோல் பயன்பாடு முடிவுக்கு வந்துவிட்டலும் ஈயம் கலந்த பெயிண்ட்கள் தற்போதும் சந்தையில் பரவலாக உள்ளன. டாக்சிக்ஸ் லிங்க் என்ற தேசிய அளவிலான நச்சு ஆய்வு அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய ஆய்வு ஒன்று, இந்தியச் சந்தையில் கிடைக்கும் பெயிண்ட்களில் 90 சதவீதப் பெயிண்ட்கள், தர நிர்ணயத்தைவிட அதிக ஈயத்தைக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பெண்கள் நெற்றியிலும் தலை வகிட்டிலும் இட்டுக்கொள்ளும் குங்குமத்தில் நிறமியாக ஈயம் சேர்க்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் ஈய முலாம் பூசி, சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பரவலாக உள்ளது.
பழக்கவழக்கங்களின் பேரில் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்க நமக்கு உரிமை இல்லை. சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவருவதற்குச் சூழல் சீர்கேடு முக்கியக் காரணம் என்பதை உணர வேண்டிய தருணம் இது. ஈயம் உட்பட நம் உடலையும் குழந்தைகளின் உடலையும் அடையும் வேதி மாசுகள் மனிதச் செயல்பாடுகளால் (ஆந்த்ரபோஜெனிக்) உற்பத்தியாகிவருபவைதான். நம்முடைய விழிப்புணர்வும், அரசின் கட்டுப்பாடுகளும் கடுமையான நடவடிக்கைகளுமே இந்த விஷயத்தில் மாற்றத்தை உருவாக்கும்.
Courtesy : The Hindu
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|