தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்னும் எத்தனை பலி தேவை?

View previous topic View next topic Go down

இன்னும் எத்தனை பலி தேவை? Empty இன்னும் எத்தனை பலி தேவை?

Post by நாஞ்சில் குமார் Wed Apr 09, 2014 2:28 pm

இன்னும் எத்தனை பலி தேவை?

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளகச்சேரி என்ற கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயதுச் சிறுமி, 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் இறுதியில் மீட்கப்பட்டும்கூட, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்திருக்கிறாள்.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பதும், அதைத் தொடர்ந்து சில நாட்கள் மக்கள் மிகுந்த கோபத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பது ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டது. இந்த விபத்துகளைத் தடுப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம்போல் ஆகிவிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால்கூட, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மிக எளிதானது என்ற விஷயம் நமக்கு விளங்கிவிடும். ஆனாலும் என்ன பயன்?

ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளருடைய தவறுக்கு அவருடையே மகளே பலியாகியிருக்கிறார் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய விவசாய நிலத்துக்காக 500 அடி ஆழத்தில் இந்த ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை அமைத்தவர், தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார். தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள்.

இது போன்ற விபத்துகளைக் குறித்துக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிகளை உத்தரவாகவே பிறப்பித்திருக்கிறது: “ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன், அது தோண்டப்படும் இடம், கிணற்றின் ஆழம், தோண்டுபவர் பெயர், முகவரி ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்துக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காவிட்டால் அதைத் திறந்துபோடாமல் உரிய மூடியைக் கொண்டு மூட வேண்டும், யாரும் அதை நெருங்க முடியாதபடிக்குத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும், பயன்படுத்தாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடிவிட வேண்டும்.”

எல்லா ஊர்களிலும் பயன்படுத்தப்படாத, பயன்படுத்த முடியாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது கட்டாயம் என்பதை மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தார் வேலையைத் தொடங்கும்போதே வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்து குழாய் பதித்தாலும்கூட அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு.

இதில் கடமை தவறும் கிணற்று உரிமையாளர், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ஒப்பந்ததாரர், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு அவரவர் பொறுப்பு, தன்மைக்கேற்ப கடுமையான தண்டனைகளை வழங்குமாறு சட்டம் இயற்றப்படுவது அவசியம்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி.


நன்றி: தி இந்து தமிழ் பதிப்பு
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்னும் எத்தனை பலி தேவை? Empty Re: இன்னும் எத்தனை பலி தேவை?

Post by செந்தில் Wed Apr 09, 2014 6:13 pm

அலட்சியம்தான் காரணம்.

 சோகம் சோகம் சோகம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்னும் எத்தனை பலி தேவை? Empty Re: இன்னும் எத்தனை பலி தேவை?

Post by sreemuky Wed Apr 09, 2014 8:44 pm

இதற்க்கு தனியாக ஒரு இயக்கம் ஆரம்பித்து போராட்டம் நடத்த வேண்டும் என்று தோன்றுகிறது...
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

இன்னும் எத்தனை பலி தேவை? Empty Re: இன்னும் எத்தனை பலி தேவை?

Post by mohaideen Wed Apr 09, 2014 9:49 pm

அரசாங்கம் ஒழுங்கான நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்காது.

அலட்சியம்தான் காரணம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இன்னும் எத்தனை பலி தேவை? Empty Re: இன்னும் எத்தனை பலி தேவை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum