தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜெயமுண்டு பயமில்லை

View previous topic View next topic Go down

ஜெயமுண்டு பயமில்லை Empty ஜெயமுண்டு பயமில்லை

Post by நாஞ்சில் குமார் Thu Apr 10, 2014 3:56 pm

ஜெயமுண்டு பயமில்லை

தெனாலிராமன் பூனை வளர்த்த கதை எல்லோ ருக்கும் தெரியும். பூனைக்குப் பாலை வெறுத் துப்போகச் செய்ய முடியுமா என்ற பந்தயத்துக்காகப் பாலைக் கொதிக்கக் கொதிக்கப் பூனைக்குக் கொடுத்து வந்தார் தெனாலி ராமன். ஒரு கட்டத்தில் பாலைப் பார்த்தாலே பூனை பயந்தோட ஆரம்பித்து விட்டது- அது ஆறியிருந்தாலும்கூட.

இதைத் தான் கண்டிஷனிங்க் (Conditioning) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பாவ்லோவ் (Pavlov) என்ற ரஷ்ய விஞ்ஞானியின் புகழ்பெற்ற ஆராய்ச்சி ஒன்று உண்டு. ஒரு நாய்க்கு உணவு கொடுப்பதற்கு முன்பு ஒரு மணியை அடித்து வந்தார். கொஞ்ச நாள் கழித்து மணியை அடித்ததுமே உணவை எதிர்பார்த்து அதன் வாயில் எச்சிலும், வயிற்றில் உணவைச் செரிக்கும் அமிலமும் சுரக்கத் தொடங்கின.
ஒரு விஷயம் நம் உடலில் சில மாறுதல்களை, உணர்வுகளை ஏற்படுத்தினால், நம் மனம் அதை நினைவில் வைக்கிறது. பின்னர் அதையோ, அதுதொடர்பான விஷயங்களையோ மீண்டும் எதிர்கொள்ளும்போது அதே மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஒருமுறை தலைமை ஆசிரியர் நம்மைத் திட்டினார் என்றால், பின்பு அவரைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு பயம் வருகிறது. அவர் இல்லாவிட்டால்கூட அவரது நாற்காலியைப் பார்த்தாலே வயிற்றுக்குள் ஏதோ செய்கிறது.

படிப்பு, தேர்வு போன்ற விஷயங்களும் அவ்வாறே. தொடர்ந்து நாம் பரீட்சை எழுதும்போது பதற்றமாக இருந்தோம் என்றால், பின்னர் பரீட்சை அறைக்குள் நுழைந்த உடனேயே கேள்வித் தாளைப் பார்க்கும் முன்பே பதற்றம் நம்மைத் தொற்றிக்கொண்டு விடுகிறது. தேர்வு மணி அடித்ததுமே உடல் பதறத் துவங்குகிறது. பதற்றத்தில் எளிமையான கேள்விகளுக்குக்கூட விடை மறந்து போய்விடுகிறது. அதேபோல, படிக்கும்போதெல்லாம் வேண்டா வெறுப்பாக, உற்சாகமின்றிப் படித்தோம் என்றால், ஒருநாள் உற்சாகமான மனநிலையில் படிக்க உட்கார்ந்தால்கூட புத்தகத்தை எடுத்ததுமே தூக்கம் தானாக வந்துவிடும்.

சரி, இதை எப்படிச் சரிசெய்வது? தேர்வு அறையில் இருப்பதுபோல கற்பனை செய்துகொள்ளுங்கள். பிறகு மூச்சை நன்றாக இழுத்துவிட்டு தசைகளைத் தளர்வாக வைத்து ரிலாக்ஸ் செய்யுங்கள். இனிமையான இசை பின்னணியில் ஒலிக்கட்டும். இப்போது அமைதியான மனநிலையில் நன்றாகத் தேர்வு எழுதுவது போலும் எல்லாக் கேள்விகளுக்கும் நன்றாக எழுதுவது போலவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். வீட்டின் ஒரு அறையைக்கூட தேர்வு அறையாக்கி நடித்துப் பாருங்கள். அக்கா தம்பியைக் கண்காணிப்பாளராக்குங்கள். அப்புறம் பாருங்கள்.. ஐஏஎஸ் தேர்வு என்றால்கூட பதற்றம் வராது.

(மன நல மருத்துவர் ராமானுஜம்)

நன்றி: தி இந்து  -  தமிழ் பதிப்பு
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஜெயமுண்டு பயமில்லை Empty Re: ஜெயமுண்டு பயமில்லை

Post by செந்தில் Thu Apr 10, 2014 7:22 pm

அட அப்படியா!

செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum