Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
போலியோ இல்லா உலகு தேவை
Page 1 of 1 • Share
போலியோ இல்லா உலகு தேவை
போலியோ இல்லா உலகு தேவை
“இந்தியா உள்ளிட்ட 11 தென் கிழக்காசிய நாடுகளில் 'போலியோ' எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது” என்று 'உலக சுகாதார நிறுவனம்' சான்றளித்திருக்கிறது. கோடிக் கணக்கான குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கிவந்த இந்த நோய், இப்போது கட்டுப்பட்டிருக்கிறது என்பது சற்றே ஆறுதலைத் தந்தாலும், இது மீண்டும் வராது என்ற நிலைமையை ஏற்படுத்தியே தீர வேண்டும்.
ஏனென்றால், பக்கத்து நாட்டில் இந்த நோய் இருந்தால் இது மீண்டும் பரவக்கூடிய தன்மை படைத்தது. பாகிஸ்தானில் ‘போலியோ’ இன்னமும் முற்றாக ஒழியவில்லை என்பதால், நாம் இரட்டிப்புக் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
அமெரிக்கா, மேற்கு பசிபிக், ஐரோப்பிய நாடுகளில் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு 'போலியோ' ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த நோயை 1988-க்குள் ஒழிக்க வேண்டும் என்று முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, அது முடியாமல் போனதால் 2000-வது ஆண்டுக்குள் ஒழித்துவிட வேண்டும் என்று அடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக 'போலியோ வைரஸ்' பரவுவதைத் தடுக்க வேண்டும், 2018-க்குள் உலகத்திலிருந்தே இந்த நோயை விரட்டிவிட வேண்டும் என்று புதிதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
2013-ல் உலகின் பல நாடுகளில் இந்த நோய்த்தொற்று, அதற்கு முன்பிருந்ததைவிட 82% அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே சமயம் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட நைஜீரியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் புதிதாக நோய் பாதிப்பு ஏற்படுவது முந்தைய ஆண்டைவிட பாதியாகக் குறைந்திருக்கிறது.
பாகிஸ்தானில் முந்தைய ஆண்டைவிட 60% அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் நம்மை அச்சுறுத்துகிறது. பாகிஸ்தானில் இருந்த வைரஸ், நைஜீரியாவிலும் மத்தியக் கிழக்கிலும் தலைகாட்டியிருப்பதாகச் சுயேச்சையான கண்காணிப்பு அமைப்பொன்று உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரிவித்திருக்கிறது.
இந்த வைரஸ் மேலும் பல நாடுகளுக்குப் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால், நெருக்கடிகாலக் கூட்டத்தை ஏப்ரல் மாதம் உலக சுகாதார அமைப்பு கூட்டியிருக்கிறது. இதன்படி, போலியோ உள்ள நாடுகளைச் சேர்ந்த எவரும் பிற நாடுகளுக்குச் செல்லும்போது கண்டிப்பாக போலியோ தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும். இதை இந்தியா ஏற்கெனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
உலகின் எந்தப் பகுதியில் இந்த வைரஸ் காணப்பட்டாலும், நம் நாட்டில் போலியோ ஒழிந்துவிட்டது என்ற நிம்மதியில் எந்த நாடும் இருக்க முடியாது. இன்னமும் சில நாடுகளில் போலியோ வைரஸ் இருப்பதால் இனி இந்த நோய் ஒழியவே ஒழியாதோ என்றும் பீதியடையத் தேவையில்லை.
இந்தியா எடுத்த தீவிர நடவடிக்கைகளால் ‘போலியோ’ ஒழிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், இந்த நோயை ஒழிப்பதற்கான உறுதியையும் வழிமுறைகளையும் எல்லா நாடுகளும் ஏற்றால் இது ஒழிக்கப்பட்டுவிடுவது நிச்சயம்.
தலையங்கம் – தி இந்து – தமிழ் பதிப்பு
“இந்தியா உள்ளிட்ட 11 தென் கிழக்காசிய நாடுகளில் 'போலியோ' எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது” என்று 'உலக சுகாதார நிறுவனம்' சான்றளித்திருக்கிறது. கோடிக் கணக்கான குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கிவந்த இந்த நோய், இப்போது கட்டுப்பட்டிருக்கிறது என்பது சற்றே ஆறுதலைத் தந்தாலும், இது மீண்டும் வராது என்ற நிலைமையை ஏற்படுத்தியே தீர வேண்டும்.
ஏனென்றால், பக்கத்து நாட்டில் இந்த நோய் இருந்தால் இது மீண்டும் பரவக்கூடிய தன்மை படைத்தது. பாகிஸ்தானில் ‘போலியோ’ இன்னமும் முற்றாக ஒழியவில்லை என்பதால், நாம் இரட்டிப்புக் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
அமெரிக்கா, மேற்கு பசிபிக், ஐரோப்பிய நாடுகளில் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு 'போலியோ' ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த நோயை 1988-க்குள் ஒழிக்க வேண்டும் என்று முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, அது முடியாமல் போனதால் 2000-வது ஆண்டுக்குள் ஒழித்துவிட வேண்டும் என்று அடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக 'போலியோ வைரஸ்' பரவுவதைத் தடுக்க வேண்டும், 2018-க்குள் உலகத்திலிருந்தே இந்த நோயை விரட்டிவிட வேண்டும் என்று புதிதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
2013-ல் உலகின் பல நாடுகளில் இந்த நோய்த்தொற்று, அதற்கு முன்பிருந்ததைவிட 82% அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே சமயம் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட நைஜீரியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் புதிதாக நோய் பாதிப்பு ஏற்படுவது முந்தைய ஆண்டைவிட பாதியாகக் குறைந்திருக்கிறது.
பாகிஸ்தானில் முந்தைய ஆண்டைவிட 60% அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் நம்மை அச்சுறுத்துகிறது. பாகிஸ்தானில் இருந்த வைரஸ், நைஜீரியாவிலும் மத்தியக் கிழக்கிலும் தலைகாட்டியிருப்பதாகச் சுயேச்சையான கண்காணிப்பு அமைப்பொன்று உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரிவித்திருக்கிறது.
இந்த வைரஸ் மேலும் பல நாடுகளுக்குப் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால், நெருக்கடிகாலக் கூட்டத்தை ஏப்ரல் மாதம் உலக சுகாதார அமைப்பு கூட்டியிருக்கிறது. இதன்படி, போலியோ உள்ள நாடுகளைச் சேர்ந்த எவரும் பிற நாடுகளுக்குச் செல்லும்போது கண்டிப்பாக போலியோ தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும். இதை இந்தியா ஏற்கெனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
உலகின் எந்தப் பகுதியில் இந்த வைரஸ் காணப்பட்டாலும், நம் நாட்டில் போலியோ ஒழிந்துவிட்டது என்ற நிம்மதியில் எந்த நாடும் இருக்க முடியாது. இன்னமும் சில நாடுகளில் போலியோ வைரஸ் இருப்பதால் இனி இந்த நோய் ஒழியவே ஒழியாதோ என்றும் பீதியடையத் தேவையில்லை.
இந்தியா எடுத்த தீவிர நடவடிக்கைகளால் ‘போலியோ’ ஒழிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், இந்த நோயை ஒழிப்பதற்கான உறுதியையும் வழிமுறைகளையும் எல்லா நாடுகளும் ஏற்றால் இது ஒழிக்கப்பட்டுவிடுவது நிச்சயம்.
தலையங்கம் – தி இந்து – தமிழ் பதிப்பு
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» போலியோ-போலியோ?
» போலியோ மருந்தால் பாதிப்பு.
» புதியதோர் உலகு செய்வோம்!
» எனக்கு, நீயே உலகு...!
» அறிவியல் இன்றி அமையாது உலகு
» போலியோ மருந்தால் பாதிப்பு.
» புதியதோர் உலகு செய்வோம்!
» எனக்கு, நீயே உலகு...!
» அறிவியல் இன்றி அமையாது உலகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|