தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மானுபட்டி அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், திருப்பூர்

View previous topic View next topic Go down

மானுபட்டி அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், திருப்பூர் Empty மானுபட்டி அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், திருப்பூர்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 9:55 am

மானுபட்டி அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், திருப்பூர்

மானுபட்டி அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், திருப்பூர் T_500_1714

மூலவர் : வேங்கடாசலபதி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : புளியமரம்
தீர்த்தம் : கிணறு
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : மானுபட்டி
மாவட்டம் : திருப்பூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

புரட்டாசி பிரம்மோற்சவம், மார்கழி பிரம்மோற்சவம்

தல சிறப்பு:

பக்தர்களே தயாரிக்கும் நிவேதனத்தை பெருமாளுக்குப் படைப்பது இத்தலத்தின் சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில் மானுபட்டி, திருப்பூர்.


பொது தகவல்:


மற்ற கோயில்களுக்கு போவதைப் போல், நினைத்தால் உடனே அங்கு செல்ல முடியாது. புலிகள் நடமாடும் இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடு. எனவே அவர்களின் அனுமதியுடன் சென்று மாலை 5.30 மணிக்குள் வனத்தை விட்டு வெளியேறவிட வேண்டும். பிரதி சனிக்கிழமை மற்றும் மார்கழி மாதம் முழுவதும் கோயில் திறந்திருக்கும் மற்ற நாட்களில் வழிபாடுகள் கிடையாது. மலைமீது எந்த வசதியும் மின்சாரமும் இல்லாத நிலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பிரதான கோயிலின் எதிரே கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். அதன் அருகே தீபஸ்தம்பம் உள்ளது. இதன் முன்பு தாசர்கள் அமர்ந்து பெருமாளை போற்றிப் பாடி சேவிப்பர். கோயிலின் இடதுபுறம் வேணுகோபால சுவாமியின் தனி சன்னிதி உள்ளது.




பிரார்த்தனை

நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைளுக்கு குணமடைய இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நீங்கியதும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், நோய் நீங்கியவுடன் பிறக்கும் முதல் கன்றை இக்கோயிலுக்கு நேர்ந்து விடுவது வழக்கமாக உள்ளது. அப்படி நேர்ந்துவிட பட்ட கால்நடைகள் பெரும் அளவில் கோயிலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தலபெருமை:


இத்தலத்தை தென் திருப்பதி என அழைக்கின்றனர். திருப்பதிக்கும் இத்தலத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இத்தலத்தின் தலவிருட்சம் புளியமரம். ஏழு சிறிய குன்றுகளைக் கடந்துதான் கோயிலை அடைய வேண்டும். அரப்பு தயாரிக்கப் பயன்படும் இலைகளைக் கொண்ட ஊஞ்ச மரங்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.

இத்தலத்தில் சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுவது அவல் பிரசாதமாகும். அவல் துருவிய தேங்காய், கரும்புச் சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றை கலந்து பக்தர்களே தயாரிக்கும் நிவேதனத்தை பெருமாளுக்குப் படைப்பது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். தேங்காய்களைத் துருவ கோயிலேயே உபகரணங்களை வைத்துள்ளனர். பசுமையான வனச் சூழலில் பச்சைமாமலை போல் மேனியரான பெருமாளை மலர் அலங்காரக் கோலத்தில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

புரட்டாசி 5-வது சனிக்கிழமையன்று பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறகிறது. காலையில் முதல் பூஜையின் போது பந்த சேவை எடுத்து சங்கநாதத்துடன் ஆராதனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் பின் கருட வாகனத்தில் உற்சவராக ஸ்ரீநிவாசப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி சென்று திருவீதி உலா வருவார். ஐந்தாவது சனிக்கிழமை பூஜைகள் அனைத்தும் உபயதாரர் பங்களிப்புடன் நடைபெறுகிறது. கோயிலின் அருகே என்றுமே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்றுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரிசி, பருப்பு போன்ற தானியங்களை காணிக்கையாக வழங்குகின்றனர். தாசர்களுக்கு செய்யும் இச்செயல் பெருமாளுக்கே செய்யும் சேவை என்பது பக்தர்களின் நம்பிக்கை!



தல வரலாறு:

ஒரு சமயம் திருப்பதியில் உறையும் கோவிந்தராஜப் பெருமாள் சனி நீராட அரப்பைத் தேடி இந்த வனப்பகுதிக்கு வந்து சென்றதாகச் சொல்கிறார்கள். அன்று அவர் வந்திருந்த இடத்தில் இன்று வேங்கடாசலபதி பெருமாள் வீற்றிருந்து பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள்பாலித்து வருகின்றார். வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்களான பாளையப்பட்டு எத்திலப்பன் வம்சத்தார் கோயிலை ஏற்படுத்தி நிர்வாகம் செய்து வந்தனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பக்தர்களே தயாரிக்கும் நிவேதனத்தை பெருமாளுக்குப் படைப்பது இத்தலத்தின் சிறப்பு.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மானுபட்டி அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், திருப்பூர் Empty Re: மானுபட்டி அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், திருப்பூர்

Post by முரளிராஜா Fri Jun 06, 2014 3:23 am

தலத்தின் சிறப்பை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum