Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இஸ்லாத்தின் பார்வையில்... மன அமைதி
Page 1 of 1 • Share
இஸ்லாத்தின் பார்வையில்... மன அமைதி
இன்றைய அதிநவீன, வேகம் நிறைந்த பரபரப்பான உலகின் பெரும்பாலான நபர்களை ஆட்கொண்டிருக்கிற வியாதி என்ன தெரியுமா?
மனஅழுத்தம், மன இறுக்கம் போன்றவை தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
நம் முன்னோர்கள் அனைவரும் குறைவான வசதிகளுடன் இருந்த போதிலும் நிறைவாகவே வாழ்ந்தார்கள். ஆனால்...? நாமோ இன்று ஏர்கண்டிஷன், குளிர்சாதன பெட்டி, மாவு அரைக்க, துணி துவைக்க எந்திரம் என வசதி வாய்ப்போடு, சகலத்திலும் சவுகரியமாக இருக்கிற போதிலும் மனக்குறைவோடு தான் வாழ்கிறோம்.
கிழிசல்கள் நிறைந்த உடையை மறைக்க 15 இடங்களில் ஒட்டுகள் போட்ட ஆடை அணிந்திருந்தார் உமர் (ரலி) அவர்கள். அவ்வளவு எளிமையாக வாழ்ந்த அவர்களின் கீழ் ரோம் மற்றும் பாரசீக சாம்ராஜ்யங்கள் அடிபணிந்தது எவ்வாறு?.
இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதியாக இருந்த போதும் சவுக்கைச் சுருட்டி அதையே தலையணையாய்த் தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு, மரத்தின் நிழலில் நிம்மதியாய் தூங்கியவர் உமர் (ரலி). ஜனாதிபதியாக இருந்தபோதிலும், எந்த பாதுகாப்பும் இன்றி மரத்தடியில் உறங்கிய அவர்களின் தூக்கத்தை என்ன வென்று சொல்வது? இன்று நாமோ பஞ்சு மெத்தையில் படுத்த போதும் நிம்மதியாய் உறங்கிய பாடில்லை. ஆழ்நிலை தூக்கம் என்பது களவு போன ஒன்றாகி விட்டது இன்று.
இது ஏன்? இதற்கு காரணம் என்ன? இதை சரிசெய்வது எப்படி? இதற்கு எளிதில் தீர்வு காண முடியுமா?
நம்மில் பலர் தொலைத்த இடத்தை விட்டு விட்டு வேறு திசையில் ‘நிம்மதியை’ தேடி அலைகிறோம்.
மனித சரீரம் இரு பாகங்களால் படைக்கப்பட்டது. ஒன்று உடல். இரண்டு உள்ளம். நம்மின் உடல் நலமும், மன மகிழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. இணைபிரியாதவை. ஆனாலும், உடற் சோர்வால் ஏற்படுகிற பாதிப்பை விட உள்ளச் சோர்வால் ஏற்படுகிற பாதிப்புகளின் தாக்கம் அதிகமானதாகும். அதனால் தான் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், ‘உங்களின் உடலில் ஒரு சதைத் துண்டு உண்டு. அது சரியாக இருந்தால் முழு உடலும் சரியாக இருக்கும். அது கெட்டுப் போனால் முழு உடலும் கெட்டுப்போகும். அதுதான் உள்ளம்’ என்றார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
உடல் நோயை ஓரளவு மருந்து மாத்திரைகள் வைத்து குணப்படுத்தி விடலாம். ஆனால் மனநோயை எப்படி குணப்படுத்துவது? மனநோய்க்கான அருட்பெரும் மருந்து ‘மன அமைதியே’. இந்த மனஅமைதியும், நிம்மதியும் இறை வணக்கத்திலும், இறை சிந்தனையிலும் தான் நாம் பெற்றாக வேண்டும். வேறு எங்கும் எதிலும் சாத்தியமல்ல என்பதே இறைவனின் கூற்றாகும்.
‘அவன் தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் ஸகீனத்தை (நிம்மதியை) இறக்கி அருளினான். அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமாக நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக’ என்கிறது திருக்குர்ஆன். (48:4)
‘(இறைவிசுவாசிகள்) எத்தகையோர் என்றால் அவர்கள் (மெய்யாகவே) விசுவாசம் கொண்டார்கள். இன்னும் அல்லாஹ்வை நினைவுகூர்வதைக் கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. (ஏனென்றால்) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீராக’. (திருக்குர்ஆன்: 13–28)
மீனுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ, அதே போன்று வாழ்வில் இறை சிந்தனையோடு இருப்பதும் நம் உள்ளத்திற்கு இன்றியமையாததாகும். நீரை விட்டு மீன் வெளிவந்து விட்டால் மீனின் பரிதாப நிலை நாம் அறிந்தது தான். அதே போன்று தான் இறை சிந்தனை மறந்த உள்ளத்தின் நிலையும் என்கிறார்கள் இமாம்கள்.
இறை வணக்கத்தின் வழியாக கிடைக்கிற நிம்மதியை கோடிகள் கொடுத்தாலும் யாரும் தந்துவிடமுடியாது. காரணம் நிம்மதி என்பது இறைவனின் பெறுதற்கரிய பாக்கியமாகும்.
பெருமானாரும், நபித் தோழர்களும் எவ்வளவு ஏழ்மையில் இருந்த போதிலும் கூட நிம்மதியுடனும், நிறைவான ஆனந்தத்துடனும் இருந்தார்கள் என்பதை சரித்திரத்தில் நாம் வாசிக்க முடிகிறது. ‘இறை வணக்கத்தில் அவர்கள் கொண்டிருந்த தீவிர ஈடுபாடே’ இதன் மூலக்காரணமாகும்.
ஆனால்...? நாமோ காசு, பணத்தை, மாட மாளிகைகளை சாம்பதிக்கிற நோக்கில் ஐங்காலத் தொழுகையை, குர்ஆன் ஓதுவதை, இன்னபிற வணக்க வழிபாடுகளை தொலைத்து விட்டு, நிழலில் நிஜத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்மிடமிருந்து நிம்மதியும் தொலைந்து போனது என்பதில் சந்தேகமில்லை
இன்றைய உலகத்தின் நவீனம் எந்த விதத்திலும் நமக்கு நிம்மதியை தரப்போவதில்லை. மாறாக இஸ்லாம் கற்றுத் தருகிற வாழ்வியலை நாம் கடைப்பிடிப்போம் எனில் நிச்சயம் மன அழுத்தமோ, மன இறுக்கமோ ஏற்படாது என்பதை உணர்வோமாக.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» உறக்கம் என்பது உடலுக்கு அமைதி தரும் இரக்கம் என்பது உள்ளத்துக்கு அமைதி தரும்
» இயேசுவின் பார்வையில் பெண்கள்
» அபு தாபி – ஒரு பறவையின் பார்வையில்
» மதுப்பழக்கம்---மருத்துவர்களின் பார்வையில்.
» ஒளவையின் பார்வையில் நட்பு...!
» இயேசுவின் பார்வையில் பெண்கள்
» அபு தாபி – ஒரு பறவையின் பார்வையில்
» மதுப்பழக்கம்---மருத்துவர்களின் பார்வையில்.
» ஒளவையின் பார்வையில் நட்பு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|