Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தியாகத்தை கற்றுத் தரும் ஈஸ்டர்
Page 1 of 1 • Share
தியாகத்தை கற்றுத் தரும் ஈஸ்டர்
கர்த்தரது அளவற்ற கிருபையினால், நாம் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறோம். அந்தப் பண்டிகை, நமக்கு கற்றுத்தரும் போதனைகள் ஏராளம். இந்த பண்டிகையின் போது மூன்று விஷயங்களை நாம் சிந்திப்போம்.
கன்னி மரியாள் நமது ஆண்டவருக்குத் தாயானவர் என்றாலும், அவர் மன்னன் அகுஸ்துராயனால் பிறப்பிக்கப்பட்டகட்டளைக்கு கீழ்ப்படிந்து நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றார். தேவன், தமது அடியாளுக்காக இந்த கட்டளையை நிறுத்தவில்லை. அச்சமயம் கன்னி மரியாள் நிறைமாத கர்ப்பவதி. ஆகவே, இரண்டு மாதம் கழித்து ராயன் இந்த உத்தரவை போடும்படி தேவன் நியமித்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. கன்னி மரியாளும் தனது உரிமைக்காக வாதாடவில்லை. கோவேறு கழுதையில் 90 மைல் சவாரி செய்ய வேண்டியிருந்தது. தமது குமாரனை பெற்றெடுக்கும் தாயாருக்காக ஒரு ரதத்தைக் கூட தேவன் ஏற்பாடு செய்யவில்லை.
தங்குவதற்கு சத்திரத்தில் கூட இடம் தரவில்லை. மாட்டுத் தொழுவத்தில் தான் இடம் கொடுத்தார். அதற்காகவும் மரியாள் வாதாடவில்லை. நம்மில் அனேகர், ""தேவன் எனக்கு பொருளாதார வசதி தரவில்லை, பதவி கொடுக்கவில்லை,'' என்றெல்லாம் முணுமுணுப்பது உண்டு. ஆனால் நாம் இங்கு காண்பது என்ன?பரிசுத்த மரியாளுக்கு பேறுகால சமயத்தில் உதவி செய்ய ஒருவரும் இல்லை. அந்தத் தாயே, பிள்ளையைப் பெற்றெடுத்து துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தினார்.
நமது வீட்டில் பிள்ளை பிறந்தால் அதை நமது பணக்கார நண்பர்களுக்குச் சொல்லி அனுப்புவோம். பெரிய பதவியில் உள்ளவர்கள், பணக்காரர்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதை பெருமையாக நாலு பேரிடம் சொல்லிக் கொள்வோம். ஆனால், தேவன் தமது ஒரே பேறான குமாரன் பிறந்ததை எளிய மேய்ப்பருக்குச் சொல்லும்படி செய்கிறார். அவர்கள் வந்து பார்த்ததை ஒரு கவுரவமாக நினைத்தார்.மனுக்குலம் ரட்சிக்கப்பட வேண்டுமானால், தேவகுமாரன் தமது மகிமையுள்ள தெய்வீக மேன்மையை தியாகம் செய்து, பூலோகத்தில் மனிதனாகப் பிறக்க வேண்டும். எல்லாரும் காணவும், பழகவும் வேண்டுமானால் எளிய குடும்பத்தில் பிறக்க வேண்டும். மனுக்குலம் துன்பத்தைச் சகிக்கும் தன்மையை, பிறரது அநியாயங்களைப் பொறுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு முன்மாதிரியாக வேண்டும். தேவகுமாரன் இதை ஏற்றுக் கொண்டு தியாகமூர்த்தியாக வெளிப்பட்டார்.
ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் சகோதர சகோதரிகள், உலகம் ரட்சிக்கப்பட இயேசு செய்த தியாகத்தை மனதில் எண்ண வேண்டும். மற்றவர்கள் பாக்கிய நிலையை அடைய, நம்மிடமும் தியாக சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்
கன்னி மரியாள் நமது ஆண்டவருக்குத் தாயானவர் என்றாலும், அவர் மன்னன் அகுஸ்துராயனால் பிறப்பிக்கப்பட்டகட்டளைக்கு கீழ்ப்படிந்து நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றார். தேவன், தமது அடியாளுக்காக இந்த கட்டளையை நிறுத்தவில்லை. அச்சமயம் கன்னி மரியாள் நிறைமாத கர்ப்பவதி. ஆகவே, இரண்டு மாதம் கழித்து ராயன் இந்த உத்தரவை போடும்படி தேவன் நியமித்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. கன்னி மரியாளும் தனது உரிமைக்காக வாதாடவில்லை. கோவேறு கழுதையில் 90 மைல் சவாரி செய்ய வேண்டியிருந்தது. தமது குமாரனை பெற்றெடுக்கும் தாயாருக்காக ஒரு ரதத்தைக் கூட தேவன் ஏற்பாடு செய்யவில்லை.
தங்குவதற்கு சத்திரத்தில் கூட இடம் தரவில்லை. மாட்டுத் தொழுவத்தில் தான் இடம் கொடுத்தார். அதற்காகவும் மரியாள் வாதாடவில்லை. நம்மில் அனேகர், ""தேவன் எனக்கு பொருளாதார வசதி தரவில்லை, பதவி கொடுக்கவில்லை,'' என்றெல்லாம் முணுமுணுப்பது உண்டு. ஆனால் நாம் இங்கு காண்பது என்ன?பரிசுத்த மரியாளுக்கு பேறுகால சமயத்தில் உதவி செய்ய ஒருவரும் இல்லை. அந்தத் தாயே, பிள்ளையைப் பெற்றெடுத்து துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தினார்.
நமது வீட்டில் பிள்ளை பிறந்தால் அதை நமது பணக்கார நண்பர்களுக்குச் சொல்லி அனுப்புவோம். பெரிய பதவியில் உள்ளவர்கள், பணக்காரர்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதை பெருமையாக நாலு பேரிடம் சொல்லிக் கொள்வோம். ஆனால், தேவன் தமது ஒரே பேறான குமாரன் பிறந்ததை எளிய மேய்ப்பருக்குச் சொல்லும்படி செய்கிறார். அவர்கள் வந்து பார்த்ததை ஒரு கவுரவமாக நினைத்தார்.மனுக்குலம் ரட்சிக்கப்பட வேண்டுமானால், தேவகுமாரன் தமது மகிமையுள்ள தெய்வீக மேன்மையை தியாகம் செய்து, பூலோகத்தில் மனிதனாகப் பிறக்க வேண்டும். எல்லாரும் காணவும், பழகவும் வேண்டுமானால் எளிய குடும்பத்தில் பிறக்க வேண்டும். மனுக்குலம் துன்பத்தைச் சகிக்கும் தன்மையை, பிறரது அநியாயங்களைப் பொறுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு முன்மாதிரியாக வேண்டும். தேவகுமாரன் இதை ஏற்றுக் கொண்டு தியாகமூர்த்தியாக வெளிப்பட்டார்.
ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் சகோதர சகோதரிகள், உலகம் ரட்சிக்கப்பட இயேசு செய்த தியாகத்தை மனதில் எண்ண வேண்டும். மற்றவர்கள் பாக்கிய நிலையை அடைய, நம்மிடமும் தியாக சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|