Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
Page 1 of 1 • Share
சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி ஆகியவை எனக்கு தேவை நண்பர்கள் உதவுங்கள்
Re: சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
முரளிராஜா wrote:சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி ஆகியவை எனக்கு தேவை நண்பர்கள் உதவுங்கள்
இன்னும் சற்று நேரத்தில் ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
[You must be registered and logged in to see this link.]
சாயி பாவனி
1. ஜய ஈஷ்வர் ஜய சாயிதயாளா
நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்
2. தத்த திகம்பர ப்ரபூ அவதாரம்
இவ்வுலகமே உந்தன் கைவசம்
3. ப்ரஹ்மாச்யுத சங்கர அவதாரம்
சரணடைந்தோரின் பிராணாதாரம்
4. தரிசனம் தாரீர் ஓ! என் பிரபுவே
போதும் இந்த பிறவிப்பிணியுமே
5. வேப்ப மரத்தினடியில் தோன்றினாய்
கிழிந்த கப்னியே பொன்னாடையாய்
6. பிஷைபை தோளின் அணிகலனாய்
பக்கிர் ரூபத்தில் வலம் வந்தாய்
7. கலியுகத்தில் நீ அவதரித்தாய்
ஏழை எளியோரை உய்வித்தாய்
8. ஷீர்டியில் வாசம் செய்தாய்
ஜனங்களின் மனதை கொள்ளை கொண்டாய்
9. குழலூதும் கண்ணனும் நீயானாய்
வில்லேந்திய ராமனும் நீயானாய்
10. தயை நிரம்பியதே உந்தன் விழிகள்
அமுது சொறிந்ததே உந்தன் மொழிகள்
11. புண்ய தலமானதே துவாரகமாயி
அங்கு வசித்தாரே எங்கள் சாயி
12. பாபாவின் துனி அங்கு எரியும்
நம் பாபங்கள் அங்கு தூசாகும்
13. வழிதவறிய அடியேன் பெருமூடன்
நீயே எம்மை வழிநடத்தும் ஆசான்
14. பல்லாயிரம் பக்தர் உன்னைப் பணிந்தனரே
கருணாமூர்த்தி எனை நீ மறவாதே
15. மூலே சாஸ்திரி என்ற அந்தணஸ்வாமி
உன்னில் கண்டார் குரு கோலப்ஸ்வாமி
16. விஷப்பாம்பு ஷமாவை தீண்டியுமே
விஷமிறக்கி அருளினாய் ஜீவனுமே
17. பிரளய மழையை சொல்லால் தடுத்தாய்
பக்தர்களை முக்தர்கள் செய்தாய்
18. கோதுமையை அரைத்தாய் அரவையிலே
அரவையில் காலராவும் அரைந்ததே
19. உன் திருவடியில் வைத்தேன் என் சிரம்
மனமிரங்கி அருளும் எனக்கு வரம்
20. மனதின் விருப்பம் நிறைவேற்றுவாய்
பிறவிக்கடலின் துன்பம் நீக்குவாய்
21. பக்த பீமாஜியும் நோயால் தவித்தான்
பலவிதமாய் சிகிச்சைகள் எடுத்தான்
22. உந்தன் பவித்ர உதி உண்டான்
ஷய ரோகம் போய் சுகமாய் ஆனான்
23. காகாஜி கண்டார் உன் திவ்யரூபம்
அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம்
24. தாமுவிற்கு அளித்தாய் சந்தானம்
அவர் மனம் பெற்றதே சந்தோஷம்
25. கிருபாநிதி, எனக்கு கிருபை செய்
தீனதயாளா! என்மேல் தயை வை
26. உடல், பொருள், மனம் யாவும் உமக்கே
அளித்திடுவாய் நற்கதி எமக்கே
27. மேகாவும் உன்னை அறியாமலே
முஸ்லீம் பேதம் கொண்டானே
28. உன்னில் காட்டினாய் சிவனையுமே
மேகாவும் அடைந்தான் பரமபதமே
29. எண்ணெய்க்குப் பதிலாய் நீரூற்றியுமே
ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்ககுமே
30. அதனைக் கண்டவர் மெய் மறந்தனரே
கேட்டவர் வியப்பு மாளவில்லையே
31. சாந்த் படீல் ஆழ்ந்தார் கவலையிலே
குதிரையை இருமாதம் காணவில்லையே
32. சாயி, நீ அவனுக்கு இரங்கினாய்
தொலைந்த குதிரையை மீட்டுத் தந்தாய்
33. நம்பிக்கை, பொறுமை மனதில் வை
சாயி, சாயி என்றே தினமும் ஜபம் செய்
34. ஒன்பது வியாழன் விரதம் செய்வாய்
வெற்றி நிச்சயம் உமக்கே என்றாய்
35. தாத்யாவின் உயிர் ஊசலாடியதும்
தந்தாயே நீ உன் ஆயுளையும்
36. தாய் பாயாஜா அன்பாய் தந்த ரொட்டி
தாத்யா உயிரை காத்ததோ ? சாயி
37. பசு, பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய்
அன்பாலேயே எமக்கு அரசனானாய்
38. எல்லோர்பாலும் உன் அருள் நோக்கு
பக்தனுக்களித்தாய் அமுத வாக்கு
39. திருவடி பணிந்த பக்தருக்கே
நீயே தந்தாய் அடைக்கலமே
40. அமுதினும் இனிய உன் வசனங்கள்
போக்கும் பக்தனின் மன விசனங்கள்
41. தூணில் துரும்பில் இருக்கின்றாயே
உன் லீலைகள் அற்புத பாடங்களே
42. உன்னைப் பாட சொற்கள் தேடுகிறேன்
அறிவிலி நான் மடமையில் தவிக்கிறேன்
43. தீனதயாளா, நீ கர்ணனினும் வள்ளல்
உன்னைத் துதித்தால் தொலையும் இன்னல்
44. ஓ ! சாயி ! என்மேல் தயை கொள்வாய்
திருவடிகளில் எம்மை ஏற்றுக் கொள்வாய்
45. காலை, மாலை எவ்வேளையும் நிதமும்
சாயி நாமம் நாவும் பாடிட வேண்டும்
46. திடபக்தியுடன் பாடும் பக்தனுமே
பரமபதம் நிச்சயம் அடைவானே
47. தினமும் காலை. மாலை இருவேளையும்
சாயி புகழ் பாடும் இப்பா வரிகளையும்
48. பக்தியுடன் பாடுபவன் துணையாவார் சாயி
அவரே நம்மைப் பெற்ற தாயி
49. சாரி லீலை உரைக்கும் இப்பதிகங்கள்
செப்பியவை அனைத்தும் ரத்தினங்கள்
50. நம்பிக்கை, பொறுமையுடன் சாயியை துதிப்போம்
தடைகள் நீங்கி வெற்றி அடைவோம்
51. சாயியே அகண்ட சக்தி ஸ்வரூபம்
மனதை வசீகரிக்கும் அழகு ரூபம்
52. தூய மனமுடன் ஸ்மரணை செய் என் மனமே
தினம் ஜபி சத்குரு சாயி நாமமே
அனந்த கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ராஜாதிராஜ யோகிராஜ
பரப்ரஹ்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு
சாயிநாத் மஹராஜ் கீ ஜய்
ஸ்ரீ சத்குரு சாயி நாதார்ப்பணமஸ்து
சுபம் பவது
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
ஸாயிபாபா பாமாலை
ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்
பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
ஞானம், அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்
திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
தேஜஸ், ஸெளம்யம் நிறைந்த உருவமாய்
வெயில், மழை பாராமல் தவமும் செய்தாய்
பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்
உன் தாய், தந்தை, குலம் யாரும் அறியாரே
உலகம் என் வீடு, இறை என் தாய் என்றாயே
சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்
சிலர் அறிந்தனர் நீ விஷ்ணுவின் ரூபம்
தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீதானா?
பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீதானோ?
எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்
பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்
எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்
எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்
தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதைதான்
கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்
மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்
உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்
சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்
திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்
ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்
அருளோடு சேர்ந்து அற்புத அநுபவங்களும் தந்தாய்
மசூதித்தாயாம் துவாரகமாயி! அதில் வசித்து,
பக்தர்களை ரட்சிக்கும் நீ அன்னையன்றோ? சாயி
திருக்கரமளித்த உதி அருமருந்தாகும் - உன்
திருஅருட்பார்வை துயரினைப் போக்கும்
அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும் - உன்
திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்
அடைக்கலம் புகுந்ததோரை அன்புடன் ரட்சித்தாயே - உன்
அற்புத லீலைகள் அமுதே! அமுதினும் இனிய பேரமுதே
நீரூற்றி அகல்தீபங்கள் எரியச் செய்தாய்
ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்
பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,
துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே
தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு
வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு
உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே
அளித்தாய் மாங்கனிகள் ! அடைந்தார் தாமு சந்தானமே
விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே
நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே
சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,
உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே
பக்தருக்குள்ளே இல்லையே ஏற்றத்தாழ்வே
மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே
உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே
உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே
கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே
தாஸ்கணுவின் பிரயாகை தாகம் தணித்தாயே
மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்
பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்
ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே
உண்மையே சொல், நேர்மையாய் வாழ் என்றாயே
ஷீர்டியின் கல், புல் கூட பேறு பெற்றதே
உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே
அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே - உன்
திருவடியை என் சிரஸேந்தி களித்திருப்பேனே
எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே
இக்கணம் உன்னைத்தொழும் பேறு பெற்றேனே
இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே
உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே
உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே
என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே
உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே
உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே
உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,
என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே
உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே
நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே
என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே
நிஜந்தனிலே நிதமும் என் துணை நிற்பாயே
அணுவிலும் அணுவானாய், அகில அண்டமும் நீயானாய்
எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்
என் அன்னை நீ ! தந்தை நீ ! இவ்வுலகையே
மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ
அகிலம் உன் இல்லம், அண்ட சராசரம் உன் ரூபம்
அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்
குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே,
உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்
சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்
சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்
சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே
சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே
நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே
துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே
சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே
சாயி விரதத்தால் சுகம், சாந்தி வீட்டில் நிலவிடுமே
சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,
ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,
சாயி வருவார், இரங்குவார் நம்மிடமே,
துன்பம் களைவார், தருவார் ஆனந்தமே
சாயியே சாச்வதம் ! சாயியே சத்தியம் !
இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்
சாயியே பரமேஸ்வரன், சாயியே பரமாத்மன்
சாயியே பராசக்திரூபன், சாயியே பரந்தாமன்
நம்பிக்கை பக்தி, பொறுமையுடன் சரணடைவோம்
சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்
சாயிநாதருக்கே அர்ப்பணம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அண்ணா
சாய் ஜெபம் கிடைத்ததா அண்ணா
சாய் ஜெபம் கிடைத்ததா அண்ணா
Re: சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
[You must be registered and logged in to see this link.]
இந்த தளத்தில் இன்னும் சில சிறப்பான பதிவுகளை நீங்கள் பெறலாம்
இந்த தளத்தில் இன்னும் சில சிறப்பான பதிவுகளை நீங்கள் பெறலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
கேட்டவுடன் கொடுக்கும் நண்பர் முழுமுதலோன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
சாய் முரளி wrote:மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அண்ணா
சாய் ஜெபம் கிடைத்ததா அண்ணா
சாய் ஜெபம்
ஓம் சாயி நமோ நம:
ஸ்ரீ சாயி நமோ நம
ஜெய ஜெய சாயி நமோ நம:
சத்குரு சாயி நமோ நம
என்பது ஒரு முழுமையான மந்திரம். இந்த நான்கு வரிகளைச் சொல்லித்தான் ஒரு மணியை உருட்ட வேண்டும். இதுவே மந்திர ஜெபம்.
இதைச் சொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நாமத்தைச் சொல்லி மனத்தை உள்முகமாகச்சொல்லி, மணியை வெளிப்பக்கமாக உருட்டுவது நல்லது என்று சொல்வார்கள் பெரியவர்கள்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இந்த தளங்களில் இவரை பற்றி சிறப்பான பதிவுகள் உள்ளன நேரம் கிடைக்கும்போது படித்து பயன் பெற அன்புடன் கேட்டு கொள்கிறேன்
வாய்ப்பு அளித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி+நன்றிகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» IDM தேவை. உதவுங்கள் நண்பர்களே
» விரிவாக்கம் தேவை உதவுங்கள்
» பிளாக்கர் பற்றி உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே
» எனது சாம்சங் மொபைல் reset செய்ய உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே ?
» சாய் பாபாவும் 17 திருடர்களும்
» விரிவாக்கம் தேவை உதவுங்கள்
» பிளாக்கர் பற்றி உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே
» எனது சாம்சங் மொபைல் reset செய்ய உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே ?
» சாய் பாபாவும் 17 திருடர்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|