Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திரு என்ற சொல்
Page 1 of 1 • Share
திரு என்ற சொல்
திரு என்ற சொல்லுக்கு அழகு என்றும், மகாலட்சுமி என்றும் பொருள் கூறுவர். இதை ஒரு மங்களமான சொல்லாக பாவித்து வேறு சில வார்த்தைகளுக்கு முன் இதைச் சேர்ப்பதும் வழக்கம். இந்த, "திரு' என்ற சொல்லை எல்லாருமே உபயோகப்படுத்துவதை காண்கிறோம்.
திருமால், திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், திருவாராதனம், திருப்பாத சேவை...
இப்படி நிறைய உண்டு. பாற்கடலை திருப்பாற்கடல் என்றும், பாயசத்தை திருக்கண்ணமுது என்றும் சொல்வர். திவ்ய தேசங்களை திருப்பதிகள் என்கின்றனர். மொத்தம் நூற்றியெட்டு திருப்பதிகள் .
இவைகளில் நூற்றியேழு திருப்பதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வரலாமாம். நூற்றியெட்டாவது திருப்பதிக்கு போகலாமாம்; ஆனால், திரும்பி வர முடியாதாம். அதுதான் வைகுண்டமாம்.
திரு என்ற சொல்லுக்கு இவர்கள் அவ்வளவு பெருமையும், மரியாதையும் கொடுத் திருக்கின்றனர். "தேவரீர் திருநாமம் என்னவோ?' என்று தான் கேட்பர். நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமத்தை கூட திருமண் என்றுதான் சொல்கின்றனர். திருச்சின்னம், திருமண் காப்பு என்றெல்லாம் உள்ளது. துளசியை திருத்துழாய் என்று சொல்வர்.
"என்ன சார்! திருடன் திருதிருவென்று விழித்தான் என்பதிலும் தான் திரு சேர்ந்திருக்கிறதே! இதிலே என்ன அழகு உள்ளது?' என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு மற்றொருவர், "ஐயா! கண்ணன் வெண்ணை திருடி விட்டு அகப்பட்டுக் கொண்டபோது, கோபிகை அவனை பிடித்துக் கொண்டாள். அப்போது கண்ணன் திரு, திருவென்று விழித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.
"இவன் எல்லாருக்கும் தெரிந்த திருடன். இவனிடம் எல்லா கோபிகைகளுமே அன்பு செலுத்தியுள்ளனர். கண்ணன் வெண்ணை திருடும்போது அகப்பட்டுக் கொள்வோமென்று தெரிந்துதான் திருடினான். அகப்பட்டுக் கொண்டபோது, புன்முறுவலுடன், குறும்புத்தனத்துடன், குறும்புப் பார்வையுடன் விழித்து நின்றான். அந்தப் பார்வையிலே கோபிகைகள் மயங்கி நின்றனர். "ஆகவே, அவன் கண் விழித்து நின்றபோது அந்த விழிகளிலே ஒரு அழகு இருந்தது. அதனால், திரு, திருவென்று விழித்தான் என்று சொல்லப்பட்டது!' என்று விளக்கினாராம்.
ஆனாலும் அவர் விடவில்லை. "சரி! அப்படியானால், "திரு, திரு'வென்று என்பதாக இரண்டு திரு ஏன் போட்டு சொல்ல வேண்டும்?' என்று கேட்டார். "அடடா! இது கூடத் தெரியவில்லையா? இரண்டு கண்கள் உண்டல்லவா. இரண்டுமே விழித்தன. அதனால், இரண்டு திரு போட்டனர். புரிகிறதா?' என்றாராம் அவர்.இப்படியாக, "திரு'வுக்கு பலவிதத்தில் ஏற்றம் சொல்லப்படுகிறது. யாராவது போய் விட்டால் கூட திருநாட்டுக்கு ஏகினார் என்றோ, ஆசாரியான் திருவடியை அடைந்தார் என்றோதான் சொல்வர், எழுதுவர்.
நல்ல விஷயங்களுக்கும், நல்ல வார்த்தைகளுக்கும் இந்த, "திரு' பயன்படுகிறது.
ஆன்மிகம்
திருமால், திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், திருவாராதனம், திருப்பாத சேவை...
இப்படி நிறைய உண்டு. பாற்கடலை திருப்பாற்கடல் என்றும், பாயசத்தை திருக்கண்ணமுது என்றும் சொல்வர். திவ்ய தேசங்களை திருப்பதிகள் என்கின்றனர். மொத்தம் நூற்றியெட்டு திருப்பதிகள் .
இவைகளில் நூற்றியேழு திருப்பதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வரலாமாம். நூற்றியெட்டாவது திருப்பதிக்கு போகலாமாம்; ஆனால், திரும்பி வர முடியாதாம். அதுதான் வைகுண்டமாம்.
திரு என்ற சொல்லுக்கு இவர்கள் அவ்வளவு பெருமையும், மரியாதையும் கொடுத் திருக்கின்றனர். "தேவரீர் திருநாமம் என்னவோ?' என்று தான் கேட்பர். நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமத்தை கூட திருமண் என்றுதான் சொல்கின்றனர். திருச்சின்னம், திருமண் காப்பு என்றெல்லாம் உள்ளது. துளசியை திருத்துழாய் என்று சொல்வர்.
"என்ன சார்! திருடன் திருதிருவென்று விழித்தான் என்பதிலும் தான் திரு சேர்ந்திருக்கிறதே! இதிலே என்ன அழகு உள்ளது?' என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு மற்றொருவர், "ஐயா! கண்ணன் வெண்ணை திருடி விட்டு அகப்பட்டுக் கொண்டபோது, கோபிகை அவனை பிடித்துக் கொண்டாள். அப்போது கண்ணன் திரு, திருவென்று விழித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.
"இவன் எல்லாருக்கும் தெரிந்த திருடன். இவனிடம் எல்லா கோபிகைகளுமே அன்பு செலுத்தியுள்ளனர். கண்ணன் வெண்ணை திருடும்போது அகப்பட்டுக் கொள்வோமென்று தெரிந்துதான் திருடினான். அகப்பட்டுக் கொண்டபோது, புன்முறுவலுடன், குறும்புத்தனத்துடன், குறும்புப் பார்வையுடன் விழித்து நின்றான். அந்தப் பார்வையிலே கோபிகைகள் மயங்கி நின்றனர். "ஆகவே, அவன் கண் விழித்து நின்றபோது அந்த விழிகளிலே ஒரு அழகு இருந்தது. அதனால், திரு, திருவென்று விழித்தான் என்று சொல்லப்பட்டது!' என்று விளக்கினாராம்.
ஆனாலும் அவர் விடவில்லை. "சரி! அப்படியானால், "திரு, திரு'வென்று என்பதாக இரண்டு திரு ஏன் போட்டு சொல்ல வேண்டும்?' என்று கேட்டார். "அடடா! இது கூடத் தெரியவில்லையா? இரண்டு கண்கள் உண்டல்லவா. இரண்டுமே விழித்தன. அதனால், இரண்டு திரு போட்டனர். புரிகிறதா?' என்றாராம் அவர்.இப்படியாக, "திரு'வுக்கு பலவிதத்தில் ஏற்றம் சொல்லப்படுகிறது. யாராவது போய் விட்டால் கூட திருநாட்டுக்கு ஏகினார் என்றோ, ஆசாரியான் திருவடியை அடைந்தார் என்றோதான் சொல்வர், எழுதுவர்.
நல்ல விஷயங்களுக்கும், நல்ல வார்த்தைகளுக்கும் இந்த, "திரு' பயன்படுகிறது.
ஆன்மிகம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கரு முதல் திரு வரை
» சும்மா’ என்ற சொல்
» "டைனோசர்" என்ற சொல் தோற்றம் பெற்றது எவ்வாறு தெரியுமா?.....
» வரலாற்று நிகழ்வுகள் - 10: வங்கி (Bank) என்ற சொல் உருவான விதம்
» திரு.வி.க.,
» சும்மா’ என்ற சொல்
» "டைனோசர்" என்ற சொல் தோற்றம் பெற்றது எவ்வாறு தெரியுமா?.....
» வரலாற்று நிகழ்வுகள் - 10: வங்கி (Bank) என்ற சொல் உருவான விதம்
» திரு.வி.க.,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|