தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஈச்சனாரி அருள்மிகு மகாலெட்சுமி திருக்கோயில், கோயம்புத்தூர்

View previous topic View next topic Go down

ஈச்சனாரி அருள்மிகு மகாலெட்சுமி திருக்கோயில், கோயம்புத்தூர் Empty ஈச்சனாரி அருள்மிகு மகாலெட்சுமி திருக்கோயில், கோயம்புத்தூர்

Post by முழுமுதலோன் Fri May 02, 2014 9:41 am

ஈச்சனாரி அருள்மிகு மகாலெட்சுமி திருக்கோயில், கோயம்புத்தூர்

ஈச்சனாரி அருள்மிகு மகாலெட்சுமி திருக்கோயில், கோயம்புத்தூர் T_500_1696

மூலவர் : மகாலெட்சுமி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : ஈச்சனாரி
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

நவராத்திரி, கவுரி பூஜை

தல சிறப்பு:

கருவறையில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியிரும் அமர்ந்த நிலையில் கிழக்குப் பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மகாலட்சுமி மந்திர், ஈச்சனாரி, கோயம்புத்தூர்.


பொது தகவல்:

கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் ஏழரை அடி ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மாதம்தோறும் மூல நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோயிலின் தென்மேற்கு மூலையில் விநாயகரும், மேற்கில் அனந்தபத்மநாப சுவாமி சந்நதியும் உள்ளன.


பிரார்த்தனை

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறவும், வறுமை நீங்கி செல்வம் கொழிக்கவும் இங்குள்ள மூன்று தேவியரையும் வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

நவராத்திரி ஒன்பது நாட்களும் மலர்கள், காய்கள், கனிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. பாலபிஷேகம், மஞ்சள்பொடி அபிஷேகம் செய்யப்பட்டு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கப்படும்.

தலபெருமை:


இங்குள்ள துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் ஒரே சன்னதியில் கிழக்கு பார்த்தப்படி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். உத்ஸவத் திருமேனிகள் மண்டபத்தின் கீழே உள்ளன. ஸ்ரீமகாலட்சுமியின் முன்னே பிரமாண்டமான ஸ்ரீசக்கரமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நான்கு வேதங்களையும் உணர்த்திடுவதே வேத மண்டபம். கருடத்வஜம் கவசமிட்டுக் கம்பீரமாகக் காணப்படுகிறது. தினமும் கொடிமரத்து சாளரம் வழியே முப்பெருந்தேவியருக்கு சூரிய பூஜை நடைபெறுவதையும் காணலாம். தினமும் மகாமேருவுக்கு சகஸ்ரநாம வழிபாடு உண்டு. தனி நபர்கள் பெயரில் இங்கு அர்ச்சனை செய்வதில்லை. நடைபெறும் பூஜைகள் எல்லாமே உலக நன்மைக்காகவே.

பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தேவியருக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு அம்சம் ஆகும். சித்திரை மாதப் பிறப்பன்று கருவறையில் தண்ணீர் நிரப்பி அதில் தாமரை மலர்கள் மிதக்கவிடும் காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகிறார்கள். ஆடி மாதம் கோயில் விழாக்கோலம் காண்பது அங்கே நிகழும் சாகம்பரி அலங்காரத்தைக் கண்டுகளிக்கவே, மூன்று வாரங்கள் மலர்களாலும், நான்காவது வாரம் காய்களாலும், ஐந்தாவது வாரம் கனிகளாலும் அலங்காரம் நடைபெறும். நவராத்திரி ஒன்பது நாட்களும் அலங்காரம் களை கட்டிவிடும். தீபாவளியன்று ஸ்ரீமகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் முப்பெரும் தேவியருக்கு பாலபிஷேகம், மஞ்சள்பொடி அபிஷேகம் செய்யப்பட்டு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கப்படும்.



தல வரலாறு:

தீபாவளி அன்று புதுக்கணக்கு ஆரம்பிப்பது வட மாநிலங்களில் வழக்கம். அதாவது அன்றுமுதல் கணக்கிடப்படும் புது வருடத்தில் முந்தைய வருடத்தைவிட அதிக லாபமும் வளமும் பெருக வேண்டும் என்று பூஜித்துக் கொண்டு அவ்வாறு கணக்கைத் துவங்குவது சம்பிரதாயம். அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜை வட மாநிலங்களில் மட்டுமின்றி தென்மாநிலங்களிலும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த பூஜையின் முக்கிய நோக்கம் வறுமை நீங்கி வளம் கொழிப்பதும் லட்சுமியின் திருவருளால் செல்வம் கொழிப்பதும் மட்டுமல்ல... பிணி, மூப்பு, துயரம் தொலைந்து இன்பம் பெருகிடவும் இந்தப் பூஜையை நடத்துவது வழக்கம். இந்தப் பூஜையை மேற்கொள்ள இயலாதவர்கள் லட்சுமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்யலாம். வடநாட்டுப் பாணியில் அமைந்துள்ள இக்கோயிலை மகாலட்சுமி மந்திர் என்றே அழைக்கின்றனர். கருவறை விமானமும் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மகாலட்சமி மந்திர் என அழைக்கப்பட்டாலும் முப்பெரும் தேவியரான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும் ஒரே சன்னதியில் கிழக்கு பார்த்தப்படி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியிரும் அமர்ந்த நிலையில் கிழக்குப் பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum