Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அனந்தமங்கலம் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அனந்தமங்கலம் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
அனந்தமங்கலம் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
மூலவர் : வாசுதேவ பெருமாள்
உற்சவர் : ராஜகோபால சுவாமி
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூமா தேவி,(செங்கமல வல்லி) உற்சவர்: பாமா, ருக்மணி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : அனந்தமங்கலம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
அனுமன் ஜெயந்தியும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து அமாவாசை, மற்றும் பெருமாளுக்குரிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
தல சிறப்பு:
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், அனந்தமங்கலம் - நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364 - 289 888, 256 221
பொது தகவல்:
மூலவர் வாசு தேவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி பாமா, ருக்மணியுடன் வீற்றிருக்கின்றனர். தனி சன்னதியில் செங்கமல வல்லி தாயார்.முன்மண்டபத்தின் வடக்கு பகுதியில் தெற்கு நோக்கியபடி தனி சன்னதியில் "திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்' எழுந்தருளியுள்ளார். கோயிலுக்கு வெளியே தனி கோயிலில் சதுர்புஜ ஆஞ்சநேயர் மான் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். எனவே கிரக பாதிப்பு, தோஷம் உள்ளவர்கள் அவை நீங்க அனுமனை பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
இது பெருமாள் கோயிலாக இருந்தாலும் அனுமார் மிகவும் சிறப்புடையவர் என்பதால் இதை அனுமன் தலமாக வணங்கு கின்றனர்.
இங்குள்ள ஆஞ்சநேயரின் வாலில் நவகிரகங்களும் இருப்பதாக கோயில் வரலாறு கூறுகிறது. இதனால் ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியின் போதும் ஆஞ்சநேயருக்கு அந்தக் கிரகத்துக்குண்டான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமனிடம்,""இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள் உயிருடரன் உள்ளனர். அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதற்காக சபதம் செய்துள்ளனர். இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்,'' என்றார்.உடனே ராமன்,"" மகரிஷியே! தாங்கள் கூறியபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார். அதற்கு நாரதர் தன்னுடன் லட்சுமணனை அனுப்பும் படி கேட்டார். "லட்சுமணன் என் நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது' என்றான் ராமன். இதற்கெல்லாம் சரியான நபரான அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமான அனுமனை அனுப்புவோம் என கூறினார். அனுமனுக்கு திருமால் சங்கு, சக்கரத்தை கொடுத்தனுப்பினார். பிரம்மா பிரம்ம கபாலத்தை கெடுத்தார். ருத்ரன் மழுவைத்தந்தார். ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தான். இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தான். கிருஷ்ணனின் வெண்ணை இடது கையில் உள்ளது. கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தான். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார். கடைசியாக அங்கு வந்த சிவன், தனது சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணை (நெற்றிக்கண்) அனுமனுக்கு தந்தார். இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து விட்டு அயோத்தி திரும்பினார்.திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில் தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. இது நாளைடைவில் அனந்த மங்கலம் ஆனது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது.
நன்றி தினமலர்
மூலவர் : வாசுதேவ பெருமாள்
உற்சவர் : ராஜகோபால சுவாமி
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூமா தேவி,(செங்கமல வல்லி) உற்சவர்: பாமா, ருக்மணி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : அனந்தமங்கலம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
அனுமன் ஜெயந்தியும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து அமாவாசை, மற்றும் பெருமாளுக்குரிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
தல சிறப்பு:
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், அனந்தமங்கலம் - நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 4364 - 289 888, 256 221
பொது தகவல்:
மூலவர் வாசு தேவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் அருள்பாலிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி பாமா, ருக்மணியுடன் வீற்றிருக்கின்றனர். தனி சன்னதியில் செங்கமல வல்லி தாயார்.முன்மண்டபத்தின் வடக்கு பகுதியில் தெற்கு நோக்கியபடி தனி சன்னதியில் "திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்' எழுந்தருளியுள்ளார். கோயிலுக்கு வெளியே தனி கோயிலில் சதுர்புஜ ஆஞ்சநேயர் மான் வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். எனவே கிரக பாதிப்பு, தோஷம் உள்ளவர்கள் அவை நீங்க அனுமனை பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
இது பெருமாள் கோயிலாக இருந்தாலும் அனுமார் மிகவும் சிறப்புடையவர் என்பதால் இதை அனுமன் தலமாக வணங்கு கின்றனர்.
இங்குள்ள ஆஞ்சநேயரின் வாலில் நவகிரகங்களும் இருப்பதாக கோயில் வரலாறு கூறுகிறது. இதனால் ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியின் போதும் ஆஞ்சநேயருக்கு அந்தக் கிரகத்துக்குண்டான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமனிடம்,""இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள் உயிருடரன் உள்ளனர். அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதற்காக சபதம் செய்துள்ளனர். இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்,'' என்றார்.உடனே ராமன்,"" மகரிஷியே! தாங்கள் கூறியபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார். அதற்கு நாரதர் தன்னுடன் லட்சுமணனை அனுப்பும் படி கேட்டார். "லட்சுமணன் என் நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது' என்றான் ராமன். இதற்கெல்லாம் சரியான நபரான அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமான அனுமனை அனுப்புவோம் என கூறினார். அனுமனுக்கு திருமால் சங்கு, சக்கரத்தை கொடுத்தனுப்பினார். பிரம்மா பிரம்ம கபாலத்தை கெடுத்தார். ருத்ரன் மழுவைத்தந்தார். ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தான். இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தான். கிருஷ்ணனின் வெண்ணை இடது கையில் உள்ளது. கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தான். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார். கடைசியாக அங்கு வந்த சிவன், தனது சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணை (நெற்றிக்கண்) அனுமனுக்கு தந்தார். இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து விட்டு அயோத்தி திரும்பினார்.திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில் தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. இது நாளைடைவில் அனந்த மங்கலம் ஆனது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் "திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அனந்தமங்கலம் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
இந்த தலத்திற்கு நான் சென்றிருக்கிறேன்.
இந்த தலத்திற்கு நான் சென்றிருக்கிறேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அனந்தமங்கலம் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
அப்புறம் ஏன் இந்த தளத்துக்கு அருகாமையில் உள்ள என்னை பார்க்க வரலைசெந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா.
இந்த தலத்திற்கு நான் சென்றிருக்கிறேன்.
Re: அனந்தமங்கலம் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
இது நல்ல கேள்வி ஒருவேளை நம்ம சிங்கத்திற்கு மூடு வரலையோ என்னவோசெந்தில் wrote:
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
இந்த தலத்திற்கு நான் சென்றிருக்கிறேன்.
அப்புறம் ஏன் இந்த தளத்துக்கு அருகாமையில் உள்ள என்னை பார்க்க வரலை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
» பெரம்பூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
» குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
» பெரம்பூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
» குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
» செம்பொனார்கோவில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|