Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நேர நிர்வாகம்
Page 1 of 1 • Share
நேர நிர்வாகம்
நேர நிர்வாகம் - Time management
நேரம் தான் நம்மிடம் இருக்கும் முக்கியமான மூலதனம். அதை சரியாக நிர்வகித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். நம்மில் பலருமே நம்முடைய சோம்பல் குணம் மற்றும் தள்ளிப்போடும் குணத்திற்கு நேரத்தைத்தான் குற்றம் சாட்டிக்கொண்டுருக்கின்றோம். நம்மில் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது 'எனக்கு நேரமே பத்துவதில்லை' என்று அங்கலாய்த்திருப்போம்.
முதலில் நாம் நமக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
வார நாட்களில்,
தூக்கம் = 8 மணி நேரம்.
அலுவலகம் = 9 மணி நேரம்.
அலுவலகம் போய் வர பயணம் = 2 மணி நேரம்.
காலைக்கடன்கள் = 1 மணி நேரம்
காலை இரவு உணவு உண்பதற்கு = 1 மணி நேரம்.
ஆக மொத்தம் = 21 மணி நேரம்
ஆக வார நாட்களில் நமக்கு 3 மணி நேரம் கிடைக்கிறது.
வாரக்கடைசிகளில்.
தூக்கம் = 10 மணி நேரம்.
காலைக்கடன்கள் = 1 மணி நேரம்.
உணவருந்தல் = 2 மணி நேரம்.
ஆக வாரக்கடைசிகளில் மொத்தம் 9 மணி நேரம் நமக்கு கிடைக்கிறது.
நாம் பெரும்பாலும் நம் கையில் இருக்கும் இந்த முப்பது மணிக்கும் மேலான நேரத்தை சரியாக திட்டமிடாததால், தேவையில்லாத காரியங்களுக்கு உபயோகிக்கிறோம். Time is money என்று மிகச்சரியாகத்தான் சொன்னார்கள். கையில் இருக்கும் பணத்தை திட்டமிடாவிட்டால் எப்படி கரையும் என்பதே தெரியாது. அதே போல் தான் நமது நேரமும்.
நம்மில் எல்லோருக்கும கீழ்க்கண்ட பெரும்பாலானவற்றை செய்ய ஆசை.
1) தியானம்
2) உடற்பயிற்சி
3) நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்கள் படித்தல்.
4) வாகனம், வீடு ஆகியவற்றை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளல். (இதை டைப் பண்ணும் போது தான் பார்க்கிறேன், மானிட்டர், கீ போர்டில் அவ்வளவு அழுக்கு :-( )
5) மனைவி மக்களுடன் கடற்கரை அல்லது பூங்காவிற்கு அழைத்துச்சென்று மனதை இதப்படுத்திக்கொள்ளல்.
6) உறவினர்களிடம் தொடர்பில் இருத்தல்.
7) வீட்டில் தோட்டம் இடல் அல்லது தோட்டத்தை பராமரித்தல்.
பகுதி நேர மேற்படிப்பு படித்தல்.
ஆனால் எவ்வளவு பேர் அவற்றை தொடர்ந்து செய்கிறோம்? பழி போடுவதற்குத்தான் இருக்கிறதே பாவம் 'நேரம்'.
சரி, நேரத்தை எப்படி நிர்வகிப்பது?
நேர நிர்வாகம் என்பது பெரிய ஒன்றும் கடினமான ஒன்றும் இல்லை. எளிதாக சொல்லுவதென்றால் பணத்தின் செலவுக்கு புட்கெட் போடுவது போல் நம்மிடம் இருக்கும் நேரத்துக்கு புட்கெட் போடுவது.
1) ஒவ்வொரு நாளும் அன்றைய நாளுக்காக திட்டமிடுதல்.
2) திட்டமிடுதலை, முடிந்த வரை நிறைவேற்றுதல்.
3) நிறைவேற்ற முடியாதவற்றை ஆராய்தல்.
சிலபேரை பார்த்திருப்பீர்கள் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவுட்புட் அந்த அளவுக்கு இருக்காது. ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 'Don't work hard; work smart' என்று. அதாவது கடினமாக வேலை செய்யாதே, புத்திசாலித்தனமாக வேலை செய். நேர நிர்வாகம் என்பது புத்திசாலித்தனமாக வேலை செய்ய உதவும் ஒரு கருவி.
சில பேர் நான் ஒரு palm top வாங்க வேண்டும் அதன் பிறகு தான் என்னுடைய வேலைகளை நிர்வகிக்க வேண்டும் என்று இதைத்தள்ளிப்போட்டுக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். அது போன்ற உபகரணங்கள் எல்லாம் தேவையே இல்லை. விசிடிங் கார்ட்- அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு காகிதம் இருந்தாலே போதும். அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு டயரி இருந்தால் போதும். எப்போதும் கணினியின் முன்னால் இருப்பவர்கள் outlook அல்லது yahoo போன்றவை கொடுக்கும் வசதிகளை பயன்படுத்தலாம்.
இன்னும் எளிதாக்குவதற்கு நேர நிர்வாகத்தை நாம் இரண்டாக பிரித்துக்கொள்ளலாம்.
1) அலுவலக நேர நிர்வாகம்
2) வீட்டு நேர நிர்வாகம்.
- வீட்டு வேலைகளை முந்தைய நாள் படுக்கப்போகும் முன்பு திட்டமிடுதல் நல்லது.
- அதே போல் முதலில் ஆரம்பிக்கும்போது எளிதான சாதிக்கக்கூடிய அளவிற்கு திட்டமிடலாம்.
- அதே போல் அலுவலகத்திலும் அன்றைய வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பே திட்டமிடுதல் மிகவும் பயனுள்ளது.
- ஒவ்வொரு வேலையையும் முடித்தவுடன் அதை அடித்து விடலாம். அது அடுத்த வேலையை செய்வதற்கான உற்சாகத்தைக்கொடுக்கும்.
- அலுவலகத்தில் அந்த நாளின் முடிவில் எவ்வளவு திட்டமிட்டோம் எவ்வளவு முடித்திருக்கிறோம் என்று சரி பார்த்துக்கொள்வது நல்லது. அதே போல் இரவு படுக்கப்போகும் முன் இதை அலசுதல் நல்லது. இது நமது திட்டமிடும் திறனை வளர்க்கும்.
- நிறைவேற்ற முடியாதவற்றை பற்றி அலசுதல், அதை நிறைவேற்ற என்னவெல்லாம் தேவைபடுகிறது என்று திட்டமிடுதல் மிகவும் அவசியம்.
மேலே சொல்லியவை ஒரு எளிய ஆரம்பத்திற்கான வழி முறைகள். ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமே?
dinamalar
நேரம் தான் நம்மிடம் இருக்கும் முக்கியமான மூலதனம். அதை சரியாக நிர்வகித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். நம்மில் பலருமே நம்முடைய சோம்பல் குணம் மற்றும் தள்ளிப்போடும் குணத்திற்கு நேரத்தைத்தான் குற்றம் சாட்டிக்கொண்டுருக்கின்றோம். நம்மில் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது 'எனக்கு நேரமே பத்துவதில்லை' என்று அங்கலாய்த்திருப்போம்.
முதலில் நாம் நமக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
வார நாட்களில்,
தூக்கம் = 8 மணி நேரம்.
அலுவலகம் = 9 மணி நேரம்.
அலுவலகம் போய் வர பயணம் = 2 மணி நேரம்.
காலைக்கடன்கள் = 1 மணி நேரம்
காலை இரவு உணவு உண்பதற்கு = 1 மணி நேரம்.
ஆக மொத்தம் = 21 மணி நேரம்
ஆக வார நாட்களில் நமக்கு 3 மணி நேரம் கிடைக்கிறது.
வாரக்கடைசிகளில்.
தூக்கம் = 10 மணி நேரம்.
காலைக்கடன்கள் = 1 மணி நேரம்.
உணவருந்தல் = 2 மணி நேரம்.
ஆக வாரக்கடைசிகளில் மொத்தம் 9 மணி நேரம் நமக்கு கிடைக்கிறது.
நாம் பெரும்பாலும் நம் கையில் இருக்கும் இந்த முப்பது மணிக்கும் மேலான நேரத்தை சரியாக திட்டமிடாததால், தேவையில்லாத காரியங்களுக்கு உபயோகிக்கிறோம். Time is money என்று மிகச்சரியாகத்தான் சொன்னார்கள். கையில் இருக்கும் பணத்தை திட்டமிடாவிட்டால் எப்படி கரையும் என்பதே தெரியாது. அதே போல் தான் நமது நேரமும்.
நம்மில் எல்லோருக்கும கீழ்க்கண்ட பெரும்பாலானவற்றை செய்ய ஆசை.
1) தியானம்
2) உடற்பயிற்சி
3) நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்கள் படித்தல்.
4) வாகனம், வீடு ஆகியவற்றை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளல். (இதை டைப் பண்ணும் போது தான் பார்க்கிறேன், மானிட்டர், கீ போர்டில் அவ்வளவு அழுக்கு :-( )
5) மனைவி மக்களுடன் கடற்கரை அல்லது பூங்காவிற்கு அழைத்துச்சென்று மனதை இதப்படுத்திக்கொள்ளல்.
6) உறவினர்களிடம் தொடர்பில் இருத்தல்.
7) வீட்டில் தோட்டம் இடல் அல்லது தோட்டத்தை பராமரித்தல்.
பகுதி நேர மேற்படிப்பு படித்தல்.
ஆனால் எவ்வளவு பேர் அவற்றை தொடர்ந்து செய்கிறோம்? பழி போடுவதற்குத்தான் இருக்கிறதே பாவம் 'நேரம்'.
சரி, நேரத்தை எப்படி நிர்வகிப்பது?
நேர நிர்வாகம் என்பது பெரிய ஒன்றும் கடினமான ஒன்றும் இல்லை. எளிதாக சொல்லுவதென்றால் பணத்தின் செலவுக்கு புட்கெட் போடுவது போல் நம்மிடம் இருக்கும் நேரத்துக்கு புட்கெட் போடுவது.
1) ஒவ்வொரு நாளும் அன்றைய நாளுக்காக திட்டமிடுதல்.
2) திட்டமிடுதலை, முடிந்த வரை நிறைவேற்றுதல்.
3) நிறைவேற்ற முடியாதவற்றை ஆராய்தல்.
சிலபேரை பார்த்திருப்பீர்கள் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவுட்புட் அந்த அளவுக்கு இருக்காது. ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 'Don't work hard; work smart' என்று. அதாவது கடினமாக வேலை செய்யாதே, புத்திசாலித்தனமாக வேலை செய். நேர நிர்வாகம் என்பது புத்திசாலித்தனமாக வேலை செய்ய உதவும் ஒரு கருவி.
சில பேர் நான் ஒரு palm top வாங்க வேண்டும் அதன் பிறகு தான் என்னுடைய வேலைகளை நிர்வகிக்க வேண்டும் என்று இதைத்தள்ளிப்போட்டுக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். அது போன்ற உபகரணங்கள் எல்லாம் தேவையே இல்லை. விசிடிங் கார்ட்- அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு காகிதம் இருந்தாலே போதும். அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு டயரி இருந்தால் போதும். எப்போதும் கணினியின் முன்னால் இருப்பவர்கள் outlook அல்லது yahoo போன்றவை கொடுக்கும் வசதிகளை பயன்படுத்தலாம்.
இன்னும் எளிதாக்குவதற்கு நேர நிர்வாகத்தை நாம் இரண்டாக பிரித்துக்கொள்ளலாம்.
1) அலுவலக நேர நிர்வாகம்
2) வீட்டு நேர நிர்வாகம்.
- வீட்டு வேலைகளை முந்தைய நாள் படுக்கப்போகும் முன்பு திட்டமிடுதல் நல்லது.
- அதே போல் முதலில் ஆரம்பிக்கும்போது எளிதான சாதிக்கக்கூடிய அளவிற்கு திட்டமிடலாம்.
- அதே போல் அலுவலகத்திலும் அன்றைய வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பே திட்டமிடுதல் மிகவும் பயனுள்ளது.
- ஒவ்வொரு வேலையையும் முடித்தவுடன் அதை அடித்து விடலாம். அது அடுத்த வேலையை செய்வதற்கான உற்சாகத்தைக்கொடுக்கும்.
- அலுவலகத்தில் அந்த நாளின் முடிவில் எவ்வளவு திட்டமிட்டோம் எவ்வளவு முடித்திருக்கிறோம் என்று சரி பார்த்துக்கொள்வது நல்லது. அதே போல் இரவு படுக்கப்போகும் முன் இதை அலசுதல் நல்லது. இது நமது திட்டமிடும் திறனை வளர்க்கும்.
- நிறைவேற்ற முடியாதவற்றை பற்றி அலசுதல், அதை நிறைவேற்ற என்னவெல்லாம் தேவைபடுகிறது என்று திட்டமிடுதல் மிகவும் அவசியம்.
மேலே சொல்லியவை ஒரு எளிய ஆரம்பத்திற்கான வழி முறைகள். ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமே?
dinamalar
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நிகரில்லா நிர்வாகம்…
» இந்திய சிறுமிக்கு நியூயார்க் நகர நிர்வாகம் ரூ.1.36 கோடி நஷ்ட ஈடு
» உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:
» இந்திய சிறுமிக்கு நியூயார்க் நகர நிர்வாகம் ரூ.1.36 கோடி நஷ்ட ஈடு
» உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|