தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

View previous topic View next topic Go down

ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி Empty ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Post by நாஞ்சில் குமார் Fri May 09, 2014 8:51 pm


மாறுபடும் வட்டி விகிதத்தில் பெறப்படும் கடன்களை முன் கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் வரவேற்றுள்ளனர். வீட்டுக் கடன்களை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என்று ஏற்கெனவே 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இப்போது வாகனக் கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட எந்த விதமான கடனும் மாறுபடும் வட்டி விகிதத்தில் பெறப்பட்டிருந்தால் அதை முன்கூட்டியே செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற் றுள்ளது.

பொதுவாக இதுபோல் முன்கூட்டியே செலுத்தும் தொகை எவ்வளவோ அதில் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை வங்கிகள் அபராதமாக வசூலிக்கும். இப்போது ரிசர்வ் வங்கி உத்தரவால் இந்த அபராதம் விதிக்கக் கூடாது என்ற நடை முறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

சிட்டி யூனியன் வங்கியில் அபராதம் கிடையாது

வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற கடனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாக செலுத்த விரும்பினால் அதற்கு எவ்வித அபராதமும் வசூலிப்பது கிடையாது என்று சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி தெரிவித்தார். ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய விதிமுறை பிற வங்கிகளுக்குத்தான் பொருந்தும் என்று அவர் கூறினார்.

இப்போது அபராதம் விதிக்கும் வங்கிகளுக்கும் இது ஒரு பிரச்சினையாக இருக்காது. இதனால் அவர்களின் இதர வருமானம் பாதிக்காது. கடன் வாங்கியவர்களில் மிகச்சிலர் மட்டுமே முன்கூட்டியே திரும்ப செலுத்துவார்கள். அதனால் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு வங்கிகளை பாதிக்காது என்றும் தெரிவித்தார்.

நல்ல முடிவு

வாடிக்கையாளர்களின் நலன் கருதி இத்தகைய வரவேற்கத்தக்க உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக சென்ட்ரல் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் எஸ். கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

வாகனக் கடன், தனிநபர் கடன், அடமானம் பேரில் பெறப்படும் கடன் உள்ளிட்டவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே அபராதம் இன்றி செலுத்த இந்த உத்தரவு வகை செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வங்கிகளுக்கு இதனால் மிகப் பெரும் வருவாய் இழப்பு இருக்காது என்றும் அவர் கூறினார்.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி Empty Re: ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 10, 2014 9:29 am

நல்ல முடிவு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி Empty Re: ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Post by sreemuky Sat May 10, 2014 12:38 pm

வங்கிகளுக்கு இதனால் மிகப் பெரும் வருவாய் இழப்பு இருக்காது என்றும் அவர் கூறினார்.

ஆனால் வங்கிகள் தங்களது Asset Liability Management மாற்றி அமைக்க வேண்டிய நிலைமை உண்டாகும். வங்கிகள் கடன் கொடுப்பதில் கிடைக்கும் வட்டி வருவாயை தான் டெபொசிட் செய்பவர்களுக்கு வட்டியாகவும் மற்றும் வங்கி செலவுகளுக்கும் உபயோகப் படுத்திக் கொள்கிறது. நீண்ட நாள் கடன் என்றால் தொடர் வருமானம் கிடைக்கும். குறுகிய காலத்தில் வங்கிகளின் கடன் அடைக்கப் பட்டால் வங்கிகள் தொடர்ச்சியாக கடன் தந்து கொண்டு இருக்கவேண்டும். அப்போதுதான் வருவாய் ஈட்ட முடியும்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி Empty Re: ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Post by செந்தில் Sat May 10, 2014 3:35 pm

அட அப்படியா!
 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி Empty Re: ரிசர்வ் வங்கி உத்தரவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum