தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ

View previous topic View next topic Go down

ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ Empty ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ

Post by நாஞ்சில் குமார் Sun May 18, 2014 10:39 pm

ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ 1269ytc


படகில் துடுப்பு போட்டப்படி புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்குள் நுழைகிறார் சாதனைகளை சொந்தமாக்க நினைக்கும் அந்த ஆஸ்திரேலியப் பெண்.

கரையருகே வந்தபோது படகை நிறுத்துவதற்கு அங்கிருந்தோர் உதவ வந்தபோது, அதை மறுத்துவிட்டுத் தானே படகை தள்ளிக்கொண்டு வந்து கரையில் பத்திரமாக நிறுத்துகிறார்.

கடலில் 50,000 கி.மீ. பயணத்தைத் தனியாக மேற்கொள்ளும் மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சான்ட்ரா ஹெலன் ராப்சன்தான் அவர். ஆசிரியையான அவர் 2011-ல் ஜெர்மனியில் பயணத்தைத் தொடங்கினார். படகை வலித்த களைப்பு உடலில் இருந்தாலும் அவரது பேச்சில் உற்சாகம்.

பயணம் எதற்காக?

கடலில் தன்னந்தனியாக 50,000 கி.மீ. தொலைவு பயணம் செய்யும் இந்த முடிவு ஏன்? “மனசுக்குப் பிடித்த விஷயத்துக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளலாம். எனக்குக் கடல் எப்போதும் பிடிக்கும். அதிலும் தன்னந்தனியாகப் படகில் பயணம் செய்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏற்கெனவே 1932-1939-ல் ஆஸ்கர் ஸ்பெக் என்பவர் ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தனியாகக் கடலில் சாகசப் பயணம் மேற்கொண்டார். 1935-ல் அவர் புதுச்சேரி வந்தார்.

அதை நினைவு படுத்தவே இந்தப் பயணம். ஜெர்மனியின் உம் நகரில் 2011-ம் ஆண்டு மே மாதம் என் பயணத்தைத் தொடங்கினேன். ஐரோப்பிய நாடுகள், மத்திய தரைக்கடல், செங்கடல் வழியாகப் பயணித்தேன். மத்திய கிழக்கு நாடுகள், சிரியா போன்ற பகுதிகளில் பதற்றமான சூழல் உள்ளதால் அங்கெல்லாம் போகவில்லை. ஈரான், பாகிஸ்தான் பகுதியிலும் கடல் பயணம் மேற்கொள்ள அனுமதி தரப்படவில்லை.

முதல் பெண்

மேற்கு இந்தியாவில் குஜராத் பகுதியில் இருந்து மண்டபம் வந்தேன். தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குச் செல்ல அனுமதி கேட்டேன். அனுமதி கிடைக்காததால், விமானம் மூலம் இலங்கை சென்று அங்கிருந்து படகு மூலம் 1,200 கி.மீ தூரத்தை 33 நாட்களில் கடந்து பாக் ஜலசந்தி வழியாக தனுஷ்கோடி வந்தடைந்தேன். இதன் மூலம் பாக் ஜலசந்தியைப் படகு மூலம் தனியாகக் கடந்த முதல் பெண் என்ற பெருமை கிடைத்தது.

பாக் ஜலசந்தியைக் கடப்பது கடினமாக இருந்தது. நாள்தோறும் 40 முதல் 50 கடல் மைல் பயணிப்பேன். கடல் அமைதியாகக் காணப்பட்டால் இரவிலும் பயணம் மேற்கொள்வேன். இல்லையென்றால் சில இடங்களில் தங்கிவிடுவேன்.

முன்பு இதே சாகசப் பயணத்தை மேற்கொண்ட ஆஸ்கர் ஸ்பெக் 7 ஆண்டுகளில் அந்தப் பயணத்தை நிறைவு செய்தார். நான் 5 ஆண்டுகளில், அதாவது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என் சாகசப் பயணத்தை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளேன். அடுத்த 13 மாதங்களில் வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா வழியாகப் பயணத்தை நிறைவு செய்வேன்.

தன்னம்பிக்கை

நான் வசதியானவள் இல்லை. நான் பயணிக்கும் படகு பழைய படகுதான், 32 கிலோ எடையுடையது. நானே அதை முழுமையாகக் கையாள்வேன். பயணத்தின்போது எளிதாக செரிமானம் ஆகும் உணவைக் கொஞ்சமாக சாப்பிடுவேன். பிடித்த விஷயத்தை செய்ய பணம் மட்டும் போதாது. ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் தேவை.

நான் வசதியானவள் இல்லை. நான் பயணிக்கும் படகு பழைய படகுதான், 32 கிலோ எடையுடையது. நானே அதை முழுமையாகக் கையாள்வேன். பயணத்தின்போது எளிதாக செரிமானம் ஆகும் உணவைக் கொஞ்சமாக சாப்பிடுவேன். பிடித்த விஷயத்தை செய்ய பணம் மட்டும் போதாது. ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான் தேவை.

என் சகோதரி குழந்தைகளுடன் இணையத்தில் உரையாடுவது ரொம்பப் பிடிக்கும். கடலில் பார்த்த விஷயங்கள், அனுபவங்களை கதைகளாக அவர்களுக்குச் சொல்வது சந்தோஷமான அனுபவம்.

இந்தியப் பெண்கள்

இந்தியப் பெண்களுக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் இங்குள்ள ஆண்கள், பெண்களை வாயைப் பிளந்து பார்க்கிறார்கள். நான் இந்தியாவுக்கு வந்தபோதும், தமிழகத்துக்கு வந்தபோதும் முதலில் சங்கடமாக இருந்தது. பெண்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகை, பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.

அதேநேரம் அவர்களுக்கு அதிக பொறுப்பும் இருக்கிறது. கடல் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம்-பெண்கள் தன்னந்தனியாக எந்த சவாலையும் சமாளிக்க முடியும் என்பதுதான். மனதில் உறுதியிருந்தால் பிடித்த விஷயத்தில் பெண்களால் தன்னந்தனியாக சாதிக்க முடியும்.”


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ Empty Re: ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ

Post by ஸ்ரீராம் Mon May 19, 2014 10:23 am

வாவ் சூப்பர் பா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ Empty Re: ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ

Post by mohaideen Mon May 19, 2014 1:16 pm

ரொம்ப தைரியம்பா.  சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ Empty Re: ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ

Post by முரளிராஜா Mon May 19, 2014 3:42 pm

சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ Empty Re: ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum