Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பக்தியில் அகம்பாவம் கூடாது!
Page 1 of 1 • Share
பக்தியில் அகம்பாவம் கூடாது!
பகவான், மிகவும் எளிமையானவன், பக்தர்கள் உள்ளன்போடு எவ்வளவு எளிய பொருளை அர்ப்பணம் செய்தாலும், அதை ஏற்று, அருள் புரிகிறான். திருமலை ஸ்ரீனிவாசனிடம் மிகுந்த பக்தி கொண்டு, பல திருப்பணிகளையும், திருவிழாக்களையும் செய்து வந்தான் தொண்டைமான் என்ற அரசன். ஆனால், அவன் மனதில் ஒரு அகம்பாவம் இருந்தது. நாம் தான் இவ்வளவு செலவு செய்து பிரமாதமாக இதை செய்கிறோம் என்ற அகம்பாவம் இருந்தது.
தினமும் ஸ்ரீனிவாசனுக்கு ஸ்வர்ண புஷ்பங்களால் அர்ச்சனை செய்வான் தொண்டைமான். ஒரு சமயம், ஸ்வர்ண புஷ்பம் அர்ச்சனை செய்ய சென்ற போது, பகவான் திருவடிகளில், இவன் முதல் நாள் அர்ச்சித்த ஸ்வர்ண புஷ்பங்கள் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அந்த இடத்தில் மண்ணால் ஆன துளசி தளங்கள் இருக்கக் கண்டான். இது எப்படி வந்தது என்று வேதனைப்பட்டு, "பகவானே… நான் ஏதாவது தவறு செய்தேனா? நான் அர்ச்சித்த ஸ்வர்ண புஷ்பங்களை நீ ஏற்றுக் கொள்ளவில்லையா? இந்த மண்ணால் செய்த துளசி இலைகளை நீ ஏற்றுக் கொண்டாயா?’ என்று அழுதான்.
அப்போது, "அரசே… என்னுடைய பக்தர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அவர்களில் சிலர் ஆடம்பரத்தை விரும்புபவர்; ஒரு சிலர் உண்மையான பக்தியுடன் வழிபடுவர். அவர்களில் மிகவும் ஏழையான பீமன் என்றொரு குயவன், இங்கிருந்து வடக்கே ஒரு யோஜனை தூரத்தில் இருக்கிறான். "என்னைப் போல் உருவம் செய்து வைத்து, மண்ணாலான துளசியால் என்னை பக்தியுடன் அர்ச்சிக்கிறான். அவனால் முடிந்தது அதுதான். அவன் அர்ச்சிக்கும் அந்த மண் துளசி தளங்கள் தான், தினமும் இங்கு என் பாதங்களுக்கு வந்து சேர்கிறது. "அவன் பக்தியோடு அர்ச்சிக்கிறான்; நீ அகம்பாவத்துடன் அர்ச்சிக்கிறாய். அதனால், பீமன் அர்ச்சிக்கும் மண் துளசியை நான் ஏற்றுக் கொண்டேன்…’ என்றார் பகவான்.
இதைக் கேட்ட தொண்டைமான் மிகவும் மனம் வருந்தி, ஸ்ரீனிவாசன் சொன்ன குயவனைத் தேடி, அவன் இருப்பிடம் சென்றான். சக்கரவர்த்தி, தன் வீட்டு வாசலில் வந்து நிற்பதைக் கண்ட குயவனும், அவன் மனைவியும், தாங்கள் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதற்காக அரசன் தண்டிக்க வந்திருக்கிறானோ என்று பயந்து , அரசனின் காலடியில் வந்து விழுந்தனர்.
அதற்குள் ஸ்ரீனிவாசனே அங்கு வந்து விட்டார். அவரைப் பார்த்த குயவனும், அவன் மனைவியும் ஆனந்தக் கூத்தாடி, பகவானை வழிபட்டு, தங்களால் இயன்ற அமுது செய்து படைத்தனர். ஏழை, எளியவர் என்று பாராத பகவானின் கருணையை கண்டு, புகழ்ந்து மகிழ்ந்தனர். பகவான் சிரித்துக் கொண்டே அவர்களுக்கு அருள் செய்தார். உடன் ஒரு தேவ விமானம் வந்து, குயவனையும், அவனது மனைவியையும் அதில் ஏற்றி, விண்ணுலகம் சென்றது.
மிகவும் வருந்தி பகவானை பார்த்து, "பிரபோ… குயவனுக்கு கிடைத்த பாக்கியம் எனக்குக் கிடைக்காதா?’ என்றான் அரசன். பகவானும், அரசனை பார்த்து, "குயவன் அகம்பாவம் இல்லாமல் பக்தியுடன் வழிபட்டதால், இப்போது அவனுக்கு நற்கதி கிடைத்தது. நீ சிறிது அகம்பாவத்துடன் வழி பட்டதால், இந்தப் பிறவியில் உனக்கு நற்கதி கிடைக்காது. "நீ, இந்த சரீரத்தை விட்டு, அடுத்த ஜென்மத்தில் வேறு சரீரம் பெற்று, என்னை வழிபட்டு, என்னை வந்தடைவாய்…’ என்று சொல்லி மறைந்தார். தொண்டைமானும், அந்த ஜென்ம சரீரத்தை விட்டு, அடுத்த பிறவியில் வேறு சரீரத்தில் பகவானை பக்தியுடன் வழிபட்டு, புண்ணியலோகம் அடைந்தான்.
பக்தி இருக்கட்டும்; அகம்பாவம் வேண்டாம் என்பது புரிகிறதா?
நன்றி http://senthilvayal.wordpress.com
தினமும் ஸ்ரீனிவாசனுக்கு ஸ்வர்ண புஷ்பங்களால் அர்ச்சனை செய்வான் தொண்டைமான். ஒரு சமயம், ஸ்வர்ண புஷ்பம் அர்ச்சனை செய்ய சென்ற போது, பகவான் திருவடிகளில், இவன் முதல் நாள் அர்ச்சித்த ஸ்வர்ண புஷ்பங்கள் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அந்த இடத்தில் மண்ணால் ஆன துளசி தளங்கள் இருக்கக் கண்டான். இது எப்படி வந்தது என்று வேதனைப்பட்டு, "பகவானே… நான் ஏதாவது தவறு செய்தேனா? நான் அர்ச்சித்த ஸ்வர்ண புஷ்பங்களை நீ ஏற்றுக் கொள்ளவில்லையா? இந்த மண்ணால் செய்த துளசி இலைகளை நீ ஏற்றுக் கொண்டாயா?’ என்று அழுதான்.
அப்போது, "அரசே… என்னுடைய பக்தர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அவர்களில் சிலர் ஆடம்பரத்தை விரும்புபவர்; ஒரு சிலர் உண்மையான பக்தியுடன் வழிபடுவர். அவர்களில் மிகவும் ஏழையான பீமன் என்றொரு குயவன், இங்கிருந்து வடக்கே ஒரு யோஜனை தூரத்தில் இருக்கிறான். "என்னைப் போல் உருவம் செய்து வைத்து, மண்ணாலான துளசியால் என்னை பக்தியுடன் அர்ச்சிக்கிறான். அவனால் முடிந்தது அதுதான். அவன் அர்ச்சிக்கும் அந்த மண் துளசி தளங்கள் தான், தினமும் இங்கு என் பாதங்களுக்கு வந்து சேர்கிறது. "அவன் பக்தியோடு அர்ச்சிக்கிறான்; நீ அகம்பாவத்துடன் அர்ச்சிக்கிறாய். அதனால், பீமன் அர்ச்சிக்கும் மண் துளசியை நான் ஏற்றுக் கொண்டேன்…’ என்றார் பகவான்.
இதைக் கேட்ட தொண்டைமான் மிகவும் மனம் வருந்தி, ஸ்ரீனிவாசன் சொன்ன குயவனைத் தேடி, அவன் இருப்பிடம் சென்றான். சக்கரவர்த்தி, தன் வீட்டு வாசலில் வந்து நிற்பதைக் கண்ட குயவனும், அவன் மனைவியும், தாங்கள் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதற்காக அரசன் தண்டிக்க வந்திருக்கிறானோ என்று பயந்து , அரசனின் காலடியில் வந்து விழுந்தனர்.
அதற்குள் ஸ்ரீனிவாசனே அங்கு வந்து விட்டார். அவரைப் பார்த்த குயவனும், அவன் மனைவியும் ஆனந்தக் கூத்தாடி, பகவானை வழிபட்டு, தங்களால் இயன்ற அமுது செய்து படைத்தனர். ஏழை, எளியவர் என்று பாராத பகவானின் கருணையை கண்டு, புகழ்ந்து மகிழ்ந்தனர். பகவான் சிரித்துக் கொண்டே அவர்களுக்கு அருள் செய்தார். உடன் ஒரு தேவ விமானம் வந்து, குயவனையும், அவனது மனைவியையும் அதில் ஏற்றி, விண்ணுலகம் சென்றது.
மிகவும் வருந்தி பகவானை பார்த்து, "பிரபோ… குயவனுக்கு கிடைத்த பாக்கியம் எனக்குக் கிடைக்காதா?’ என்றான் அரசன். பகவானும், அரசனை பார்த்து, "குயவன் அகம்பாவம் இல்லாமல் பக்தியுடன் வழிபட்டதால், இப்போது அவனுக்கு நற்கதி கிடைத்தது. நீ சிறிது அகம்பாவத்துடன் வழி பட்டதால், இந்தப் பிறவியில் உனக்கு நற்கதி கிடைக்காது. "நீ, இந்த சரீரத்தை விட்டு, அடுத்த ஜென்மத்தில் வேறு சரீரம் பெற்று, என்னை வழிபட்டு, என்னை வந்தடைவாய்…’ என்று சொல்லி மறைந்தார். தொண்டைமானும், அந்த ஜென்ம சரீரத்தை விட்டு, அடுத்த பிறவியில் வேறு சரீரத்தில் பகவானை பக்தியுடன் வழிபட்டு, புண்ணியலோகம் அடைந்தான்.
பக்தி இருக்கட்டும்; அகம்பாவம் வேண்டாம் என்பது புரிகிறதா?
நன்றி http://senthilvayal.wordpress.com
Re: பக்தியில் அகம்பாவம் கூடாது!
அருமை அருமை....!
நன்றி பகிர்வுக்கு
தான் என்கிற அகம்பவம் இனி வேண்டாம்....
நன்றி பகிர்வுக்கு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அழகாகணுமா... அழ கூடாது...
» அழகாகணுமா... அழ கூடாது...
» ஒருத்தனையும் விட கூடாது....
» எப்படிப் பேசக் கூடாது?
» எப்போது தரிசனம் கூடாது?
» அழகாகணுமா... அழ கூடாது...
» ஒருத்தனையும் விட கூடாது....
» எப்படிப் பேசக் கூடாது?
» எப்போது தரிசனம் கூடாது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum