Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!
Page 1 of 1 • Share
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!
-
--
விவசாயி, உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர்
என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு
இறுதியில் கவிஞராக முத்திரைப்பதித்த
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆறு
ஆண்டுகளில் 58 திரைப்படங்களுக்கு 260
பாடல்களை எழுதித் தம் 29ம் வயதில்
அமரத்துவம் அடைந்தவர்.
-
இவரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர்
சாரோன் "பாட்டாளி படைப்பாளி ஆன வரலாறு'
என்ற தலைப்பில் ஆவணப்படமாக
இயக்கியிருந்தார். அதன் வெளியீட்டு விழா
சமீபத்தில் வாணி மஹாலில் நடைபெற்றது.
-
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வெளியிட, இளையராஜா பெற்றுக்கொண்ட
இந்நிகழ்வில் மன்னர் மன்னனும், கவிஞர்
பொன்னடியானும் பட்டுக்கோட்டையாரை
நினைவு கூர்ந்தனர்.
-
எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது
"இந்த ஆவணப்படத்தை இரண்டு முறை
முழுமையாகப் பார்த்தேன். இன்னொரு
முறையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.
அந்தளவுக்கு அவர் வாழ்க்கையை அழகாக
எடுத்திருக்கிறார் இயக்குநர் சாரோன்.
இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையாருக்குத்
தமிழகத்தில் மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திய
இளையபாரதியைப் பாராட்ட வேண்டும்.
பட்டுக்கோட்டையார் இங்கே படித்தார்.
இங்கே வளர்ந்தார் என்பதுதான் ஆவணப்
படங்களில் பொதுவான அம்சம்.
ஆனால் சாரோன் அதை மாற்றிப் போட்டிருக்கிறார்.
ஒவ்வொரு பாடலும் எவ்வாறு பிறந்தது என்பதைக்
கொண்டு அந்த வரலாற்றைச் சொல்லியிருக்கிறார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எப்படிப்பட்ட
கவிஞன் என்பதற்கு ஒரே ஒரு கருத்தைச் சொன்னால்
போதும் என்று நினைக்கிறேன். கவிஞன் என்பவன்
புதிதாகச் சொல்ல வேண்டும். சொற்சிக்கனத்தோடு
சொல்ல வேண்டும். அவன்தான் கவிஞன்.
-
"இருட்டு' என்பதை "குறைந்த வெளிச்சம்' என்கிறான்
பாரதி. ஓளிமயமான பாரதிக்கு ஏது இருட்டு,
-
தஞ்சாவூர் ஆற்றில் காவிரி ஓடிய காலம். அதைக்
கல்யாணசுந்தரம் எழுதுவதைப் பாருங்கள்.
சூழ்நிலை இதுதான். காவிரிக் கரையோரம் நாயகியும்
நாயகனும் பாதத்தைக் கீழே வைத்து நிற்கிறார்கள்.
அங்கே பாதம் மட்டுமே நனைகிற அளவுக்குத்தான்
தண்ணீர் இருக்கிறது. "பாதம் மட்டுமே நனைகிற
அளவு தண்ணீர்' என்று சொல்லக்கூடாது. அப்படிச்
சொன்னால் அவன் கவிஞன் இல்லை. இதை எப்படிச்
சொல்ல வேண்டும்? பட்டுக்கோட்டையார்
சொல்கிறார்:
"காவிரிக்கரை ஓரத்திலே பாதம் பதுங்கும்
ஈரத்திலே' இதுமாதிரி நூறு சொல்லலாம்
கல்யாண சுந்தரத்தின் சொல் நயத்தைப் பற்றி'
என்றார்.
-
சிறப்புரையாற்றிய வெ. இறையன்பு, "யார்
பாவப்பட்டவர்களாக இருக்கிறார்களோ, யார்
புறக்கணிக்கப்படுகிறார்களோ, யார்
வியர்வையைச் சிந்துகிறார்களோ, யார் காலம்
எல்லாம் துயரமடைகிறார்களோ அவர்களுடைய
வலிமைப் போக்குவதற்காகப் பாடல்களை
எழுதியவர்தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம். இந்த ஆவணப்படத்திலே
ஒரு முக்கியமான காட்சியைப் பதிவு
செய்திருக்கிறார்கள். "கண்ணின் மணிகள்'
நாடகத்தில் பட்டுக்கோட்டையார் காவலராக
நடிக்கிறபோது ஒரு காட்சியில் ஏழை
விவசாயிகளை அடிக்கவேண்டிய சூழல்
ஏற்படுகிறது.
அப்போது அவர்களை அடிக்காமல் "விவசாயிகளை
எப்படி அடிப்பது' என்று சொல்லி மறுத்தவர்
கல்யாணசுந்தரம். நிறைய பேர்
ஸ்விட்சுவேஷனுக்காகப் பாடல் எழுதுவார்கள்
ஆனால் பட்டுக்கோட்டையார் ஸ்விட்சுவேஷனை
மாற்றுவதற்காகப் பாட்டு எழுதினார்' என்றார்.
-
இறுதியாகப் பேசிய இசைஞானி இளையராஜா,
"பட்டுக்கோட்டையார் பாடலில் உள்ள நடை,
மொழி, சிந்தனை, நீரோடையைப் போன்ற
சொல்லோட்டம் திரைப் பாடல் துறையில்
அவருக்கான இடம் இன்னும் காலியாகத்தான்
இருக்கிறது' என்றார்.
-
---------------------------
- பொன்ஜி (கல்கி)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சோறு கண்ட இடம் சொர்க்கம், திண்ணை கண்ட இடம் தூக்கம் ...
» கின்னசில் இடம் பெற முயற்சி!
» மரமிருந்த இடம்!
» இது உங்கள் இடம்..!
» இடம் மாறிய சனி
» கின்னசில் இடம் பெற முயற்சி!
» மரமிருந்த இடம்!
» இது உங்கள் இடம்..!
» இடம் மாறிய சனி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|