Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள்
Page 1 of 1 • Share
கர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள்
‘‘பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் முன்னேற்பாட்டு முயற்சியாகத்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்யப்படும் பரிசோதனை முடிவுகளின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், எல்லா புறக்கணிப்பையும் சந்திப்பது பெண்கள்தான்" என்று புதிய பார்வையை முன்வைக்கிறார் டாக்டர் ஷியாமளா நடராஜன்.
ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் `மக்கள் நலம்’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர் ஷியாமளா. சமூகத்துக்குப் பயனளிக்கும் பல விஷயங்கள் அந்த ஆய்வில் இருந்தாலும், கர்ப்பிணிகளுக்குச் செய்யப்படும் எச்.ஐ.வி. பரிசோ தனைகள் குறித்த அவருடைய பார்வை அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செய்தவர். `சவுத் இந்தியா எயிட்ஸ் ஆக் ஷன் புரோக்ராம்’ என்னும் தன்னார்வ அமைப்பை நிறுவி அதன் மூலம் பாலியல் தொழிலாளர்கள், பார்வைத் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள், ஒரு பால் ஈர்ப்புள்ளவர்கள் ஆகியோருக்கு எச்.ஐ.வி. விழிப்புணர்வை அளித்து வருபவர் ஷியாமளா. தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2006-ம் ஆண்டு பெற்றார்.
அவசிய பரிசோதனைகள்
"கருத்தரித்த பெண்களுக்குக் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பின் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப் படுவார்கள். ரத்தத்திலுள்ள கொழுப்புச் சத்து, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற எளிய பரிசோதனைகளில் தொடங்கி எச்.ஐ.வி. பரிசோதனையும் கட்டாயம் செய்ய வேண்டும்.
இதன்மூலம், கர்ப்ப காலத்திலேயே தாய்க்கு ஏதாவது நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அது குழந்தையைப் பாதிக்காமல் தடுக்க மருத்துவ உதவி அளிக்கப்படும். மருத்துவப் பரிசோதனையின்போது தாயின் ரத்தத்தில் ஏதாவது நோய்த் தொற்றுக் கிருமிகளோ அல்லது எச்.ஐ.வி. கிருமிகளோ இருப்பது கண்டறியப் பட்டால் அது குழந்தைக்குப் பரவாமல் தடுக்க வழிவகை செய்யப்படும்.
பெண்களுக்குப் பாதிப்பு
ஆனால், இதன் இன்னொரு பக்கத்தில் இப்படிப்பட்ட பரிசோதனையின்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள் மட்டுமே. மருத்துவச் சோதனையின் முடிவில் எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறது எனத் தெரியவரும்போது, அப்பெண்ணின் எதிர்காலம் வேதனை அளிக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. அதற்கடுத்து எல்லா புறக்கணிப்பையும் வாழ்நாள் முழுக்க அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையும் இந்திய அரசும் கொடுத்திருக்கும் அறிக்கையில், பெண்ணின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டபின் பின்வரும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அப்பெண்ணிடம் எடுத்து விளக்கிக் கூறி, அவள் ஏற்றுக்கொண்ட பிறகே இத்தகைய பரிசோதனைகளைச் செய்ய லாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில் பெண்களுக்கு இத்தகைய பரிசோதனைகளைச் செய்யப்போகிறோம் என்பது சொல்லப்படாமலேயே பல இடங்களில் செய்யப்படுகிறது.
என்னுடைய ஆய்வுக்காகப் பல பெருநகரங் கள், நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், நாட்டின் பல பகுதிப் பெண்களிடம் நான் பேசியதில் தெரிந்துகொண்ட உண்மை இது.
இன்னும் சில கிராமங்களில், கர்ப்பிணிகளுக்கு அரசின் மூலம் கிடைக்கும் `முத்து லட்சுமி கர்ப்பிணி உதவித்தொகை’யைக் குறிப்பிட்டு, இந்தப் பரிசோதனைகளைச் செய்து கொண்டால் தான், இந்த உதவித்தொகை உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லி செய்யப்படுகிறதாம்.
சில நல்ல முடிவுகள்
பரிசோதனையின் முடிவு பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில், கணவன் மூலமாக மனைவிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருக் கக்கூடும் என்பதால், தமிழகத்தில் ஆண்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது என்பதும் கூட்டுமருந்து சிகிச்சை அனைவருக்கும் அளிக்கப்படுகிறது என்பதும் ஆரோக்கியமான விஷயம். நாட்டில் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி பெண்களுக்கு 95 சதவீதம் முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாட்டு முயற்சிதான் இந்தப் பரிசோதனை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்யப்படும் பரிசோதனைகள், பெண்களின் பூரண சம்மதத்தோடு செய்யப்படவேண்டும். அது ஏன் என்பதும் முறையாக விளக்கப்பட வேண்டும். அத்துடன் கணவர்களுக்கும் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை செய்யப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும். பரிசோதனை முடிவுகளின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத்தான் என்னுடைய ஆய்வில் வலியுறுத்தியுள்ளேன்" என்ற ஷியாமளாவின் பேச்சில் பெண்களின் ஆரோக்கியம் குறித்த உண்மையான ஆதங்கம் வெளிப்படுகிறது
நன்றி: தி இந்து
ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் `மக்கள் நலம்’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர் ஷியாமளா. சமூகத்துக்குப் பயனளிக்கும் பல விஷயங்கள் அந்த ஆய்வில் இருந்தாலும், கர்ப்பிணிகளுக்குச் செய்யப்படும் எச்.ஐ.வி. பரிசோ தனைகள் குறித்த அவருடைய பார்வை அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செய்தவர். `சவுத் இந்தியா எயிட்ஸ் ஆக் ஷன் புரோக்ராம்’ என்னும் தன்னார்வ அமைப்பை நிறுவி அதன் மூலம் பாலியல் தொழிலாளர்கள், பார்வைத் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள், ஒரு பால் ஈர்ப்புள்ளவர்கள் ஆகியோருக்கு எச்.ஐ.வி. விழிப்புணர்வை அளித்து வருபவர் ஷியாமளா. தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2006-ம் ஆண்டு பெற்றார்.
அவசிய பரிசோதனைகள்
"கருத்தரித்த பெண்களுக்குக் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பின் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப் படுவார்கள். ரத்தத்திலுள்ள கொழுப்புச் சத்து, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற எளிய பரிசோதனைகளில் தொடங்கி எச்.ஐ.வி. பரிசோதனையும் கட்டாயம் செய்ய வேண்டும்.
இதன்மூலம், கர்ப்ப காலத்திலேயே தாய்க்கு ஏதாவது நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அது குழந்தையைப் பாதிக்காமல் தடுக்க மருத்துவ உதவி அளிக்கப்படும். மருத்துவப் பரிசோதனையின்போது தாயின் ரத்தத்தில் ஏதாவது நோய்த் தொற்றுக் கிருமிகளோ அல்லது எச்.ஐ.வி. கிருமிகளோ இருப்பது கண்டறியப் பட்டால் அது குழந்தைக்குப் பரவாமல் தடுக்க வழிவகை செய்யப்படும்.
பெண்களுக்குப் பாதிப்பு
ஆனால், இதன் இன்னொரு பக்கத்தில் இப்படிப்பட்ட பரிசோதனையின்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள் மட்டுமே. மருத்துவச் சோதனையின் முடிவில் எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறது எனத் தெரியவரும்போது, அப்பெண்ணின் எதிர்காலம் வேதனை அளிக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. அதற்கடுத்து எல்லா புறக்கணிப்பையும் வாழ்நாள் முழுக்க அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையும் இந்திய அரசும் கொடுத்திருக்கும் அறிக்கையில், பெண்ணின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டபின் பின்வரும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அப்பெண்ணிடம் எடுத்து விளக்கிக் கூறி, அவள் ஏற்றுக்கொண்ட பிறகே இத்தகைய பரிசோதனைகளைச் செய்ய லாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில் பெண்களுக்கு இத்தகைய பரிசோதனைகளைச் செய்யப்போகிறோம் என்பது சொல்லப்படாமலேயே பல இடங்களில் செய்யப்படுகிறது.
என்னுடைய ஆய்வுக்காகப் பல பெருநகரங் கள், நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், நாட்டின் பல பகுதிப் பெண்களிடம் நான் பேசியதில் தெரிந்துகொண்ட உண்மை இது.
இன்னும் சில கிராமங்களில், கர்ப்பிணிகளுக்கு அரசின் மூலம் கிடைக்கும் `முத்து லட்சுமி கர்ப்பிணி உதவித்தொகை’யைக் குறிப்பிட்டு, இந்தப் பரிசோதனைகளைச் செய்து கொண்டால் தான், இந்த உதவித்தொகை உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லி செய்யப்படுகிறதாம்.
சில நல்ல முடிவுகள்
பரிசோதனையின் முடிவு பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில், கணவன் மூலமாக மனைவிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருக் கக்கூடும் என்பதால், தமிழகத்தில் ஆண்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது என்பதும் கூட்டுமருந்து சிகிச்சை அனைவருக்கும் அளிக்கப்படுகிறது என்பதும் ஆரோக்கியமான விஷயம். நாட்டில் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி பெண்களுக்கு 95 சதவீதம் முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாட்டு முயற்சிதான் இந்தப் பரிசோதனை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்யப்படும் பரிசோதனைகள், பெண்களின் பூரண சம்மதத்தோடு செய்யப்படவேண்டும். அது ஏன் என்பதும் முறையாக விளக்கப்பட வேண்டும். அத்துடன் கணவர்களுக்கும் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை செய்யப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும். பரிசோதனை முடிவுகளின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத்தான் என்னுடைய ஆய்வில் வலியுறுத்தியுள்ளேன்" என்ற ஷியாமளாவின் பேச்சில் பெண்களின் ஆரோக்கியம் குறித்த உண்மையான ஆதங்கம் வெளிப்படுகிறது
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள்
பயனுள்ள தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!
» SSLC தேர்வு முடிவுகள் 2013
» +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
» சமாதானமான கூட்டு முடிவுகள் எப்போதும் சுகாதாரமானவை....
» இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
» SSLC தேர்வு முடிவுகள் 2013
» +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
» சமாதானமான கூட்டு முடிவுகள் எப்போதும் சுகாதாரமானவை....
» இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|