தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நோயின் ஆதாரம் எது?

View previous topic View next topic Go down

நோயின் ஆதாரம் எது? Empty நோயின் ஆதாரம் எது?

Post by நாஞ்சில் குமார் Tue May 27, 2014 11:03 pm

நோயின் ஆதாரம் எது? 280jima


டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல், கோழி காய்ச்சல், சளி காய்ச்சல், சிக்குன்குனியா காய்ச்சல், மழை பெய்துவிட்டால் வைரஸ் காய்ச்சல், கோடைகாலத்தில் சின்னம்மை, பெரியம்மை, மஞ்சள் காமாலை, ஏன் சர்க்கரை நோய், புற்றுநோய் என்று ஏராளமான நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன.

இந்த மாதிரியான பல்வேறு நோய்களுக்கும் மூலக் காரணம் என்ன? பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லா உயிரினங்களையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமது உடல்தான் நோய்களுக்கு மூலக் காரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா! எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

ரொம்ப சிம்பிள். பத்து பேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டால், யாரோ ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. நமது இந்தியத் திருநாட்டில் மக்கள் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் எல்லா நோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா?

நம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுபட்ட காற்றில், தூசிலும் அடங்கி இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால், அதற்கு நம் உடலே காரணம் இல்லையா?

எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல்தானே நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்!

தானாக இயங்கும் உடல்

இங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்துகொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ, கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர் சுரப்பிகள் பாதுகாப்புப் படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்பு மண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அனுமதியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?

எல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலை களைப் பார்த்துக்கொண்டி ருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ ஒருவர் மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா? அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில்தான் உடல் தன் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்கிறது.

மேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல்தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர்தான், நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச் செயல்களும் செவ்வனே நடைபெற உதவுகிறது. இந்த உயிராற்றல் எப்போது பலவீனம் அடைகிறதோ, அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக் கிறது. அப்போது உடலுக்கு உள்ளும் வெளியிலும் எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைத் தாக்கு கின்றன. உடல் நோயைப் பெறுகிறது.

யார் காரணம்?

ஆக, நம்முடைய உடல் நோயைப் பெறுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்தப் பலவீனம் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைத்துவிடுகிறது. நோய் ஏற்புத் தன்மை அதிகரித்துவிடுகிறது. இதனால் உடலில் எளிதாக மாற்றங்கள் தோன்றுகின்றன. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழு சக்தியோடு இருக்கும் வரை பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி என்று எதைக் கண்டும் நாம் அஞ்ச வேண்டியதில்லை.

அது மட்டுமில்லை. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஆகப் பெரிய, சிக்கலான செல்களின் கூட்டமைப்பு கொண்ட படைப்பு மனிதன்தான். அதனால்தான் மனிதன் உலகை ஆண்டுகொண்டிருக்கிறான். ஆனால் பாக்டீரியாக்களோ, வைரஸ்களோ வெறும் ஒரு செல் உயிரிகள்தான். சிக்கலான வளர்ச்சியடைந்த செல்களின் அமைப்பு கொண்ட மனிதனின் உயிரை, அவற்றால் பறிக்க முடியாது. மேலும் சோதனைச் சாலையில் இந்தப் பாக்டீரியாக்களுக்கும் வைரஸ்களுக்கும் இறந்த செல்களையே உணவாகக் கொடுத்து வளர்க்கிறார்கள். இறந்த செல்களில் மட்டுமே இவை செழித்து வளர முடியும்.

உயிருள்ள மனித செல்கள் இந்தப் பாக்டீரியா, வைரஸ் களைவிட பரிணாம வளர்ச்சியில் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பவை என் பதைக் கவனத்தில் கொண்டோமானால் நம்முடைய நோய்களுக்குக் காரணம் பாக்டீரியா, வைரஸ் என்பதை எளிதில் ஒத்துக்கொள்ள முடியாது. நம்முடைய உயிராற்றல் பலவீனமடையும் போதே உடலின் நோய் ஏற்புத் தன்மை அதிகரிக்கிறது. அப்போது பாக்டீரியா, வைரஸ் மட்டுமல்ல... தூசு, மாசு, நீர், வெப்பம், குளிர் போன்ற எல்லாம் உடலைப் பாதித்து நோய்களை உருவாக்கலாம். உயிராற்றலின் பலமே, உடலின் பலம்.

உதயசங்கர்- கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: udhayasankar.k62@gmail.com


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நோயின் ஆதாரம் எது? Empty Re: நோயின் ஆதாரம் எது?

Post by ஸ்ரீராம் Wed May 28, 2014 1:08 pm

மிகவும் பயனுள்ள தகவல். சூப்பர்
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நோயின் ஆதாரம் எது? Empty Re: நோயின் ஆதாரம் எது?

Post by kanmani singh Wed May 28, 2014 1:23 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

நோயின் ஆதாரம் எது? Empty Re: நோயின் ஆதாரம் எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum