Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீனிப்புண்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
சீனிப்புண்!
சீனிப்புண்!
தசாப்தங்களாக
நானும் சர்க்கரை வியாதியும்
இணைபிரியாத நண்பர்கள்
உள்ளுக்குள் எதிரியாயிருந்தும்
கைவிடாத நட்பு!
ஊசியும் குளிசையும்
உருப்படியாக எதையுமே
சாதிக்கவில்லை
ஏசியும் பேசியும்
என்னை என்னாலேயே
திருத்தவும் முடியாமல் போயிட்டு!
வைபவங்களில் அதிதியாகினும்
அதிகம் எதையும் உண்ண முடியல
இனிப்புகளை என் கண்கள்
ஈயாகவே மொய்க்கும்
கைகள் எடுக்க எட்டினாலும்
மெய்யுணர்வு தட்டிப்பறிக்கும்!
இப்படித்தான் வாயக்கட்டி வயிற்றைக்கட்டி
எந்நாளும் வாழ்ந்தாலும்
எப்படியோ சீனி கூடித்தான் போகிறது!
உணர்வு மரத்த காலில்
எரிஞ்ச தணல் பட்டதோ
நெருஞ்சி முள் தைத்ததோ
தெரிஞ்சிக்க முடியல
இனி தெரிஞ்சாலும் பலனில்லை
வந்தது வந்ததுதான்!
குருவிச்சம் பழம்போல
பளபளப்பா செக்கச்செவேலென்று
சிவந்தகாலில் சிறு வீக்கமும் வந்தது
பெரிசா எடுக்கல நான்
கரிசனையும் காட்டல
லேசான கணகணப்பு
உடம்பில் கொஞ்சம் இளஞ்சூடு
பேசாம இருந்திட்டேன்
ரெண்டு பனடோலை போட்டுக்கிட்டு
நாட்கள் நடந்தன
இல்லை இல்லை வேகமாக ஓடின
நீலகண்டன் நிறம்போல
நிறம்மாறி வந்தது
இதுவரை கண்டுகொள்ளா மனம்
இதுகண்டு
பயந்து திடுக்கிட்டு விழித்தது!
அதுக்கிடையில் அது புரையோடி
போயிருக்க பொங்கி வழிந்தது
பாதம் புண்ணாகி
பொதும்பி இருந்தது!
வெதும்பின மாம்பிஞ்சாய்
அழுகி வடிந்தது
வெள்ளையுடன் செந்நிறமாய்
வெடுக்குடனே ஏதோ ஒழுகி வழிந்தது!
எனேக்கே சகிக்கல
அப்படி ஒரு வெடுக்கு
என் கண்ணே அதைப்
பார்க்கவும் விரும்பல!
இப்படி இருக்கையில
பெற்றபிள்ளை நெருங்கிடுமா
இல்ல உற்றார்தான்
தொடுவாரா?
கட்டியவர் மட்டும்தான்
தொட்டுத்தூக்குகிறார்
என்னை கட்டிக்கிட்டு அழுகின்றார்
பட்டுக்கிட்டு இழுக்கின்றார்!
ஆனால்
பனங்கொசுவும் பழ ஈயும்
கூப்பிடாம வந்திருந்து
சிற்றுண்டி உண்டு
புண்ணுடன் சிரித்திப்பேசிக்கிட்டு
கட்டிப்புரள்கிறது
துரத்தினாலும் போகாமல்
எனைச்சுற்றி வட்டமிட்டு பறக்கிறது!
எல்லார்க்கும் நான் கசக்க
இதுக்குமட்டும் இனிக்குதாக்கும்!
தலைவிதியை வைதுகொண்டு
விசிறுகிறேன்
பனையோலை விசிறியினால்!
மு.இ..உமர் அலி
நன்றி : முகநூல்
தசாப்தங்களாக
நானும் சர்க்கரை வியாதியும்
இணைபிரியாத நண்பர்கள்
உள்ளுக்குள் எதிரியாயிருந்தும்
கைவிடாத நட்பு!
ஊசியும் குளிசையும்
உருப்படியாக எதையுமே
சாதிக்கவில்லை
ஏசியும் பேசியும்
என்னை என்னாலேயே
திருத்தவும் முடியாமல் போயிட்டு!
வைபவங்களில் அதிதியாகினும்
அதிகம் எதையும் உண்ண முடியல
இனிப்புகளை என் கண்கள்
ஈயாகவே மொய்க்கும்
கைகள் எடுக்க எட்டினாலும்
மெய்யுணர்வு தட்டிப்பறிக்கும்!
இப்படித்தான் வாயக்கட்டி வயிற்றைக்கட்டி
எந்நாளும் வாழ்ந்தாலும்
எப்படியோ சீனி கூடித்தான் போகிறது!
உணர்வு மரத்த காலில்
எரிஞ்ச தணல் பட்டதோ
நெருஞ்சி முள் தைத்ததோ
தெரிஞ்சிக்க முடியல
இனி தெரிஞ்சாலும் பலனில்லை
வந்தது வந்ததுதான்!
குருவிச்சம் பழம்போல
பளபளப்பா செக்கச்செவேலென்று
சிவந்தகாலில் சிறு வீக்கமும் வந்தது
பெரிசா எடுக்கல நான்
கரிசனையும் காட்டல
லேசான கணகணப்பு
உடம்பில் கொஞ்சம் இளஞ்சூடு
பேசாம இருந்திட்டேன்
ரெண்டு பனடோலை போட்டுக்கிட்டு
நாட்கள் நடந்தன
இல்லை இல்லை வேகமாக ஓடின
நீலகண்டன் நிறம்போல
நிறம்மாறி வந்தது
இதுவரை கண்டுகொள்ளா மனம்
இதுகண்டு
பயந்து திடுக்கிட்டு விழித்தது!
அதுக்கிடையில் அது புரையோடி
போயிருக்க பொங்கி வழிந்தது
பாதம் புண்ணாகி
பொதும்பி இருந்தது!
வெதும்பின மாம்பிஞ்சாய்
அழுகி வடிந்தது
வெள்ளையுடன் செந்நிறமாய்
வெடுக்குடனே ஏதோ ஒழுகி வழிந்தது!
எனேக்கே சகிக்கல
அப்படி ஒரு வெடுக்கு
என் கண்ணே அதைப்
பார்க்கவும் விரும்பல!
இப்படி இருக்கையில
பெற்றபிள்ளை நெருங்கிடுமா
இல்ல உற்றார்தான்
தொடுவாரா?
கட்டியவர் மட்டும்தான்
தொட்டுத்தூக்குகிறார்
என்னை கட்டிக்கிட்டு அழுகின்றார்
பட்டுக்கிட்டு இழுக்கின்றார்!
ஆனால்
பனங்கொசுவும் பழ ஈயும்
கூப்பிடாம வந்திருந்து
சிற்றுண்டி உண்டு
புண்ணுடன் சிரித்திப்பேசிக்கிட்டு
கட்டிப்புரள்கிறது
துரத்தினாலும் போகாமல்
எனைச்சுற்றி வட்டமிட்டு பறக்கிறது!
எல்லார்க்கும் நான் கசக்க
இதுக்குமட்டும் இனிக்குதாக்கும்!
தலைவிதியை வைதுகொண்டு
விசிறுகிறேன்
பனையோலை விசிறியினால்!
மு.இ..உமர் அலி
நன்றி : முகநூல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|