தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டில் தொடரும் ஜாதி அவலம்

View previous topic View next topic Go down

நாட்டில் தொடரும் ஜாதி அவலம் Empty நாட்டில் தொடரும் ஜாதி அவலம்

Post by mohaideen Sat Jun 21, 2014 12:04 pm

பெல்லாரி: தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு முடிவெட்டிவிட்ட சலூன் கடைகளில் நாங்கள் முடிவெட்ட மாட்டோம் என்று பிற ஜாதிக்காரர்கள் அடாவடி செய்யும் சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசயத்தில், அரசு, தலையிட்டு பாதிக்கப்பட்ட சலூன் கடைக்காரர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளது.
 
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் தலூர் கிராமத்தில் மொத்தம் ஐந்து சலூன் கடைகள் உள்ளன. இந்த சலூன் கடைகளில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடிதிருத்துவதோ, ஷேவிங் செய்வதோ கூடாது என்று பிற ஜாதிக்காரர்கள் கறாராக கூறியுள்ளார்கள். அந்த கிராமத்தை பொறுத்தளவில் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையில் குறைவு என்பதால் பிற ஜாதிக்காரர்கள் சொல்வதை கேட்டுக்கொள்ள சலூன்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
 
 
இந்நிலையில் முடிவெட்ட வந்த தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு, முடிவெட்ட முடியாது என்று, முடிதிருத்தும் தொழிலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். பிற சலூன்களிலும் இதே பதில் வந்துள்ளது. இதனால் கோபமடைந்த தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும், சலூன் கடை வைத்திருப்போருக்கும் நடுவே மோதல் வெடித்துள்ளது.
 
முடிவெட்டினால் பிற ஜாதிக்காரர்களும், வெட்டாவிட்டால் தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் சண்டைக்கு வருவதால், எதற்கு வம்பு என்று அந்த கிராமத்தின் ஐந்து சலூன் கடைகளும் ஐந்து நாட்களாக மூடப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள் அக்கிராமத்துக்கு சென்று சலூன் கடைக்காரர்களை கடை திறக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். தலித்துகளுக்கு முடிதிருத்துமாறும் உத்தரவிட்டனர். இதையடுத்து சலூன்களில் பழையபடி முடிதிருத்தம் செய்யப்பட ஆரம்பிக்கப்பட்டது.
 
இதனால் கோபமடைந்துள்ள பிற ஜாதிக்காரர்கள் நாலாயிரம்பேரும், தங்கள் ஊரிலுள்ள சலூன்களில் முடிவெட்டுவதில்லை என்று தீர்மானித்துவிட்டனராம். இக்கிராமத்தில் 100 தாழ்த்தப்பட்டோர் மட்டுமே உள்ள நிலையில், சலூன்கடைகளின் பெருவாரியான வாடிக்கையாளர்கள் பிற ஜாதியினர்தான். பிறஜாதியினரின் புறக்கணிப்பால், சலூன்கடைக்காரர்கள் வயிற்றில் அடி.
 
 
இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயாவை சந்தித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர். நிலைமையை புரிந்துகொண்ட அமைச்சர், 24 மணி நேரத்திற்குள், பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் 7 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும்11 முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அடுத்தகட்டமாக இதே நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
 
கிராம மக்கள் மனதில் புரையோடிப்போயுள்ள ஜாதிய வேற்றுமை மனப்பாங்கை வேரறுக்கும்வகையிலான, விழிப்புணர்வு வழங்க அரசு முயற்சி செய்யும் என்றும் அமைச்சர் ஆஞ்சநேயா கூறினார்.
 
http://tamil.oneindia.in/news/india/upper-castes-boycott-barbers-catering-dalits-karnataka-203965.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நாட்டில் தொடரும் ஜாதி அவலம் Empty Re: நாட்டில் தொடரும் ஜாதி அவலம்

Post by செந்தில் Sat Jun 21, 2014 6:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
 முடியலை முடியலை முடியலை 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நாட்டில் தொடரும் ஜாதி அவலம் Empty Re: நாட்டில் தொடரும் ஜாதி அவலம்

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 11:07 am

சாதி பற்று இருப்பது என்னவோ உண்மைதான். என்றுதான் மாறுமோ?
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நாட்டில் தொடரும் ஜாதி அவலம் Empty Re: நாட்டில் தொடரும் ஜாதி அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பெண் சிசுக்கொலை: தொடரும் அவலம்
» உ.பி.,யில் மீண்டும் 16 குழந்தைகள் பலி; தொடரும் அவலம்
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» கோவை: தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அவலம்
» ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum