Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இது வாங்கினால் அது இலவசம்
Page 1 of 1 • Share
இது வாங்கினால் அது இலவசம்
இன்று நம்மையெல்லாம் கிளுகிளுக்க வைக்கும் இனிமையான சொல் இலவசம்! இந்தச் சொல்லைக் கேட்டவுடனேயே சிலருக்கு மயிர்க் கூச்செறிகிறது. வாயெல்லாம் பல்லாகிறது. இதைத் தெரிந்துகொண்டுதான் நம் அரசியல் வாணர்கள் இன்று சக்கைப்போடு போடுகிறார்கள். இலவசம், அன்பளிப்பு என்று என்ன என்னவோ கொடுத்து மக்கள் வாக்குச்சீட்டை வாங்கிவிடுகிறார்கள்.
அரசியல் வாணருக்கு அடுத்தபடி வாணிகர்கள் வந்து நிற்கிறார்கள். சலவைக் கட்டி மூன்று வாங்கினால் ஒன்று இலவசம். தேயிலைத் தூள் வாங்கினால் கரண்டி இலவசம். கண்ணாடி வாங்கினால் சீப்பு இலவசம். புடவை வாங்கினால் சட்டை இலவசம்.
இதைப் பற்றி வீட்டிலே நான் பேசிக்கொண்டிருந்தபோது என் பேரன் கேட்டான்: "யானை வாங்கினால் குதிரை இலவசமாகத் தருவார்களா தாத்தா?" அதற்கு என் பேத்தி சொன்னாள், "யானை வாங்குபவர்களுக்குக் குதிரை எதற்கு? யானைமேல் வைக்கும் அம்பாரிதான் தருவார்கள்!" என்று.
எல்லா நாடுகளிலுமே மக்கள் இலவசம் என்றால் மயங்கத்தான் செய்கிறார்கள். Reader's Digest ஆங்கில மாத இதழ் நடத்துபவர்கள் ஒரு காலத்தில் தாங்கள் வெளியிடும் கொள்ளை விலைப் புத்தகங்களை விற்பதற்கு இந்த முறையைத்தான் கையாண்டார்கள். விலை உயர்ந்த ஒரு நூலை விற்கச் சிறிய நூல் ஒன்றை இலவசம் என்று விளம்பரப்படுத்துவார்கள். அந்த இலவச நூலைப் புகழ்ந்து அவர்கள் பயன்படுத்தும் சொற்களைப் படித்தால் விற்பனை நூலைவிட இலவச நூல்தான் மிகவும் பயன் உள்ளது என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். அதை இலவசமாகப் பெறுவதற்காகவே விற்பனை நூலையும் வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றும்.
இலவசமாக எதைக் கொடுத்தாலும் அங்கே மக்கள் மொய்ப்பதைக் காணலாம். 1950களில் சோவியத்து ஒன்றியத்துக்குப் போட்டியாக அமெரிக்கா பல வேலைகளை மேற்கொண்டது. ‘சோவியத்து நாடு' என்ற இலவச இதழுக்குப் போட்டியாக, அமெரிக்கச் செய்தி நிறுவனம் ‘அமெரிக்கன் ரிப்போர்ட்டர்' இதழ் நடத்தியதோடு பல்வேறு அமெரிக்க நூல்களையும் இலவசமாய் வழங்கியது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது பாளையங்கோட்டை நூற்றாண்டு விழா மண்டபத்தின் வாசலில் ஒருமுறை ஆயிரக்கணக்கான அமெரிக்க நூல்களைக் கொண்டு வந்து குவித்தனர். இலவசம் யார் வேண்டுமானாலும் தேவையான நூல்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். நூல் பைத்தியமான நான் அங்குச் சென்றேன். கூட்டம் நெரிந்தது. வழியில் போவோர் எல்லாம் கூட்டத்துக்குள் முண்டியடித்துக்கொண்டு ஆளுக்கிரண்டு மூன்று நூல்களை எடுத்துச் சென்றனர். தேவையான நூலா, நல்ல நூலா என்று யாரும் பார்க்கவில்லை. நூல்களின் பக்கம் தலைவைத்துப் படுக்காதவர்கள்கூட அந்தக் கூட்டத்தில் இருந்தனர். எனக்கு ஏற்பட்ட அருவருப்பில் நான் எந்த நூலையும் எடுத்துக் கொள்ளாமலேயே திரும்பிவிட்டேன்.
இப்படி இலவசத்துக்கும் அன்பளிப்புகட்கும் ஏங்கும் தன்மை இந்தக் காலத்தில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. அந்தக் காலத்திலும் தமிழகத்தில் புலவர்கள் இருந்தனர். மன்னர்களிடமிருந்து பரிசில் பெற்றனர். ஆயினும் அவர்கள் பரிசிலுக்காக ஏங்கித் தவிக்கவில்லை. பெருமிதத்தோடு வாழ்ந்தனர். தகுதி அறிந்து வழங்கிய பரிசில்களையே அவர்கள் ஏற்றனர். மன்னன் ஒருவன், தன் சிறப்பை உணராமல் எல்லாருக்கும் போலவே தனக்கும் ஒன்றை வீசி எறிந்தான் என்று அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வெளியேறினாராம் ஒரு புலவர். அவர் அதோடு நிற்கவில்லை. வேறொரு மன்னன் தகுதியறிந்து கொடுத்த பரிசிலாகிய யானையைக் கொணர்ந்து முன்னைய மன்னனின் காவல் மரத்தில் கட்டிவைத்து விட்டுச் சென்றாராம்! அந்த மானவுணர்வும் மறவுணர்வும் எங்கே?
மலேசியா, சிங்கப்பூர் என்று நம் தமிழ் அறிஞர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். பணி முன்னிட்டுச் சென்று பெருமிதத்துடன் திரும்பி வருபவர்கள் பற்றி எந்தக் குறையும் இல்லை. வேறு சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாடுகளுக்குச் சென்றால் அங்கு வாழும் தமிழர்கள் நன்கு வரவேற்று விருந்தோம்புவார்கள், அன்பளிப்புகள் நிறைய வழங்குவார்கள் என்பதற்காகவே ஏதாவது ஒரு சாக்கில் அடிக்கடி அங்குச் சென்று வருகிறார்களாம்! சிலர் தாங்கள் எழுதிய குப்பை நூல்களுக்கு விலையைப் பலமடங்கு ஏற்றி அங்கே கொண்டு சென்று ஆயிரக்கணக்கான படிகளை விற்றுக் கொள்ளைப் பொருள் திரட்டி வருகிறார்களாம்!
செல்வர் ஒருவர் நடத்திய இலக்கிய விழா ஒன்றில் வான் கோழிப் பிரியாணிப் பொட்டலம் இலவசமாக வழங்கினார்கள். புலால் உண்ணாத ஒருவரும் ஒரு பொட்டலத்தை வாங்கிக்கொண்டார். என்ன என்று வியப்புடன் கேட்டேன். "பக்கத்து வீட்டுக்காரருக்கு மலிவு விலைக்கு விற்றுவிடுவேன்" என்றாரே பார்க்கலாம்.
- கட்டுரையாளர் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.ம.இல. தங்கப்பா
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இது வாங்கினால் அது இலவசம்
நல்லதொரு கட்டுரை... தகவலுக்கு நன்றி நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இது வாங்கினால் அது இலவசம்
அதனால்தான் நம் பலவீனம் தெரிந்து நம்மை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இது வாங்கினால் அது இலவசம்
உண்மைதான் ஆதாயம் இல்லாமல் இலவசமாக யாரும் எதையும் கொடுக்க வாய்ப்பில்லை.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இது வாங்கினால் அது இலவசம்
"சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக, இரண்டு
டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாக
கொடுக்கப்படும் என, வட மாநிலங்களில் சலுகை
திட்டம் அறிவிக்கப்பட்டதாம்
-
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்...
-
டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாக
கொடுக்கப்படும் என, வட மாநிலங்களில் சலுகை
திட்டம் அறிவிக்கப்பட்டதாம்
-
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்...
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இது வாங்கினால் அது இலவசம்
rammalar wrote:"சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக, இரண்டு
டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாக
கொடுக்கப்படும் என, வட மாநிலங்களில் சலுகை
திட்டம் அறிவிக்கப்பட்டதாம்
-
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்...
-
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இது வாங்கினால் அது இலவசம்
ஆரம்பிச்சிட்டானுகளா?... நடத்துங்கடா... உங்க வியாபாரத்த... இதுலதான் இல்லாம இருந்துச்சி....
தமிழக மக்களின்(இலவசத்தின் மீதுள்ள ஈர்ப்பை) மனதை நன்கு புரிந்து வைத்துள்ளனர்... நம்மூர் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும்
தமிழக மக்களின்(இலவசத்தின் மீதுள்ள ஈர்ப்பை) மனதை நன்கு புரிந்து வைத்துள்ளனர்... நம்மூர் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» சேர்ந்து லோன் வாங்கினால் சுமை குறையும் வரிச்சலுகையும் கிடைக்கும்
» ரூ.5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் மட்டுமே பான் கார்டை கட்டாயமாக்க வேண்டும்
» இலவசம் முந்துங்கள் !!!
» சிரிப்பு இலவசம்
» இனி வாட்ஸ்அப் முற்றிலும் இலவசம்!
» ரூ.5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் மட்டுமே பான் கார்டை கட்டாயமாக்க வேண்டும்
» இலவசம் முந்துங்கள் !!!
» சிரிப்பு இலவசம்
» இனி வாட்ஸ்அப் முற்றிலும் இலவசம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|