Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறையும் வீட்டுக் கடன் வட்டி
Page 1 of 1 • Share
குறையும் வீட்டுக் கடன் வட்டி
புதிய அரசு பதவிப் பொறுப்பை ஏற்ற பின்னர் அனைத்துத் துறைகளும் எழுச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் பரவலாக நிலவுகிறது. இதற்கு ரியல் எஸ்டேட் துறையும் விதிவிலக்கல்ல. அனைவருக்கும் வீடு கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளைப் புதிய அரசு முடுக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
இதற்கு வழிகோலுவதுபோல, வீட்டுக் கடன் வட்டியைக் குறைப்பது பற்றித் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சமீபத்தில் அறிவித்தார்.
இதன் காரணமாக வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமான பலனை ஏற்படுத்தும் என்றே முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர். ஆனால், வீட்டுக் கடன் வசதி குறைக்கப்படும் பட்சத்தில், முதலீட்டாளர்கள் உணர்ச்சி வசப்பட்டோ அல்லது உந்துதல் காரணமாகவோ தவறான முதலீடுகளைத் தேர்வு செய்துவிடக் கூடாது. இங்குத் தவறான முதலீடு என்பது தங்களின் பொருளாதார சக்திக்கு மீறிய முதலீடு என்று முதலீட்டு ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் வெகு சமீபத்தில், “வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்பட்டது” என்ற செய்தி வெளியாகும் என ரியல் எஸ்டேட் துறையினரும், புதிதாக வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தச் செய்தி, இரு தரப்பினருக்கும் சாதகமானதுதான் என்றாலும், முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இது மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உதாரணமாக 25 லட்சத்தில் வீட்டை வாங்கத் திட்டமிட்டிருந்த ஒருவர், வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்பட்ட செய்தியைக் கேட்டவுடன், புதிய வீட்டிற்கான முதலீட்டுத் தொகையை 27 முதல் 28 லட்சம் வரை உயர்த்திக்கொள்வார். வட்டி குறைந்துள்ளதால், நம்மால் அதிக அளவு தொகையைத் திரும்பச் செலுத்திவிட முடியும் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
வாழ்க்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நீண்ட கால முதலீடாகக் கருதப்படும் வீடு வாங்கும் விஷயத்துடன் தொடர்புடைய நிதி விவகாரத்தில், முதலீட்டாளர்கள் அதீத நம்பிக்கையுடன் செயல்படுவது கூடுதல் சிக்கலை ஏற்படுத்திவிடும். வீட்டு வட்டிக் கடன் குறைக்கப்பட்டாலும், தங்களின் நிதி வசதிக்கு ஏற்ப, திரும்பச் செலுத்தும் சக்திக்கு உட்பட்டு, சிறிய அல்லது நடுத்தர வீடுகளை வாங்குவதே சிறந்த முதலீடாக இருக்கும் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால், ஒரு படுக்கை அறை கொண்ட ஃப்ளாட் போதும் என்ற பட்சத்தில், அந்தக் குடும்பத்தினர் 2 படுக்கையறை கொண்ட வீட்டை வாங்கினால், அது அதிகபட்ச முதலீடாகவே கருதப்படும். தேவைப்படும் இடவசதியுடன் உள்ள சிறிய வீட்டில், அதன் ஒவ்வொரு சதுரஅடியும், அதிகபட்ச அளவில் பயன்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், தேவைக்கு அதிகமான இடவசதி உள்ள வீட்டில், பயன்பாடு இல்லாத இடமும் இருக்கும் நிலை உருவாகும். எனவே, வீட்டுக் கடன் வட்டி குறைகிறதே என்று நினைத்து, வசதிக்கும், தேவைக்கும் அதிகமான பெரிய வீட்டைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, அளவில் சிறிய அதே நேரத்தில் வசதிகளுடன் கூடிய வீட்டைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
இது ஒருபுறம் என்றால், இனி வரும் காலங்களில் ஒருவர் தனது வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு வீடுகளைத்தான் வாங்க முடியும் என்ற பொருளாதார, சமூக நிலை வெகுவாக மாறிவிடும் என்று நம்பிக்கையும் பரவலாகக் காணப்படுகிறது. இன்றைய அவசர உலகில் பல்வேறு காரணங்களுக்காக அதாவது பணியிட மாற்றம், குழந்தைகளின் கல்வி, வசதி வாய்ப்புகள் அதிகரிப்பு போன்றவற்றால், ஒரு தனிப்பட்ட நபர் தனது வாழ்நாளில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகளைச் சொந்தமாக்க நினைப்பதும் இயல்பாகிவிடும் காலம் தற்போது உருவாகியுள்ளது.
எனவே, 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுக்கும் மேற்பட்ட வீடுகளின் விற்பனையும் அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. அதுபோன்ற தருணத்தில், அளவில் சிறிதாக இருக்கும் வீடுகள், முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் என்பதால் எளிதில் மறுவிற்பனையாகி விடும். அந்தச் சமயத்திலும், அளவில் பெரிய வீடுகள் அதாவது 2 படுக்கையறை அல்லது 3 படுக்கையறை கொண்ட வீடுகளை விட, வசதி நிறைந்த ஒரு படுக்கையறை கொண்ட வீடு முதலீட்டாளர்களுக்குக் கை கொடுக்கும்.
எனவே, வீட்டின் அளவைத் தேர்வு செய்யும்போது, வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தும் திறன், அவசர கால நிதித் தேவைகளுக்கான கையிருப்பு, எதிர்காலத் தேவைகள் அதாவது குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என முதலீட்டு ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குறிப்பாக, வீட்டுக் கடன் வட்டி குறைப்பு, சலுகை விலையில் கிடைக்கும் வீடுகள் போன்ற கவர்ச்சிகரமான யுக்திகளைக் கவனத்தில் கொள்ளாமல், தனது நிதி ஆதாரத்திற்கு உட்பட்ட விலையில் மற்றும் அளவில் வீட்டை வாங்குவதே சிறந்த முதலீடாக இருக்கும்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குறையும் வீட்டுக் கடன் வட்டி
குறிப்பாக, வீட்டுக் கடன் வட்டி குறைப்பு, சலுகை விலையில் கிடைக்கும் வீடுகள் போன்ற கவர்ச்சிகரமான யுக்திகளைக் கவனத்தில் கொள்ளாமல், தனது நிதி ஆதாரத்திற்கு உட்பட்ட விலையில் மற்றும் அளவில் வீட்டை வாங்குவதே சிறந்த முதலீடாக இருக்கும்.
Similar topics
» வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?
» வட்டி விகிதம் எப்போது குறையும்?
» வீட்டுக் கடன்: ஒளிந்திருக்கும் சூட்சுமம்
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» வீட்டுக் கடன்: வேறு வங்கிக்கு மாற முடியுமா?
» வட்டி விகிதம் எப்போது குறையும்?
» வீட்டுக் கடன்: ஒளிந்திருக்கும் சூட்சுமம்
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» வீட்டுக் கடன்: வேறு வங்கிக்கு மாற முடியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|