தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மானம் காக்கும் தாவரம்!

View previous topic View next topic Go down

மானம் காக்கும் தாவரம்!  Empty மானம் காக்கும் தாவரம்!

Post by முழுமுதலோன் Wed Apr 23, 2014 11:30 am

மானம் காக்கும் தாவரம்!  Bales-of-Cotton

மனிதன் தனது சொந்த முயற்சி காரணமாக முன்னேறினான், தொடர்ந்து முன்னேறி வருகிறான். அவன் தனது அறிவுத் திறன் காரணமாக பல அதிசயக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினான். இவ்வாறு அவன் நாகரீக ஏணியில் ஏறினான். இந்த உண்மைகள் ஒருபுறம் இருக்க, மனிதனுக்கு ஆடைகளை வழங்கி அவனை உண்மையான நாகரீக மனிதனாக்கிய பெருமை பருத்திச் செடிக்குத்தான் உரியது. பருத்தியில் இருந்து நூல் நூற்ற மனிதன், ஆடைகளை நெசவு செய்து கொண்டான்.
 
குகை மனிதன் விலங்குகளைப் போலவே திரிந்துவந்தான். அவன் தனது மானத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தழைகளையும், மரப் பட்டைகளையும் ஆடைகளாக உபயோகித்தான். எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் பருத்தியின் உபயோகத்தை மனிதன் தெரிந்துகொண்டான்.
 
18-வது நூற்றாண்டு வரையில் பட்டு நூலைப் போலவும், கம்பளியைப் போலவும், பருத்தி நூல் நெசவும் கையாலேயே நடந்தது. பெரும்பாலான வெப்ப நாடுகளில் பருத்திச் செடிகளைக் காணலாம். பருத்திக் காய் நன்கு முற்றி, நெத்தாகி வெடித்ததும் பருத்தி வெளிப்படுகிறது. பருத்தி, விலங்குகளின் ரோமங்களில் இருந்து நூல் நூற்பதற்கு மனிதன் எவ்வாறு கற்றுக் கொண்டான்?
 
கற்காலத்து மனிதன் கூடைகளை முடையவும், கயிறுகளைத் தயாரிப்பதற்கும் நாணல், கோரை, தோல் துண்டுகள் ஆகியவற்றை முறுக்கத் தெரிந்துகொண்டான். அதன் பின்னர் பருத்தியிலிருந்தும் நூல் நூற்கலாம் என்ற சிந்தனை அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சணல் நூற்பு வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
 
பருத்தியில் இருந்து நூல் நூற்பதற்கு இந்தியாவே வழிகாட்டியது. கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியையும், பருத்தி நூலில் நெசவு செய்யப்பட்ட ஆடைகளையும் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்திருக்கிறது இந்தியா.
 
பருத்தி என்றால் என்ன என்பது பற்றியும், அதிலிருந்து நூல் நூற்று ஆடைகள் தயாரிக்க முடியும் என்பதையும் இந்தியர்கள் அறிந்துகொண்டிருந்தனர்.
 
ஐரோப்பா நாகரீக வாசத்தை உணராத காலத்திலேயே இந்தியா நாகரீகத்தில் தலைசிறந்த நாடாக விளங்கியது. இங்கு சாதாரணமாக நடைபெற்று வந்த பருத்தி நூல் நூற்பும், நெசவும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பண்டைய இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் கை ராட்டையாலும், கையாலும் நூல் நூற்று வந்தனர்.
 
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிரிட்டீஷ்காரர்கள் பருத்தியின் உபயோகத்தைத் தெரிந்துகொண்டார்கள். லங்காஷயரிலும், மான்செஸ்டரிலும் ஆலைகள் உற்பத்தி செய்த துணிகளை இந்தியா மீது திணிப்பதற்கும், இந்தி யாவின் புராதன நெசவுத் தொழிலை அழிப்பதற்கும் ஆங்கிலேயர்கள் தமது ஆதிக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு புரிந்த கொடுமைகள் கணக்கில் அடங்காது.
 
டாக்கா மஸ்லின் துணியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கைக்குள் அடங்கக்கூடிய மஸ்லின் துணியை டாக்கா நெசவாளர்கள் தமது நுட்பமான கைத்திறனால் உற்பத்தி செய்தனர். பொறாமை காரணமாக அந்த நெசவாளர்களின் கட்டை விரல்களை வெள்ளையர்கள் துண்டித்தனர்.
 
வெள்ளையர்கள் செய்த கொடுமைகளே தேசபக்தக் கனலாக மாறி ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் எரிய ஆரம்பித்தது. அந்தக் கனலை மகாத்மா காந்தி விசிறி விட்டார்.
 
அவரது சத்தியாகிரகப் போராட்டத்தில் அன்னியத் துணி எரிப்பு, நிராகரிப்பு, கை ராட்டையிலும், தக்ளியிலும் நூல் நூற்பு ஆகியவை முக்கிய இடம் பெற்றன.
 
காந்தியடிகள் ஆரம்பித்த கதர் இயக்கம் வெறும் நூலையும், துணியையும் மட்டும் சார்ந்திருக்கவில்லை. அந்த இயக்கம் பொருளாதார முனையில் பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதமாகத் திகழ்ந்தது. பருத்தியையும், பருத்தி நூலையும் பற்றிக் கூறும் வரலாற்றில் மகாத்மா காந்திக்கு முக்கிய இடம் உண்டு.




http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மானம் காக்கும் தாவரம்!  Empty Re: மானம் காக்கும் தாவரம்!

Post by முரளிராஜா Mon Jun 16, 2014 8:23 am

கட்டுரை பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மானம் காக்கும் தாவரம்!  Empty Re: மானம் காக்கும் தாவரம்!

Post by செந்தில் Mon Jun 16, 2014 11:49 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மானம் காக்கும் தாவரம்!  Empty Re: மானம் காக்கும் தாவரம்!

Post by நாஞ்சில் குமார் Mon Jun 16, 2014 7:06 pm

அருமையான கட்டுரை.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மானம் காக்கும் தாவரம்!  Empty Re: மானம் காக்கும் தாவரம்!

Post by ஸ்ரீராம் Tue Jun 17, 2014 11:52 am

கட்டுரை அருமை
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மானம் காக்கும் தாவரம்!  Empty Re: மானம் காக்கும் தாவரம்!

Post by kanmani singh Wed Jun 18, 2014 12:07 pm

சிறந்த பதிவு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மானம் காக்கும் தாவரம்!  Empty Re: மானம் காக்கும் தாவரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum