Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீனாவுக்கு செல்லும் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சீனாவுக்கு செல்லும் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்முயற்சியில் தைவான் நாட்டின் மாபெரும் கவிஞரும், சர்வதேச விருதுகள் பெற்றவருமான கவிஞர் யூ ஷி-யின் சீன மொழிபெயர்ப்பில் திருக்குறள், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.
தமிழின் மிகத் தொன்மையான நீதி இலக்கியமான திருவள்ளுவரின் திருக்குறள், தேசியக் கவியான பாரதியார் மற்றும் தமிழ்த் தேசியக் கவியான பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களை, உலகின் அதிகமான மக்களால் பேசப்படுவதும், செம்மொழியும், செழுமையான இலக்கிய வளம் கொண்டதுமான சீன (மாண்டரின்) மொழியில் மொழிபெயர்க்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.77.70 லட்சம் நிதி ஒதுக்கி, இப்பணியை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாக செயல்படுத்த 2012-ல் உத்தரவிட்டார்.
“இந்த சீன மொழிபெயர்ப்புப் பணி, முன்பு சீன நாட்டின் அங்க மாக இருந்த தற்போதைய தைவான் நாட்டின் புகழ்பெற்ற கவிஞரான யூ ஷி-யிடம் 2012 டிசம்பரில் ஒப்படைக்கப்பட்டது. யூ ஷி ஒரே ஆண்டுக்குள்ளாக திருக்குறளையும், பாரதியார் பாடல்களையும் சீன மொழியில் எழுதித் தந்ததையடுத்து, தற்போது சீன மொழி திருக்குறள் நூல் அச்சுப் பணி முடிவடையும் நிலையிலும், சீன மொழி பாரதியார் நூல் தட்டச்சுப் பணியிலும் உள்ளன. பாரதிதாசன் நூல் யூ ஷி-யின் மொழிபெயர்ப்பு பணியில் உள்ளது. நிகழாண்டு இறுதிக்குள்ளாக இவை நூலாக வெளியிடப்பட்டு விற் பனைக்கு வரும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை.
மேலும் அவர் கூறியது: “கடந்த 2012 டிசம்பரில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் மற்றும் நான் உள்பட தைவான் சென்று, கவிஞர் யூ ஷி-யை சந்தித்து, தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை ஒப்படைத்தோம். அவரிடம் தமிழறிஞர்கள் பி.சுப்பிரமணியம், ஜி.யு.போப் எழுதிய திருக்குறள் நூல்கள் இருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டோம். இப்பணியை ஆர்வமுடன் ஏற்றுக்கொண்ட யூ ஷி, ஓராண்டுக்குள்ளாகவே திருக்குறள், பாரதியார் பாடல்களை முடித்து அளித்துவிட்டார். பாரதிதாசன் பாடல்களை விரைவில் அளிக்கவுள்ளார்.
வேற்று மொழி இலக்கணத்துக்கு முரண்பாடில்லாத, கடினமில்லாத, ஆனால் தமிழின் சிறப்புகள், விடுதலை வேட்கை, உலகளாவிய சமூகப் பார்வை கொண்ட 100 பாடல்களை பாரதியின் பாடல்களில் ஆழ்ந்த புலமை கொண்ட டி.என்.ராமச்சந்திரன், தமிழறிஞர்கள் ஏ.தட்சிணாமூர்த்தி, சோ.ந.கந்தசாமி ஆகியோரைக் கொண்ட குழுவினர் தேர்வு செய்தனர். இந்த பாடல்களுக்கான டி.என்.ராமச்சந்திரனின் ஆங்கில மொழிபெயர்ப்பினை சிறந்ததாகத் தேர்வு செய்தோம்.
இதேபோல பாரதிதாசனின் தமிழ் மொழி உணர்வு, சமூகம், பெண்கள் முன்னேற்றம் குறித்த சிறப்பான 100 பாடல்களை கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் பொன்னடியான் ஆகியோரைக் கொண்ட குழுவினர் தேர்வு செய்து, அதற்கான ஏ.தட்சிணாமூர்த்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பு தேர்வு செய்யப்பட்டு யூ ஷி-யிடம் அளிக்கப்பட்டது” என திருமலை கூறினார்.
இந்த தமிழ் இலக்கியங்கள் குறித்து யூ ஷி என்ன கருத்து கொண் டுள்ளார் என்று திருமலையிடம் கேட்டபோது, “உலகம் மேன்மை அடையத் தேவையான உயர்ந்த சிந்தனைகளைக் கொண்ட இலக்கியம் திருக்குறள். அதனை மொழிபெயர்க்கும் பணியை எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்” என அவர் உணர்ச்சி மேலிடக் கூறியது பசுமையாக நினைவில் உள்ளது” என்றார்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» அருணாசல் செல்கிறார் தலாய் லாமா: சீனாவுக்கு நெருக்கடி?
» சுத்தானந்த பாரதியார்
» மகாகவி பாரதியார்
» கண்ணன் பாட்டு-பாரதியார்
» குயில் பாட்டு-பாரதியார்
» சுத்தானந்த பாரதியார்
» மகாகவி பாரதியார்
» கண்ணன் பாட்டு-பாரதியார்
» குயில் பாட்டு-பாரதியார்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|