Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
கவிக்கோ அப்துல் ரகுமானின் பித்தன் கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் போல் இருப்பதால் இவருடைய கவிதைகளையும் ரசித்தேன் - பகிர்ந்தேன்.
புத்தபிரானிடம்
ராகுலன் கேட்டான்
”தந்தையே..
என்ன சொல்கிறீர்கள்
எனக்கு?
தலைகுனிந்தபடி
புத்தபிரான் முணுமுணுத்தார்
”பிச்சையிடு”
புத்தபிரானிடம்
ராகுலன் கேட்டான்
”தந்தையே..
என்ன சொல்கிறீர்கள்
எனக்கு?
தலைகுனிந்தபடி
புத்தபிரான் முணுமுணுத்தார்
”பிச்சையிடு”
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
மழைபெய்து
பசுமையாய் இருந்தது வனம்.
மகிழ்ச்சி பொங்கக்
கூவினான் சீடன்.
”குருவே..
வனம் எப்படிக்
பூத்திருக்கிறது பாருங்கள்.”
”ஹும்... இப்பொழுதுதான்
பூத்திருக்கிறது போலிருக்கிறது
உன் மனம்”
என்றார் குரு.
பசுமையாய் இருந்தது வனம்.
மகிழ்ச்சி பொங்கக்
கூவினான் சீடன்.
”குருவே..
வனம் எப்படிக்
பூத்திருக்கிறது பாருங்கள்.”
”ஹும்... இப்பொழுதுதான்
பூத்திருக்கிறது போலிருக்கிறது
உன் மனம்”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
கரையோரம் நின்று
பார்த்தபடி இருந்தான் சீடன்.
ஏன் என்றார் குரு..
”குளிக்க வந்தேன்
வெள்ளப் பெருக்கு
வேகமாய் இருக்கிறது”
என்றான் சீடன்.
”குதி..
நீந்து..
கரைசேர்..”
சொல்லி நகர்ந்தார் குரு.
பார்த்தபடி இருந்தான் சீடன்.
ஏன் என்றார் குரு..
”குளிக்க வந்தேன்
வெள்ளப் பெருக்கு
வேகமாய் இருக்கிறது”
என்றான் சீடன்.
”குதி..
நீந்து..
கரைசேர்..”
சொல்லி நகர்ந்தார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
திடீரென்று
எழுந்தோடினார் குரு..
சீடனும் பின்தொடர்ந்து
ஓடினான்..
ஆயசமாய் ஓரிடத்தில்
அமர்ந்தார் குரு..
”என்ன ஆயிற்று குருவே..”
என்றான் சீடன்.
”எப்படி ஓடினாலும்
என் நிழல் என்னைத்
துரத்துகிறதே”
என்றார் குரு.
எழுந்தோடினார் குரு..
சீடனும் பின்தொடர்ந்து
ஓடினான்..
ஆயசமாய் ஓரிடத்தில்
அமர்ந்தார் குரு..
”என்ன ஆயிற்று குருவே..”
என்றான் சீடன்.
”எப்படி ஓடினாலும்
என் நிழல் என்னைத்
துரத்துகிறதே”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
வீணையின் தந்திகளை
அறுத்துக் கொண்டிருந்தார்
குரு...
”அருமையான வீணை
தந்திகளை அறுத்து
என்ன பயன்?” என்றான் சீடன்.
“தந்திகள்
அறுபடும் இசையை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்”
என்றார் குரு.
அறுத்துக் கொண்டிருந்தார்
குரு...
”அருமையான வீணை
தந்திகளை அறுத்து
என்ன பயன்?” என்றான் சீடன்.
“தந்திகள்
அறுபடும் இசையை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
எங்கோ ஒரு பறவை
இசைத்துக் கொண்டிருந்தது..
குரு தன்போக்கில்
கத்திக் கொண்டிருந்தார்..
”என்ன குருவே..
இப்படிக் கத்துகிறீர்கள்?“
என்றான் சீடன்..
”மகனே..
பறவை அதன் போக்கில்
பாடுகிறது..
நானும் என் போக்கில்
பாடுகிறேன்..
உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை
என்றால்
நான் என்ன செய்ய முடியும்?”என்றார் குரு..
இசைத்துக் கொண்டிருந்தது..
குரு தன்போக்கில்
கத்திக் கொண்டிருந்தார்..
”என்ன குருவே..
இப்படிக் கத்துகிறீர்கள்?“
என்றான் சீடன்..
”மகனே..
பறவை அதன் போக்கில்
பாடுகிறது..
நானும் என் போக்கில்
பாடுகிறேன்..
உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை
என்றால்
நான் என்ன செய்ய முடியும்?”என்றார் குரு..
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
“உறக்கமே வருவதில்லை
குருவே” என்றான் சீடன்.
”எப்போது
விழித்துக் கொண்டிருந்தாய்
இப்போது உறங்குவதற்கு?“
எனறார் குரு.
குருவே” என்றான் சீடன்.
”எப்போது
விழித்துக் கொண்டிருந்தாய்
இப்போது உறங்குவதற்கு?“
எனறார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
விரல்களால்
நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருந்தார்
குரு..
“இப்படி எண்ணி முடிப்பது
சாத்தியமா குருவே“
என்றான் சீடன்..
“இங்கு
வந்து போவோரையும்
இப்படித்தானே
எண்ணிக் கொண்டிருக்கறீர்கள்?”
என்றார் குரு.
நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருந்தார்
குரு..
“இப்படி எண்ணி முடிப்பது
சாத்தியமா குருவே“
என்றான் சீடன்..
“இங்கு
வந்து போவோரையும்
இப்படித்தானே
எண்ணிக் கொண்டிருக்கறீர்கள்?”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
கிளிஞ்சல்களை வைத்து
விளையாடிக் கொண்டிருந்தார்
குரு...
பார்த்துக் கொண்டிருந்த
சீடன் சிரித்தான்..
“என்ன குருவே..
நீங்கள் போய்
கிளிஞ்சல்களை வைத்தா
விளையாடுவது?”குறும்பாகச் சொன்னார்
குரு..
”முத்துக்களை வைத்து
விளையாடினால்
விட்டுவிடுவாயா நீ?“
விளையாடிக் கொண்டிருந்தார்
குரு...
பார்த்துக் கொண்டிருந்த
சீடன் சிரித்தான்..
“என்ன குருவே..
நீங்கள் போய்
கிளிஞ்சல்களை வைத்தா
விளையாடுவது?”குறும்பாகச் சொன்னார்
குரு..
”முத்துக்களை வைத்து
விளையாடினால்
விட்டுவிடுவாயா நீ?“
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
மூச்சிரைக்க
ஓடியது நாய்.
“எதற்குத்தான் இந்த
ஓட்டமோ குருவே“
என்றான் சீடன்..
“என்னிடம் ஏன்
கேட்கிறாய்..
உனக்குள் கேட்டுக்கொள்”
என்றார் குரு.
ஓடியது நாய்.
“எதற்குத்தான் இந்த
ஓட்டமோ குருவே“
என்றான் சீடன்..
“என்னிடம் ஏன்
கேட்கிறாய்..
உனக்குள் கேட்டுக்கொள்”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
படுக்கையில் கிடந்தார்
குரு.
ஊசலாடிக் கொண்டிருந்தது
உயிர்.
சொட்டுக் கண்ணீர்த்துளி
பட்டுக் கண்மலர்ந்த குரு
ஏன் என்பதுபோல் பார்த்தார்.
”தங்களைப் பிரியும்
தருணமோ குருவே”
என்றான் சீடன்..
“இல்லை...நீ
குருவாகப்
பிறக்கும் தருணம்”
என்றார் குரு..
குரு.
ஊசலாடிக் கொண்டிருந்தது
உயிர்.
சொட்டுக் கண்ணீர்த்துளி
பட்டுக் கண்மலர்ந்த குரு
ஏன் என்பதுபோல் பார்த்தார்.
”தங்களைப் பிரியும்
தருணமோ குருவே”
என்றான் சீடன்..
“இல்லை...நீ
குருவாகப்
பிறக்கும் தருணம்”
என்றார் குரு..
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
இருட்டில் நடக்கத்
தொடங்கினார் குரு..
விளக்கேற்றி வந்தான் சீடன்
சட்டென அணைத்த
குரு சொன்னார்..
“இருட்டில் நடக்கப்
பாதை தெரியாவிட்டால்
வெளிச்சத்தில் எப்படிப்
பார்த்து நடப்பாய்?
தொடங்கினார் குரு..
விளக்கேற்றி வந்தான் சீடன்
சட்டென அணைத்த
குரு சொன்னார்..
“இருட்டில் நடக்கப்
பாதை தெரியாவிட்டால்
வெளிச்சத்தில் எப்படிப்
பார்த்து நடப்பாய்?
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
புதிய ஆடையைக்
கிழித்துக் கொண்டிருந்தார் குரு.
“என்ன குருவே..
புதிய ஆடையைப் போய்க்
கிழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?“
என்றான் சீடன்.
“எது புதிய ஆடை?
என் கைக்கு வந்த
பழைய ஆடையைப்
புதிதாய்
நெய்து கொண்டிருக்கிறேன்”
என்றார் குரு.
கிழித்துக் கொண்டிருந்தார் குரு.
“என்ன குருவே..
புதிய ஆடையைப் போய்க்
கிழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?“
என்றான் சீடன்.
“எது புதிய ஆடை?
என் கைக்கு வந்த
பழைய ஆடையைப்
புதிதாய்
நெய்து கொண்டிருக்கிறேன்”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
கண்ணாடியில்
முகம்பார்த்தான் சீடன்.
“என்ன பார்க்கிறாய்?“
என்றார் குரு..
“என் முகத்தைத்தான்
பார்க்கிறேன் குருவே“
என்றான் சீடன்..
“உன் முகம் உனக்குத்
தெரிந்து விட்டால்
கண்ணாடி எதற்குப்
பார்க்கப் போகிறாய்“
என்றபடி நகர்ந்தார் குரு.
முகம்பார்த்தான் சீடன்.
“என்ன பார்க்கிறாய்?“
என்றார் குரு..
“என் முகத்தைத்தான்
பார்க்கிறேன் குருவே“
என்றான் சீடன்..
“உன் முகம் உனக்குத்
தெரிந்து விட்டால்
கண்ணாடி எதற்குப்
பார்க்கப் போகிறாய்“
என்றபடி நகர்ந்தார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
யாசகம் பெறப்
புறப்பட்டார் குரு...
”நானிருக்கத் தாங்கள்
போகலாமா பிச்சைக்கு?“
என்றான் சீடன்..
இன்னும் எனக்குள்
“நானிருப்பதால் “ தான்
போகிறேன் பிச்சைக்கு“
என்றார் குரு.
புறப்பட்டார் குரு...
”நானிருக்கத் தாங்கள்
போகலாமா பிச்சைக்கு?“
என்றான் சீடன்..
இன்னும் எனக்குள்
“நானிருப்பதால் “ தான்
போகிறேன் பிச்சைக்கு“
என்றார் குரு.
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|