Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன்னார(ன்)ங் கம்பெனிகள்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
மன்னார(ன்)ங் கம்பெனிகள்!
[img][/img]
--
எக்கா எக்கா பேச்சியக்கா,
என் கொடுமையக் கேட்டியா?
வாயக்கட்டி வயித்தக்கட்டி
வருசமெல்லாம் வேலை செஞ்சு
ஆன கஞ்சி குடிக்காம
அடிவயிறு சுருங்கிப்போச்சு!
பத்துப்பாத்திரம் தேச்சுத் தேச்சு
பத்து விரலும் தேஞ்சு போச்சு!
இப்படியெல்லாம் பாடுபட்டு,
நான் சேத்த கொஞ்ச பணத்தை,
எவனோ ஒருபாவிய நம்பி,
இழந்துட்டு நிக்கிறேன்!
என்னென்னமோ பேருவச்ச கம்பெனிக
எத்தனையோ திட்டங்கள்ல முதலீடாம்…
அத்தனையும் வட்டிவட்டியாக் கொட்டுமாம்!
அடுத்த அஞ்சு வருசத்தில
நானும் ஒரு அம்பானியாம்!
ஐம்பதாயிரம் கட்டினாக்கா
அடுத்த வருஷம் லட்சாதிபதி…
அதுக்கு மேல பணம் போட்டா
அரைப்பவுன் தங்கம் தாரேன்…
ஓம்புள்ள கல்யாணத்த
ஓகோன்னு நடத்திரலாம்!
பத்துப் பேரச் சேத்து விட்டா
பத்தாயிரம் கமிஷன் தாரேன்
பட்டுச்சேலை, வாஷிங்மெஷின் தீவாளிப்
பட்டாசும் பரிசாத்தாரேன்…
பிள்ளகுட்டி எல்லாரோட
‘பிக்குனிக்கும்’ போய் வரலாம்!
இப்படியெல்லாம் சொல்லித்தானே
ஏமாத்திப்புட்டாங்க…
கேப்பையில வடியுறது நெய்தான்னு,
கேணச்சிறுக்கி நான் நம்பிப்புட்டேன்!
அக்கம் பக்கத்தில் சொன்னாங்க
அதிக வட்டி கிடைக்குமுன்னு
ஆசைப்பட்டு கட்டிட்டு
இப்ப அவதியில மாட்டிக்கிட்டேன்!
முந்தாநாளு சேதியில
மூஞ்சியெல்லாம் மூடிக்கிட்டே
மூணு பேரு போனாங்க…
யாருன்னு பாத்தாக்க, யாத்தே… என்
ஈரக்கொலை நடுங்கிப் போச்சு!
என்னைப்போல பல பேர அவ(ன்)
ஏமாத்தியிருக்கான்னு
இப்பத்தான் புரிஞ்சிச்சு!
பசி பட்டினின்னு பாக்காம
பாத்துப்பாத்து சேத்தபணம்,
அளவுக்கு மீறின ஆசையால
அத்தனையும் போச்சேக்கா!
பிள்ளை குட்டியக் காப்பாத்த
பெரும்பாடு படுற மக்கா…
அரசாங்கம் சொல்லுறத
ஒரு அரைநாழி கேளுங்க!
பத்துக்காசா இருந்தாலும் அதை
பாதுகாப்பா சேத்து வைக்கணும்…
கெட்ட பின் தானக்கா எனக்கு
எட்டுப்புத்தி வந்திருக்கு!
வேர்வையில வெளைஞ்ச காசு
அது உசுரக்காட்டிலும் பெரிசு…
யோசிக்காம சீட்டுல கட்டி
ஒரு போதும் இழந்துராதீங்க…
அந்த, ‘மன்னார(ன்)ங் கம்பெனிகள…’ மக்கா நீங்க
அடையாளம் தெரிஞ்சுக்கங்க!
-
===================================
— இரா.தமிழ்செல்வன்,
காவல் ஆய்வாளர்
பொருளாதார குற்றப்பிரிவு – II
மதுரை.
நன்றி: வாரமலர்
--
எக்கா எக்கா பேச்சியக்கா,
என் கொடுமையக் கேட்டியா?
வாயக்கட்டி வயித்தக்கட்டி
வருசமெல்லாம் வேலை செஞ்சு
ஆன கஞ்சி குடிக்காம
அடிவயிறு சுருங்கிப்போச்சு!
பத்துப்பாத்திரம் தேச்சுத் தேச்சு
பத்து விரலும் தேஞ்சு போச்சு!
இப்படியெல்லாம் பாடுபட்டு,
நான் சேத்த கொஞ்ச பணத்தை,
எவனோ ஒருபாவிய நம்பி,
இழந்துட்டு நிக்கிறேன்!
என்னென்னமோ பேருவச்ச கம்பெனிக
எத்தனையோ திட்டங்கள்ல முதலீடாம்…
அத்தனையும் வட்டிவட்டியாக் கொட்டுமாம்!
அடுத்த அஞ்சு வருசத்தில
நானும் ஒரு அம்பானியாம்!
ஐம்பதாயிரம் கட்டினாக்கா
அடுத்த வருஷம் லட்சாதிபதி…
அதுக்கு மேல பணம் போட்டா
அரைப்பவுன் தங்கம் தாரேன்…
ஓம்புள்ள கல்யாணத்த
ஓகோன்னு நடத்திரலாம்!
பத்துப் பேரச் சேத்து விட்டா
பத்தாயிரம் கமிஷன் தாரேன்
பட்டுச்சேலை, வாஷிங்மெஷின் தீவாளிப்
பட்டாசும் பரிசாத்தாரேன்…
பிள்ளகுட்டி எல்லாரோட
‘பிக்குனிக்கும்’ போய் வரலாம்!
இப்படியெல்லாம் சொல்லித்தானே
ஏமாத்திப்புட்டாங்க…
கேப்பையில வடியுறது நெய்தான்னு,
கேணச்சிறுக்கி நான் நம்பிப்புட்டேன்!
அக்கம் பக்கத்தில் சொன்னாங்க
அதிக வட்டி கிடைக்குமுன்னு
ஆசைப்பட்டு கட்டிட்டு
இப்ப அவதியில மாட்டிக்கிட்டேன்!
முந்தாநாளு சேதியில
மூஞ்சியெல்லாம் மூடிக்கிட்டே
மூணு பேரு போனாங்க…
யாருன்னு பாத்தாக்க, யாத்தே… என்
ஈரக்கொலை நடுங்கிப் போச்சு!
என்னைப்போல பல பேர அவ(ன்)
ஏமாத்தியிருக்கான்னு
இப்பத்தான் புரிஞ்சிச்சு!
பசி பட்டினின்னு பாக்காம
பாத்துப்பாத்து சேத்தபணம்,
அளவுக்கு மீறின ஆசையால
அத்தனையும் போச்சேக்கா!
பிள்ளை குட்டியக் காப்பாத்த
பெரும்பாடு படுற மக்கா…
அரசாங்கம் சொல்லுறத
ஒரு அரைநாழி கேளுங்க!
பத்துக்காசா இருந்தாலும் அதை
பாதுகாப்பா சேத்து வைக்கணும்…
கெட்ட பின் தானக்கா எனக்கு
எட்டுப்புத்தி வந்திருக்கு!
வேர்வையில வெளைஞ்ச காசு
அது உசுரக்காட்டிலும் பெரிசு…
யோசிக்காம சீட்டுல கட்டி
ஒரு போதும் இழந்துராதீங்க…
அந்த, ‘மன்னார(ன்)ங் கம்பெனிகள…’ மக்கா நீங்க
அடையாளம் தெரிஞ்சுக்கங்க!
-
===================================
— இரா.தமிழ்செல்வன்,
காவல் ஆய்வாளர்
பொருளாதார குற்றப்பிரிவு – II
மதுரை.
நன்றி: வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மன்னார(ன்)ங் கம்பெனிகள்!
ஏழைகள் இப்படித்தான் ஏமாறுகிறார்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|