தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?

View previous topic View next topic Go down

சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு? Empty சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?

Post by நாஞ்சில் குமார் Tue Jul 01, 2014 10:27 pm

சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் உள்ள ஆளுமைத் தனித்தன்மைகளை (Personality) கண்டறியும் தேர்வுக ளைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இவற்றிலுள்ள மேலும் சுவாரசியமான பிற கோணங்களைப் பார்ப்பதற்கு முன்னால், சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் வேறு சில பிரிவுகளையும் அலசுவோம்.

இவற்றை ஒவ்வொரு பிரிவாகப் பார்க்கலாம்.

முதல் பிரிவு தொடர்புபடுத்துதல்.

தொடர்புபடுத்திப் பார்ப்பது என்பது மனித இயல்பு. பகுத்தறிவின் முக்கியமான அம்சம் அது. ஆனால் சரியான முறையில் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லையென்றால் விப ரீதங்கள் விளையும். இதனால் உறவு முறைகளும், நட்பும் பாதிக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, தேர்வுகளில் வெற்றி பெறாமலும் போகலாம்.

எடுத்துக்காட்டு

வழக்கறி ஞர் : நீதிமன்றம்

இந்தக் கேள்விக்கு நான்கு விடைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை

1) கதாசிரியர் : கதை

2) பரப்பளவு : நிலம்

3) ஹோட்டல் : சர்வர்

4) பேராசிரியர் : கல் லூரி

மேலே உள்ள நான்கில் எது சரியான விடை? அதாவது கேள்வியில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. அவற்றுக்கிடையே உள்ள அதே தொடர்பு நீங்கள் தேர்ந்தெடுக்கும் விடையிலும் இருக்க வேண்டும். இப்போது நான்கு விடைகளையும் பார்ப்போம். இரண்டாவது விடை தவறானது என்பது தெரிந்துவிடுகிறது. ஏனென்றால் அதில் மனித னே இல்லை.

வழக்கறிஞர் என்பவர் நீதிமன்றத்தில் பணி புரிபவர். இதே அடிப்படை எந்தப் பதிலில் இருக்கிறது என்று பார்ப்போம். கதாசிரியர் கதையை எழுதுகிறாரே தவிர கதையில் பணிபுரியவில்லை. நிலம், பரப்பளவு ஆகியவை இந்த அடிப்படையில் பொருத்தமானதாக இல்லை.

ஹோட்டலில் சர்வர் வேலை செய்கிறார். கல் லூரியில் பேராசிரியர் வேலை செய்கிறார். அப்படிப் பார்த்தால் இரண்டு விடைகளுமே சரியாக இருக்கிறதே என்கிறீர்களா? அவை எந்த வரிசையில் இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

கேள்வியில் வழக்கறிஞர் முதலிலும், கல் லூரி பிறகும் உள்ளன. ஆனால் மூன்றாவது விடையில் சர்வர் முதலில் இல்லை. இரண்டாவதாகத்தான் இருக்கிறது. நான்காவது விடையான ‘பேராசிரியர்- கல்லூரி’ என்பதில் இந்த வரிசை சரியாக இருக்கிறது. எனவே அதுதான் சரியான விடை.

இப்போது கீ ழே உள்ள கேள்விக்கு விடையளியுங்கள்.

கொடி : நாடு

1) சிப்பாய் : யுத்தம்

2) சைவம் : பசு

3) குள்ள நரி : தந்திரம்

4) முல்லை : பாரி வள்ளல்

கீழே உள்ள விள க்கங்களைப் படிப்பதற்கு முன்னால், நீங்களே முயன்று கேள்விக்கான விடையைக் கண்டுபிடியுங்கள். பிறகு தொடர்ந்து படியுங்கள்.

கொடி என்று கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை மரம், செடி போன்ற வரிசையில் வரக்கூடிய கொடி அல்ல. அது தேசியக் கொடி. இப்படி வைத்துக் கொண்டால், நான்காவது விடை சரியானது அல்ல என்பது தெரிந்துவிடும். (ஒருவேளை நான்காவது விடை முல்லை : பரம்பு (பரம்பு என்பது பாரி வள்ளல் ஆண்ட நாடு) என்பதாக மாற்றிப் போடப்பட்டிருந்தால் அந்தப் பதிலை ஓரளவாவது பரிசீலிக்கலாம்.

எப்போதுமே பதில்களை அலசுவதற்கு முன்னால் கேள்வி பற்றிய தெளிவு இருக்க வேண்டும். கொடிக்கும், நாட்டுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்ன? கொடி என்பது அந்த நாட்டி ன் குறியீடு. (அதாவது இரண்டு நாடுகளுக்கு ஒரே கொடி இருப்பதில்லை) இந்தக் கோணத்தில் பார்த்தால், மூன்றாவது விடைதான் சரியானது என்பது உங்களுக்கு விளங்கி விடும். அதாவது தந்திரம் என்பதன் குறியீடு குள்ளநரி.

தொடர்புபடுத்துதல் தொடர்பாக இன்னொரு வகையிலும் கேள்விகள் அமையலாம். இதோ ஓர் எடுத்துக்காட்டு :

பெருமழை : தூறல். புயல் - ?

1) சுனாமி

2) சூறாவளி

3) தென்றல்

4) நாசம்

எதுபோ ன்ற விடை எதிர்பார்க்கப்படுகிறது என்பது புரிகிறது அல்லவா? பெருமழை என்பதற்கும், தூறல் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ. அதே தொடர்பு புயல் என்பதற்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விடைக்கும் இருக்க வேண்டும்.

பெருமழையின் ஒரு மிகச்சிறிய தன்மையான வெளிப்பாடுதான் தூறல்.

பெருமழையின் விளைவு தூறல் அல்ல. எனவே புயலின் விளைவான நாசம் இதற்குச் சரியான விடையல்ல. எனவே நான்காவது விடையை நீக்கிவிடலாம்.

புயலின் மற்றொரு பெயர் என்று சூறாவளியைக் குறிப்பிடலாம். ஆனால் பெருமழையின் மறுபெயர் தூறல் அல்ல. எனவே இரண்டாவது விடையும் தவறு.

புயலைப் போல சுனாமியும் ஓர் இயற்கைப் பேரிடர். ஆனால் தூறல் இயற்கைப் பேரிடர் அல்ல. எனவே முதல் விடையும் தவறு என்றாகி விடுகிறது.

இப்போது மூன்றாவது விடை யைப் பார்ப்போம். புயலின் தன்மையான, ஏற்கக்கூடிய வடிவம் தென்றல். எனவே இதுவே சரியான விடை.

இப்போது இதே போன்ற இன்னொரு கேள்வி. விடை கண்டுபிடியுங்கள்.

கறுப்பு: கடற் கொள்ளையர் - வெண்மை : ?

அ) மதர் தெரஸா

ஆ) தேசியக் கொடியின் நடுவே

இ) சமாதானம்

ஈ) தீவட்டிக் கொள்ளையர்கள்?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க கடற்கொள்ளையர்கள் தங்கள் கப்பலில் கறுப்புக் கொடியைக் கட்டி இருப்பார்கள் என்று தெரிந்திருக்க வேண்டும் (அதில் மண்டை ஓடும், இரண்டு வாள்கள் குறுக்கு வாட்டிலும் இருக்கக் கூடும்). இந்தக் கோணத்தில் தான் நீங்கள் யோசிக்க வேண்டுமே தவிர, ‘மதர் தெரஸா வெள்ளை ஆடை அணிந்திருப்பார். கடற்கொள்ளையர்கள் கறுப்பு ஆடை அணிந்திருக்க வாய்ப்பு உ ண்டு’ என்று நினைத்து முத ல் பதிலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

அதாவது விடையில் உள்ள தொடர்பை முதலில் யோசிக்காதீர்கள். கேள்வியில்தான் உங்கள் கவனமும், தெளிவும் முதலில் இருக்க வேண்டும்.

‘கடற்கொள்ளையர்கள். கப்பலில் கறுப்புக் கொடி’ என்று முதலில் நாம் தீர்மானித்தோம். ஆனால் அப்படிப் பார்த்தால் எந்த விடையும் ஒத்துவரவில்லை.

எனவே கேள்வியில் வேறு தொடர்பு இருக்கிறதா என்று பா ர்க்க வேண்டும். ‘கறுப்புக் கொடி, கடற்கொள்ளையர்களை உணர்த்துகிறது’. இந்த லாஜிக்கின்படிப் பார்த்தால், வெள்ளைக் கொடி சமாதானத்தை உணர்த்துகிறது. எனவே மூன்றாவது விடைதான் சரியானது.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு? Empty Re: சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?

Post by செந்தில் Wed Jul 02, 2014 10:37 am

 கைதட்டல் பகிர்வுக்கு நன்றி  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum