Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடல் மீன் ஏன் உப்புக் கரிப்பதில்லை?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கடல் மீன் ஏன் உப்புக் கரிப்பதில்லை?
ஓவியம்: தர்மா நிலா டீச்சர் குடும்பத்தினர் கடற்கரைக்குச் சென்றி ருந்தனர். ரஞ்சனியும் கவினும் கடலில் கால் நனைத்து மகிழ்ந்தார்கள். வேகமாக வரும் அலை தள்ளி இருவரும் கீழே விழுவதும், அலை வரும் நேரத்தில் மேலே குதித்து எழும்புவதுமாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
திடீரென வேகமாக வந்த அலை ஒன்று கவினைக் கீழே தள்ளிப் புரட்டிவிட்டது. தண்ணீரில் விழுந்ததால், கவின் வாய்க்குள் கடல் நீர் புகுந்து விட்டது. கடல் நீர் உப்புக் கரித்ததால், தூ.. தூ.. என துப்பிக்கொண்டே இருந்தான். அவனைப் பார்த்து ரஞ்சனி விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ரொம்ப நேரமா அலைல நிக்கிறீங்க. நேரமாச்சு, கரைக்கு வாங்க” என்று நிலா டீச்சருடன் கரையில் உட்கார்ந்திருந்த அப்பா குரல் கொடுத்தார்.
என்றாலும், இருவரும் தொடர்ந்து கடல் நீரில் விளை யாடிக்கொண்டே இருந்தார்கள். தன்னைப் பார்த்துச் சிரித்த ரஞ்சனியைத் தண்ணிக்குள் தள்ளினான் கவின்.
“போதும் வாங்க ரெண்டு பேரும்” என்று இப்போது நிலா டீச்சரும் கூப்பிட்டார்.
கரையேற மனசே இல்லாமல், இருவரும் மெதுவாகக் கரையேறி வந்தார்கள். கடல் நீரைக் குடித்ததால் இப்போதும் துப்பிக்கொண்டிருந்த கவினைப் பார்த்துக் கேலி செய்தாள் ரஞ்சனி.
“போதும் ரஞ்சனி. அவன் அழுதுருவான். இதோட விட்டுடு” என்றார் நிலா டீச்சர்.
“அய்யோ. சரியான உப்பு. தாங்கவே முடியலம்மா” என்றான் கவின்.
அவன் சொன்னதைக் கேட்டு இப்போது அனைவருமே சிரித்துவிட்டனர்.
இப்போது கவினுக்கு திடீரென ஒரு கேள்வி பிறந்தது.
“கடல் நீர் இப்படி உப்பு கரிக்குதே. ஆனா, கடல் நீரில் வாழும் மீனைச் சாப்பிடுறப்ப மட்டும் உப்பு கரிப்பதில்லையே. இது எப்படிம்மா?” என்று கேட்டான் கவின்.
“பரவாயில்லை கவின். குப்புற விழுந்து கடல் நீரை குடிச்சதால, உனக்கு நல்ல கேள்வி கிடைச்சிருக்கு” என்று கேலி செய்தார் நிலா டீச்சர்.
“அம்மா ரஞ்சனியை மாதிரி நீங்களும் கேலி செய்யாதீங்க. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்றான் கவின்.
“சரி.. சரி.. சொல்றேன். உண்மையிலேயே இது ரொம்ப நல்ல கேள்விதான்.
உப்பு நிறைந்த கடல் நீரில மீன்கள் வசித்தாலும், அந்த உப்போட தாக்கம் அவற்றின் உடலுக்குள்ள செல்லாதபடி தடுக்கும் தகவமைப்பு மீன்கள் கிட்ட இருக்கு. மனுஷங்க உள்ளிட்ட பாலூட்டிகள் நுரையீரலால் சுவாசிக்கிறோம். ஆனால், மீன்கள் செவுள்களால் சுவாசிக்கும். அதாவது மீன்கள் வாயால் நீரை உறிஞ்சிட்டு, செவுள்கள் வழியாக வெளி யேற்றும். அப்போது செவுள் பகுதியில் இருக்குற ஏராளமான நாளங்கள் நீரினுள் கரைந்திருக்கிற ஆக்சிஜனை மட்டும் உறிஞ்சி உடலுக்குள்ள அனுப்பும். நீரில் கரைந்திருக்கும் உப்பு உள்பட மற்ற அனைத்தும் நீரோட சேர்ந்து கழிவுகளா வெளியே வந்துடும்.
அதேபோலத்தான் உண்ணும் உணவுப் பொருட் கள்ல உப்பு இருந்தாலும், தேவைக்கு அதிகமாக இருக்குற உப்பை கழிவா வெளியேற்றும் பணியை உணவு மண்டலம் செய்கிறது. ஆகவே, உப்பு நிறைந்த தண்ணிக்குள்ள வசித்தாலும், அந்த உப்பு மீன்களோட உடலுக்கு செல்லாமல் தடுக்கும் தகவமைப்பு உள்ள தால மீன்களின் சதைப் பகுதியை நாம சாப்பிடுறப்ப உப்பு கரிக்கிறதில்ல” என்று விளக்கமளித்தார் நிலா டீச்சர்.
“அம்மா கவினுக்கும் இப்படி ஒரு தகவமைப்பு இருந்தால் கடல் தண்ணியை குடிசிட்டு தூ… தூ…ன்னு துப்பாம இருந்திருப்பான்லம்மா” என்று ரஞ்சனி கூறவும், கவின் உள்பட எல்லோருமே சிரித்தனர்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடல் மீன் ஏன் உப்புக் கரிப்பதில்லை?
கதையுடன் கூறிய தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|