தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?

View previous topic View next topic Go down

விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா? Empty விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?

Post by நாஞ்சில் குமார் Fri Jul 11, 2014 12:45 pm

நெருக்கடிகள் தன்னைச் சூழ்ந்துகொள்ளும் போதெல்லாம் காலந்தோறும் மனிதன் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். தனது குரலைக் கடவுள் காதுகொடுத்துக் கேட்பதில்லை என்றும், கடவுள் செவிடாகிவிட்டார் என்று அவரைத் திட்டித் தீர்க்கவும் தவறுவதில்லை.

தன்னோடு தொடர்புகொள்ள மனிதனுக்கு ஒரு பாலம் தேவைப்படும் என்பதை உணர்ந்து ‘ஜெபம்’ என்கிற சாதனத்தை மனிதனுக்குப் பரிசாகக் கொடுத்தார் கடவுள். உலகில் வாழும் எல்லா மதங்களிலும் ஜெபம் இருக்கிறது.

ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகளில், வெவ்வேறு வடிவங்களில் ஜெபம் செய்யப்படுகிறது. வழிமுறைகள் வேறாக இருந்தாலும், இறைவனோடு ‘ நட்பு’ பாராட்டும் வரமாக ஜெபம் இருப்பதை நம்மில் பலரும் மறந்துவிட்டோம்.

கிறிஸ்தவம் காட்டும் ஜெபம்

உலகைப் படைத்து, உலகையும் மனித இனத்தையும் காத்துவரும் பரலோகத் தந்தையை நோக்கி எவ்வாறு ஜெபம் செய்வது என்பதை, கிறிஸ்தவத்தின் ஸ்தாபகராக இருக்கும் இயேசு கிறிஸ்து, தனது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ‘கர்த்தர் கற்பித்த ஜெபம்’ என்று அழைக்கப்படும் அந்த ஜெபமானது, தேவதந்தையிடம் நாம் கேட்க வேண்டியது என்ன என்பதைச் சுருக்கமாகவும், தாழ்மையுடனும் வரையறுக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து, ‘கர்த்தர் கற்பித்த ஜெபம்’ இன்றும் முக்கியக் கருவியாக இருப்பதற்கு, அதில் இருக்கும் தாழ்மையும், தன்னை எளிய துரும்பாக்கிப் பரலோகத் தந்தையிடம் இறைஞ்சும் கீழ்ப்படிதலுமே முக்கியக் காரணங்கள்.

இயேசு கற்பித்த அந்த ஜெபம் இப்படித் தொடங்குகிறது... “வானுலகில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய திருப்பெயர் போற்றப்படுவதாக. உம்முடைய ராஜ்ஜியம் வருக. உம்முடைய சித்தம் வானுலகில் செய்யப்படுவதுபோலப் பூவுலகிலும் செய்யப்படுவதாக.

எங்கள் தினசரி உணவை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களை மன்னியும். எங்களைச் சோதனைகளில் விழ விடாமல் தீமைகள் அனைத்திலிருந்தும் எங்களைக் காத்தருளும்” என்று முடிகிறது.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா? Empty Re: விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?

Post by நாஞ்சில் குமார் Fri Jul 11, 2014 12:45 pm

வாழ்வின் நிர்வாக அதிகாரி

எனக்கு என்ன தேவை என்பது என்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியாதா? நான் ஜெபம் செய்தால் மட்டும்தான் அவர் என்னைப் பார்த்துக் கொள்வாரா? என்பதுதான் சிந்திக்கத் தொடங்கிய மனிதன் கேட்ட கேள்விகளில் ஒன்று.

ஆனால் நீங்கள் பணிபுரியுமிடத்தில் உங்களது உயர் அதிகாரியிடம் நீங்கள் பெருமை பொங்க, மரியாதையில்லாமல் ‘நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும். உங்களுக்கு வேறு வழியில்லை’ என்ற தொனியில் விடுப்போ, சலுகையோ அல்லது உங்கள் உரிமையையோ நீங்கள் கேட்டால் அவர் உங்களுக்குக் கொடுப்பார் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? அதைப் போலவேதான் பரமபிதா உங்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்து உங்கள் கோரிக்கைகளைக் கேட்க வேண்டுமானால், நீங்கள் அவருக்கும் அவர் வகுத்தளித்த வாழ்முறைக்கும் (கட்டளைகள்) மரியாதை காட்டும்படி எதிர்பார்க்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை.’ என்கிறது நீதிமொழிகள் (15:29).

அப்படியானால் கடவுளிடம் ஜெபிக்கும்போது மரியாதையான தாழ்மையான சுயநலமில்லாத மனநிலை நமக்கு வேண்டும். கடவுள் நம் வாழ்வின் நிர்வாகி என்பதைப் புரிந்துகொண்டால், ஜெபம் நம்மைக் கர்வமில்லாதவர்களாக வைத்திருக்க உதவும் அற்புதச் சாதனம் என்பதை உணர முடியும்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா? Empty Re: விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?

Post by நாஞ்சில் குமார் Fri Jul 11, 2014 12:46 pm

கடவுளுக்கு நேரமிருக்கிறதா?

சரி கடவுளை எனது வாழ்வின் நிர்வாகியாக ஏற்றுக்கொள்கிறேன். அப்படிப் பார்த்தாலும் அவருக்கு எனது ஜெபங்களைக் கேட்டுக்கொண்டிருப்பதுதான் வேலையா? மனிதனால் எல்லையே கண்டறிய முடியாத இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பதில் அவருக்கு எத்தனை வேலைப் பளு இருக்கும்? எனது ஜெபங்களைக் கேட்க அவருக்கு நேரமிருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

ஆனால் ஜெபம் என்பது கடவுளுடன் கொண்டுள்ள மெய்யான உறவின் திறவுகோலாக இருப்பதை “உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்” என்ற சங்கீதப் புத்தகத்தின் வசனம் (சங்கீதம் 9:10) நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இந்த இடத்தில் நீங்களும் தினசரி இதே மனநிலையுடன்தான் ஜெபிக்கிறீர்களா என்பதை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா? Empty Re: விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?

Post by நாஞ்சில் குமார் Fri Jul 11, 2014 12:47 pm

உறவு இருந்தால்தான் பாலம்

கடவுளுக்கும் உங்களுக்குமான நட்பின் திறவுகோலாக இருக்கும் ஜெபத்தை நீங்கள் கைக்கொள்வதற்கு முன்பு, நீங்கள் ஜெபித்தால் கடவுள் செவிகொடுத்துக் கேட்பார் என்று திடமாக நம்பும் அளவுக்குக் கடவுளை உங்களுக்குத் தெரியுமா? அவரது அன்புக்கும் பாதுகாவலுக்கும் உரிய ஆட்டுக்குட்டியாக நீங்கள் இருக்கிறீர்களா என்பதைச் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

ஆம்.. நான் கீழ்ப்படிதல் உள்ள ஆட்டுக்குட்டி என்று நீங்கள் திடமாக உங்களைக் குறித்து நம்பினால், “உங்கள் ஜெபத்தைக் கேட்கவும் பதிலளிக்கவும் முடிந்த ஒருவரிடம் நீங்கள் பேசுகிறீர்கள் (எபேசியர் 3:20)” என்கிறார் எபேசியர். அப்படியானால் உங்கள் குரலைக் கேட்கவல்ல அவரது படைப்பு நீங்கள். தன் படைப்பானது தன்னோடு கீழ்ப்படிதலோடு தன்னை அன்பு செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்.

காரணம் “அவரே மனித குலத்தைப் படைத்தார்; ஆகவே நாம் நம்மைப் புரிந்துகொள்வதைக் காட்டிலும் அவர் நம்மை நன்றாகப் புரிந்துகொள்கிறார் (சங்கீதம் 100:3). அவர் “அநாதியாய் என்றென்றைக்கும்” இருப்பதால் எல்லையில்லா அனுபவமிக்கவராகவும் இருக்கிறார். (சங்கீதம் 90:1, 2) என்று சங்கீதமும், ‘அவரால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் ஒன்றுமில்லை(ஏசாயா 40:13)’ என ஏசாயா நூலும் கூறுகின்றன.

அப்படிப்பட்ட கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமில்லை என்பது மட்டுமல்ல. பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தியை நமக்குத் தருவதிலும் அவருக்கு நிகரான ஞானவான் யாருமில்லை. ஏனெனில் நீங்கள் கடவுளிடம் பேசுகையில், ஞானத்தின் பிறப்பிடத்தையே அணுகுகிறீர்கள்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா? Empty Re: விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?

Post by நாஞ்சில் குமார் Fri Jul 11, 2014 12:47 pm

குரலைக் கேட்க மாட்டாரா?

மேலும் ஒப்பிடவியலாத அவரது சக்தியால் கடவுளை மனிதன் அறிந்துகொள்ளவில்லை. மாறாக அளவிட இயலாத அவரது அன்பை வைத்தே அறியப்பட்டிருக்கிறார். ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்’ என்று யோவான் நற்செய்தி (4:8) கூறுகிறது. அவரது மாபெரும் இயல்பாயிருக்கும் அன்பினால்தான், அவர் நம் ஜெபத்தைக் கேட்பார் என நம்புகிறோம். நித்திய வாழ்வை அடையும்படிக்குத் தம் மகனை மீட்கும் பலியாக மனித குலத்துக்குத் தந்தருளியது அவரது அன்புக்கு மிகச் சிறந்த சாட்சி (யோவான் 3:16) என எடுத்துக் காட்டுகிறார் யோவான்.

இத்தனை அன்பானவர் நமது ஜெபத்தைப் புறகணித்துவிடுவார் என்ற எண்ணத்துக்கே இடமில்லை. உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் ஒரே நேரத்தில் பேசினாலும், அனைத்திற்கும் செவிகொடுக்கும் செவி கடவுளிடம் இருக்கிறது.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா? Empty Re: விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum