Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காவனூர். சீனிவாசன் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
காவனூர். சீனிவாசன் கவிதைகள்
நிராயுதபாணியான
என்னை
அது
கடித்துக் குதறலாம்
அல்லது
விழுங்கலாம்
அடித்துப்போடலாம்
சிதைத்து
சின்னாபின்னமுமாக்கலாம் ...
வியர்த்துக்கொட்டி
விரல்கள்
நடுக்கமுறுகின்றன.
அச்சத்தின் அடுக்குகள்
அனுமதியின்றி
குடியேறுகின்றன.
உள் நுழையாமல்
திராணியற்று
வெளியில் நிற்கிறேன்
பயத்தின்
மிரட்சியோடு.
சிரித்தபடி
நகர்கிறோம் .
இருந்தாலும்
இருண்டுகிடக்கும்
அவரவர்
மனக்குகைக்குள்
இன்னும்
உலவிக்கொண்டுதானிருக்கிறது
மிருகங்கள்
பசுத்தோல்
போர்த்திக்கொண்டு.
என்னை
அது
கடித்துக் குதறலாம்
அல்லது
விழுங்கலாம்
அடித்துப்போடலாம்
சிதைத்து
சின்னாபின்னமுமாக்கலாம் ...
வியர்த்துக்கொட்டி
விரல்கள்
நடுக்கமுறுகின்றன.
அச்சத்தின் அடுக்குகள்
அனுமதியின்றி
குடியேறுகின்றன.
உள் நுழையாமல்
திராணியற்று
வெளியில் நிற்கிறேன்
பயத்தின்
மிரட்சியோடு.
சிரித்தபடி
நகர்கிறோம் .
இருந்தாலும்
இருண்டுகிடக்கும்
அவரவர்
மனக்குகைக்குள்
இன்னும்
உலவிக்கொண்டுதானிருக்கிறது
மிருகங்கள்
பசுத்தோல்
போர்த்திக்கொண்டு.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
இரவைக் காணாது
விடியலொன்றில்
துடித்துப்போனான்
இரவைத்திருடி
கையில்
வைத்திருந்தவன். .
கைதுசெய்து
வைத்திருந்த
பின்வந்த
பகலையும்
அவனிடமிருந்து
விடுவித்தது
மீள வந்த இரவு..
ஒளியையும்
இருளையும்
மாற்றி மாற்றி
பிடிப்பதும்
தொலைப்பதுவுமாய்
தொடர்கிற
அவனது
போராட்டத்தில்
தினமும்
தவறாமல்
வந்துபோகிறது
சூரியனும், நிலவும்....
விடியலொன்றில்
துடித்துப்போனான்
இரவைத்திருடி
கையில்
வைத்திருந்தவன். .
கைதுசெய்து
வைத்திருந்த
பின்வந்த
பகலையும்
அவனிடமிருந்து
விடுவித்தது
மீள வந்த இரவு..
ஒளியையும்
இருளையும்
மாற்றி மாற்றி
பிடிப்பதும்
தொலைப்பதுவுமாய்
தொடர்கிற
அவனது
போராட்டத்தில்
தினமும்
தவறாமல்
வந்துபோகிறது
சூரியனும், நிலவும்....
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
கைதவறி
விழுந்துடைந்த
என்
கனவொன்றில்
நான்
சிதறிக்கொண்டிருக்கிறேன்
எப்படியோ
தப்பித்திருக்கிறாய்
நீ மட்டும்.
விழுந்துடைந்த
என்
கனவொன்றில்
நான்
சிதறிக்கொண்டிருக்கிறேன்
எப்படியோ
தப்பித்திருக்கிறாய்
நீ மட்டும்.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
என்
வாசலை
பெயர்த்துக்
கொண்டிருக்கிறேன்
நீ
வரைந்த
அதிகாலைக் கோலத்தின்
கீழே
வைத்திட.
வாசலை
பெயர்த்துக்
கொண்டிருக்கிறேன்
நீ
வரைந்த
அதிகாலைக் கோலத்தின்
கீழே
வைத்திட.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
சித்திரம் விட்டு
வெளியே வந்த
ராட்சதப்பறவை
முதலில்
விழுங்குவதெனத்
தீர்மானித்திருக்கிறது
வரைந்த
என்னை.
வெளியே வந்த
ராட்சதப்பறவை
முதலில்
விழுங்குவதெனத்
தீர்மானித்திருக்கிறது
வரைந்த
என்னை.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
கணக்கிலெடுக்காமல்
விடுபட்டிருக்கிறேன்.
நான்.
இறுதிச்
சொல்லொன்று
கிடைக்காத
கவிதையாய்
கனக்கிறது,
பெரும்பாறையென
பெயரற்ற
ஒரு வலி.
அடையாளங்களை
கழற்றியெறிந்துவிட்டு
உறைந்துகிடக்கிறது
என்னோடு
மௌனம் .
விழித்திருக்கிறது
காலம்
எங்கும்
இளைப்பாற முடியாமல்.
மிச்சமிருக்கின்றன
எல்லோருக்குமாய்
வெற்றிடங்கள்.
எதற்காவது
ஒத்துவாருங்கள்
ஒன்று
நிரப்பிக்கொள்கிறேன்
இல்லை
கொஞ்சம் பொறுங்கள்
நிரம்பிக்கொள்கிறேன்.
விடுபட்டிருக்கிறேன்.
நான்.
இறுதிச்
சொல்லொன்று
கிடைக்காத
கவிதையாய்
கனக்கிறது,
பெரும்பாறையென
பெயரற்ற
ஒரு வலி.
அடையாளங்களை
கழற்றியெறிந்துவிட்டு
உறைந்துகிடக்கிறது
என்னோடு
மௌனம் .
விழித்திருக்கிறது
காலம்
எங்கும்
இளைப்பாற முடியாமல்.
மிச்சமிருக்கின்றன
எல்லோருக்குமாய்
வெற்றிடங்கள்.
எதற்காவது
ஒத்துவாருங்கள்
ஒன்று
நிரப்பிக்கொள்கிறேன்
இல்லை
கொஞ்சம் பொறுங்கள்
நிரம்பிக்கொள்கிறேன்.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
அள்ளிமுடித்த
ஈரக்கூந்தலிலிருந்து
உதிர்கிறது
சொட்டுச்சொட்டாய்
கவிதைகள்..
மழையில்
நனைந்துவந்த
நீ
உள் நுழையாமல்
வாசலிலேயே
நிற்கிறாய்
மழைத்துளிகளின்
தலை துவட்டி .
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிதறுகிறது
கலைத்துப்போட்டு
அடுக்கமுடியாமல்
உன் ஞாபகங்கள்.
ஈரக்கூந்தலிலிருந்து
உதிர்கிறது
சொட்டுச்சொட்டாய்
கவிதைகள்..
மழையில்
நனைந்துவந்த
நீ
உள் நுழையாமல்
வாசலிலேயே
நிற்கிறாய்
மழைத்துளிகளின்
தலை துவட்டி .
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிதறுகிறது
கலைத்துப்போட்டு
அடுக்கமுடியாமல்
உன் ஞாபகங்கள்.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
வழி
தவறிய
மேய்ப்பனை
பத்திரமாய்
கொண்டுவந்து
சேர்த்தது
மந்தையிலிருந்து
தப்பியோடிய
ஆடு ஒன்று.
தவறிய
மேய்ப்பனை
பத்திரமாய்
கொண்டுவந்து
சேர்த்தது
மந்தையிலிருந்து
தப்பியோடிய
ஆடு ஒன்று.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
பறவைகளின்
மொழி
புரியவில்லை
தெரிந்திருந்தால்
விட்டு
விலகியிருப்பேன்
மனிதர்களை.
மொழி
புரியவில்லை
தெரிந்திருந்தால்
விட்டு
விலகியிருப்பேன்
மனிதர்களை.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
மலராய்
இருக்கச்
சம்மதம் தான்
இருப்பினும்
விருட்சமாய்
ஆகவே
கிடந்து தவிக்கிறது
மனசு...
இருக்கச்
சம்மதம் தான்
இருப்பினும்
விருட்சமாய்
ஆகவே
கிடந்து தவிக்கிறது
மனசு...
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
இன்னும்
தரையிறங்காமல்
சுற்றிக்கொண்டே
இருக்கிறது
கனவுகளைச்
சுமந்துகொண்டு
மனம்.
நினைவுகளின்
பார வண்டியை
இழுத்துக்கொண்டு
தனிமைப்பாதையில்
ஒரு
ஓரமாய்
நான்.
சொற்களற்றுப்போன
இடைவெளியை
நிரப்பிப்போகிறதுன்
புன்னகை.
முற்றுப்புள்ளியில்
கரைவதும்
எழுவதுமாய்
இது
என்ன விளையாட்டு?
இன்னும்
முற்றுப்பெறாமல்...
தரையிறங்காமல்
சுற்றிக்கொண்டே
இருக்கிறது
கனவுகளைச்
சுமந்துகொண்டு
மனம்.
நினைவுகளின்
பார வண்டியை
இழுத்துக்கொண்டு
தனிமைப்பாதையில்
ஒரு
ஓரமாய்
நான்.
சொற்களற்றுப்போன
இடைவெளியை
நிரப்பிப்போகிறதுன்
புன்னகை.
முற்றுப்புள்ளியில்
கரைவதும்
எழுவதுமாய்
இது
என்ன விளையாட்டு?
இன்னும்
முற்றுப்பெறாமல்...
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
நாம்
வழக்கமாய்ச்
சந்தித்து
திரும்புமிடத்திலிருந்து
உனக்குத் தெரியாமல்
கிள்ளி
எடுத்துவந்த
வார்த்தையொன்றின்
நுனியில்
அமர்ந்து
எட்டிப்பார்க்கிறது
உன் ஞாபகம்.
வழக்கமாய்ச்
சந்தித்து
திரும்புமிடத்திலிருந்து
உனக்குத் தெரியாமல்
கிள்ளி
எடுத்துவந்த
வார்த்தையொன்றின்
நுனியில்
அமர்ந்து
எட்டிப்பார்க்கிறது
உன் ஞாபகம்.
Re: காவனூர். சீனிவாசன் கவிதைகள்
மெல்ல
நடக்கும்போது
ஊன்றுகோலைத்
தவறவிட்ட
முதியவரொருவர்
தடுமாறி
விழுகையில்
அவரைத்
தாங்கிப்பிடித்து
நிறுத்தியது
எதிரில் வந்த
ஒரு குழந்தையின்
மென் சிரிப்பு.
நடக்கும்போது
ஊன்றுகோலைத்
தவறவிட்ட
முதியவரொருவர்
தடுமாறி
விழுகையில்
அவரைத்
தாங்கிப்பிடித்து
நிறுத்தியது
எதிரில் வந்த
ஒரு குழந்தையின்
மென் சிரிப்பு.
Similar topics
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நடிகர் சீனிவாசன் கைதால் 4 படங்கள் முடக்கம்: டைரக்டர்கள் தவிப்பு
» கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நடிகர் சீனிவாசன் கைதால் 4 படங்கள் முடக்கம்: டைரக்டர்கள் தவிப்பு
» கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|