Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எலும்புத் தேய்மானம் தவிர்க்கலாமே?
Page 1 of 1 • Share
எலும்புத் தேய்மானம் தவிர்க்கலாமே?
மனிதனின் உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவை அமைந்துள்ளன. இந்த எலும்புகள் ஒவ்வொன்றும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு உதவுவதாகவே இருக்கிறது. இவை மனித உடலுக்கு ஒரு அழகிய வடிவமைப்பையும் உடல் கட்டமைப்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் உள்ள மிக உறுதியான பகுதிகளாகும். மற்ற உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகள் மிக முக்கிய பணிய செய்து வருகின்றன. அதாவது எடுத்துக்காட்டாக மூளை, இருதயம், சிறுநீரகம், சுவாசப்பை போன்ற பகுதிகள் எலும்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட கூடுகளில் மிக பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.
மனிதன் எலும்புகள் மட்டும் சேர்ந்தவற்றை மனித எலும்புக் கூடு என்கிறோம். அதாவது மூளை மண்டைக் கூட்டிற்குள்ளும், இருதயம், சுவாசப்பை நெஞ்சு கூட்டிற்குள்ளும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது போன்ற பாதுகாப்புகளை நமக்கு அளிக்கின்ற எலும்புகள் விபத்துக்களின் போது சில நேரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உடைவதை மருத்துவர்கள் எலும்பு முறிவு (Bone Fracture) என்கிறார்கள். எலும்பு முறிவுகளைக் குணப்படுத்த நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சரியான நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். இதற்கென சிறப்பு எலும்பு முறிவு மருத்துவர்கள் உள்ளனர்.
விபத்தினால் ஏற்படும் எலும்பு முறிவுகள் தவிர எலும்பைப் பாதிக்கும் பல்வேறு நோய்களும் உள்ளன. இவற்றில் தற்போது பலரையும் பயமுறுத்தி வரும் பாதிப்பு எலும்புத் தேய்மானம். இதனை ஆங்கிலத்தில் osteoporosis என்பார்கள். இதை ஒரு நோய் என்பதை விட குறைபாடு என்பதுதான் சரியானது. அதாவது, மனிதன் முதுமை அடையும் போது ஏற்படும் உடல் மாற்றங்களில் இந்த எலும்புகளும் சேதம் அடையத் தொடங்கி விடுகின்றன. அதாவது இதனை நாம் நம் கண்களால் காண முடியாது. மிகத் மெதுவாக தேயத் தொடங்கும் எலும்புகள் பிற்காலத்தில் ஏற்படுத்தும் நோயின் தீவிரம் உயிர் இழப்பு வரை கொண்டு செல்லக் கூடியது.
அதாவது மனிதனின் நாற்பது வயதுத் தொடக்கத்தில் எலும்புகள் தனது வலுவை இழக்கத் தொடங்கி விடுகின்றன. மனிதர்களில் ஆண்களை விட பெண்களையே எலும்புத் தேய்மானம் அதிகமான பாதிப்புகுள்ளாக்குகிறது. பெண்களுக்கு நாற்பது வயதில் இந்த நோயின் தாக்கம் தொடங்கி அவர்களின் வயது அதிகரிப்பிற்கேற்ப நோயின் தீவிரமும் அதிகரித்து பல பக்கவிளைவுகளை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
எலும்புகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் கால்சியம் என்ற தாது உப்பு அவசியமானதாக இருக்கிறது. இந்த தாது உப்பை எலும்புகள் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுத்துக் கொள்ளும் தன்மையுடையன. முதுமையை நெருங்கும் பொழுது உணவுப் பழக்க வழக்கம் குறைந்து போவதால் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு எலும்புத் தேய்மானம் உருவாகத் தொடங்குகிறது. குறிப்பாக, பெண்களில் உதிரப்போக்கு (மாதவிலக்கு) நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து போய்விடுவதால் பெண்களுக்கு இந்தக் குறைபாடு அதிகமாகிறது.
இதனால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள்;
1 . எலும்பு முறிவு
2 . மூட்டு வலி
3 . மூட்டு வாதம்
4 . கழுத்து எலும்பு தேய்மானம்
5 . முதுகு எலும்பு தேய்மானம்
6 . முதுகு வலி
7 . உடல் சோர்வு
8 . அசதி
9 . முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
10 . நடையில் தளர்வு
இது போன்ற பக்க விளைவுகளால் பெண்கள் தங்களது நாற்பது வயது முதல் மிகுந்த அவதிக்குள்ளகிறார்கள். நோய் வந்து அவதிப்படுவதை விட நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம்? அல்லது அதைக் குறைத்துக் கொள்ள என்ன செய்யலாம்? என்பதே சிறந்த சிந்தனையாகும்.
எலும்புத் தேய்மானத்திலிருந்து காத்துக் கொள்ள சில சிந்தனைகள்;
1 . எலும்புகளின் உறுதித் தன்மையைப் பாதுகாக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
2 . நடப்பதால் உடலில் அசதியும், சில சமயம் வலியும் வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது முற்றிலும் தவறானது. தினசரி குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது அவசியம்.
3 . நடைப்பயிற்சியையும் முறையாக செய்வது நல்லது, அதாவது நம் காலுக்கேற்ற இடையூறுகள் ஏதுமில்லாத சரியான அளவுடைய காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி, வாதம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
4 . மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
5 . தினசரி குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்வது நல்லது. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து எலும்புகளுக்குத் தோல் மூலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
6 . கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றில் தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
7 . பச்சைக் காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை உணவுகளில் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
8 . சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக் கொள்ளப் பழகுங்கள்.
9 . காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
10 . மீன்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
11 . புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கமுடையவர்கள் உடலில் உள்ள கால்சியம் அளவைக் குறைக்க வாய்ப்புள்ளதால் அவற்றை விட்டுவிடுதல் நல்லது.
12 . இரவு வேளைகளில் பால் அருந்துவதை விட காலை அல்லது மாலை வேளைகளில் அருந்துவது சிறந்தது.
13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.
-டாக்டர். தி. செந்தில்குமார்
மனிதன் எலும்புகள் மட்டும் சேர்ந்தவற்றை மனித எலும்புக் கூடு என்கிறோம். அதாவது மூளை மண்டைக் கூட்டிற்குள்ளும், இருதயம், சுவாசப்பை நெஞ்சு கூட்டிற்குள்ளும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது போன்ற பாதுகாப்புகளை நமக்கு அளிக்கின்ற எலும்புகள் விபத்துக்களின் போது சில நேரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உடைவதை மருத்துவர்கள் எலும்பு முறிவு (Bone Fracture) என்கிறார்கள். எலும்பு முறிவுகளைக் குணப்படுத்த நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சரியான நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். இதற்கென சிறப்பு எலும்பு முறிவு மருத்துவர்கள் உள்ளனர்.
விபத்தினால் ஏற்படும் எலும்பு முறிவுகள் தவிர எலும்பைப் பாதிக்கும் பல்வேறு நோய்களும் உள்ளன. இவற்றில் தற்போது பலரையும் பயமுறுத்தி வரும் பாதிப்பு எலும்புத் தேய்மானம். இதனை ஆங்கிலத்தில் osteoporosis என்பார்கள். இதை ஒரு நோய் என்பதை விட குறைபாடு என்பதுதான் சரியானது. அதாவது, மனிதன் முதுமை அடையும் போது ஏற்படும் உடல் மாற்றங்களில் இந்த எலும்புகளும் சேதம் அடையத் தொடங்கி விடுகின்றன. அதாவது இதனை நாம் நம் கண்களால் காண முடியாது. மிகத் மெதுவாக தேயத் தொடங்கும் எலும்புகள் பிற்காலத்தில் ஏற்படுத்தும் நோயின் தீவிரம் உயிர் இழப்பு வரை கொண்டு செல்லக் கூடியது.
அதாவது மனிதனின் நாற்பது வயதுத் தொடக்கத்தில் எலும்புகள் தனது வலுவை இழக்கத் தொடங்கி விடுகின்றன. மனிதர்களில் ஆண்களை விட பெண்களையே எலும்புத் தேய்மானம் அதிகமான பாதிப்புகுள்ளாக்குகிறது. பெண்களுக்கு நாற்பது வயதில் இந்த நோயின் தாக்கம் தொடங்கி அவர்களின் வயது அதிகரிப்பிற்கேற்ப நோயின் தீவிரமும் அதிகரித்து பல பக்கவிளைவுகளை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
எலும்புகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் கால்சியம் என்ற தாது உப்பு அவசியமானதாக இருக்கிறது. இந்த தாது உப்பை எலும்புகள் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுத்துக் கொள்ளும் தன்மையுடையன. முதுமையை நெருங்கும் பொழுது உணவுப் பழக்க வழக்கம் குறைந்து போவதால் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு எலும்புத் தேய்மானம் உருவாகத் தொடங்குகிறது. குறிப்பாக, பெண்களில் உதிரப்போக்கு (மாதவிலக்கு) நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து போய்விடுவதால் பெண்களுக்கு இந்தக் குறைபாடு அதிகமாகிறது.
இதனால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள்;
1 . எலும்பு முறிவு
2 . மூட்டு வலி
3 . மூட்டு வாதம்
4 . கழுத்து எலும்பு தேய்மானம்
5 . முதுகு எலும்பு தேய்மானம்
6 . முதுகு வலி
7 . உடல் சோர்வு
8 . அசதி
9 . முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
10 . நடையில் தளர்வு
இது போன்ற பக்க விளைவுகளால் பெண்கள் தங்களது நாற்பது வயது முதல் மிகுந்த அவதிக்குள்ளகிறார்கள். நோய் வந்து அவதிப்படுவதை விட நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம்? அல்லது அதைக் குறைத்துக் கொள்ள என்ன செய்யலாம்? என்பதே சிறந்த சிந்தனையாகும்.
எலும்புத் தேய்மானத்திலிருந்து காத்துக் கொள்ள சில சிந்தனைகள்;
1 . எலும்புகளின் உறுதித் தன்மையைப் பாதுகாக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
2 . நடப்பதால் உடலில் அசதியும், சில சமயம் வலியும் வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது முற்றிலும் தவறானது. தினசரி குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது அவசியம்.
3 . நடைப்பயிற்சியையும் முறையாக செய்வது நல்லது, அதாவது நம் காலுக்கேற்ற இடையூறுகள் ஏதுமில்லாத சரியான அளவுடைய காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி, வாதம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
4 . மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
5 . தினசரி குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்வது நல்லது. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து எலும்புகளுக்குத் தோல் மூலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
6 . கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றில் தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
7 . பச்சைக் காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை உணவுகளில் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
8 . சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக் கொள்ளப் பழகுங்கள்.
9 . காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
10 . மீன்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
11 . புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கமுடையவர்கள் உடலில் உள்ள கால்சியம் அளவைக் குறைக்க வாய்ப்புள்ளதால் அவற்றை விட்டுவிடுதல் நல்லது.
12 . இரவு வேளைகளில் பால் அருந்துவதை விட காலை அல்லது மாலை வேளைகளில் அருந்துவது சிறந்தது.
13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.
-டாக்டர். தி. செந்தில்குமார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எலும்புத் தேய்மானம் தவிர்க்கலாமே?
பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எலும்புத் தேய்மானம் தவிர்க்கலாமே?
பெண்கள் படிக்க வேண்டிய பதிவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|