தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்விற்கு இது அவசியமா?

View previous topic View next topic Go down

வாழ்விற்கு இது அவசியமா? Empty வாழ்விற்கு இது அவசியமா?

Post by நாஞ்சில் குமார் Sat Jul 12, 2014 11:17 pm

முக்காலமும் உணர்ந்தவர் என்று கூறப்பட்ட ஒரு ஞானியைச் சந்திக்க இரு நண்பர்கள் புறப்பட்டு கால்நடையாகச் சென்றனர். இரவு நேரம் வந்ததும், தாங்கள் கொண்டுவந்த போர்வையை விரித்துப் படுத்துறங்கினர். விடிந்தபின் அதை மடித்து எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

ஒரு மரத்த அவர்கள் தேடி வந்த ஞானி கண்களை மூடி அமர்ந்திருந்தார். அவர் கண்திறக்கும் வரை காத்திருந்தனர் நண்பர்கள்.

கண்விழித்த ஞானி அவர் களைப் பார்த்துப் புன்னகைத்து அவர்களை விசாரித்தார். பல விஷயங்களை அவருடன் பேசியபின், முதலாமவன், “ ஐயா, எங்களுக்கு ஒரு ஐயம் எழுந்துள்ளது. ஒருவன் பிறந்தது முதற்கொண்டு வளரும்போது, பகுத்தறிவைப் பயன்படுத்தி அனுபவம் வாயிலாக ஒவ்வொன்றையும் அறிந்துகொண்டே வருகிறான். இதில் அவனுக்கு எது நல்லது, எது கெட்டது என்பது தெரிந்துவிடுகிறது. அப்படியிருக்கையில் ஒருவன் நல்வாழ்க்கை வாழ கல்வியும் பெரியோரது வழிகாட்டுதலும் அவசியமா? அனுபவம் ஒன்றே போதாதா?” என்று கேட்டான்.

ஞானி அவர்கள் கையிலிருந்த போர்வைகளைப் பார்த்தார். அருகிலிருந்த கிணற்றைக் காட்டி, அங்கே ஒரு வாளியும், சவுக்காரத் தூளும் இருப்பதாக கூறி அவர்களின் போர்வைகளை ஊறவைத்து வரச் சொன்னார்.

இருவரும் ஒருவரை யொருவர் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டு தங்கள் போர்வைகளை ஊறவைத்துவிட்டு வந்தனர்.

சிறிது நேரம் கழித்து அந்தப் போர்வைகளை நன்றாக அடித்து, துவைத்து, முறுக்கிப் பிழிந்து வரச் சொன்னார்.

இருவரும் அவ்வாறே செய்து திரும்பி வந்தனர்.

அதன் பிறகு துவைக்கப்பட்ட போர்வைகளில் ஒன்றை வெட்ட வெளியில் கொடி கட்டிக் காயப்போடுமாறும், மற்றொன்றை ஒரு அறையில் பூட்டிவைத்து விட்டு வரவும் ஆணையிட்டார் ஞானி.

மறுமொழி பேசாமல் நண்பர் கள் சொன்னதைச் செய்தனர்.

“மாலையில் என்னை வந்து பாருங்கள்” என்றார் ஞானி.

சாயங்காலம் நண்பர்கள் இருவரும் ஞானியைப் பார்க்க வந்தனர்.

இரண்டு போர்வைகளையும் எடுத்துவரச் சொன்னார் ஞானி.

கொடியில் போட்ட போர்வை நன்கு வெயிலில் காய்ந்து மொடமொடத்து உலர்ந்து வெயில் வாசனையோடு மணமாக இருந்தது. அதை மடித்து வைத்துக்கொண்டனர். மற்றொன்றை எடுத்துவர அறையை நெருங்கிக் கதவைத் திறந்தனர். குப்பென்று ஊறல் வாடை கலந்த முடைநாற்றம் அவர்கள் குடலைப் பிடுங்கியது.

ஞானியிடம் வந்தனர்.

“ஐயா, இந்தப் போர்வை அருமையாகக் காய்ந்துவிட்டது. மடித்துக்கொண்டு வந்துவிட்டோம். இன்னொரு போர்வையின் அருகில்கூட செல்ல முடியவில்லை.” என்றனர்.

“இரண்டையும் ஒன்றாகத்தானே துவைத்தீர்கள். ஒரே தண்ணீர், ஒரே சவுக்காரம். அப்படியிருக்கும்போது உலர்ந்ததில் மட்டும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார் ஞானி.

“ஐயா, இந்தப் போர்வைக்கு நல்ல வெயிலும், வெப்பமும், காற்றோட்டமும் கிடைத்தது. கெட்ட வாசனை போய்விட்டது. அந்தப் போர்வைக்கு அது கிட்டவில்லை ஐயா”.

“ஒருவனுக்குக் கல்வி என்பது அந்த வெயிலைப் போல. பெரியோர் வழிகாட்டல் என்பது அந்தக் காற்றோட்டமும் போல. இரண்டும் கிடைத்தால்தான் ஒருவனிடம் உள்ள துர்க்குணங்கள் விலகி நல்ல குடிமகனாகத் திகழ்வான்” என்றார் ஞானி.

கல்வி மற்றும் பெரியோரின் வழிகாட்டலின் அவசியத்தை இருவரும் உணர்ந்தனர்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வாழ்விற்கு இது அவசியமா? Empty Re: வாழ்விற்கு இது அவசியமா?

Post by முரளிராஜா Tue Oct 28, 2014 10:40 am

அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாழ்விற்கு இது அவசியமா? Empty Re: வாழ்விற்கு இது அவசியமா?

Post by செந்தில் Tue Oct 28, 2014 11:11 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
சிறப்பான கருத்து
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாழ்விற்கு இது அவசியமா? Empty Re: வாழ்விற்கு இது அவசியமா?

Post by mohaideen Tue Oct 28, 2014 4:38 pm

கதையுடன் கல்வியின் சிறப்பு அருமை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்விற்கு இது அவசியமா? Empty Re: வாழ்விற்கு இது அவசியமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum