தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

View previous topic View next topic Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:34 pm

[You must be registered and logged in to see this image.]

யானையையும் ரயிலையும் நேசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்த வயதினருக்கும் ரயிலின் பிரமாண்டமும் அந்தப் பயண அனுபவமும்  மலைக்க வைக்கும் பேரானந்தம். ஆனால், முன்னேற்பாடுகள் சரியில்லையென்றால் பயணமே களை இழந்து போய்விடும். அதுதான் ரயில்! குறிப்பாக  முன்பதிவு செய்து பயணிக்க விரும்புகிறவர்கள் அடிப்படைத் தகவல்களை அறிவது அவசியம். காத்திருப்போர் பட்டியல், அதன் பிரிவுகள், தட்கல்  முறையில் டிக்கெட் பதிவு செய்யும் வசதி, சலுகைகள் என முக்கியமானவை இங்கே...

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:35 pm

வெயிட்டிங் லிஸ்ட் (WL)

பல நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தால் உடனே கிடைத்துவிடாது. ‘வெயிட்டிங் லிஸ்ட்தான் இருக்கிறது’ என்பார்கள். கீலி என்பது ரயிலில்  இருக்கையோ, படுக்கை வசதியோ வேண்டி காத்திருப்போர் பட்டியல். ஏற்கனவே கன்ஃபார்ம் டிக்கெட் உள்ளவர்கள் தங்களுடைய டிக்கெட்டை கேன்சல்  செய்வதைப் பொருத்தே, வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள நம் இடம் கன்ஃபார்ம் ஆகும். அப்படியே நடந்தாலும், சீனியாரிட்டி படி, நமக்கு முன்னால்  இருப்பவர்களுக்கெல்லாம் கிடைத்த பிறகுதான் உறுதி செய்யப்படும். ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக இருக்கை, படுக்கை வசதி  கிடைத்தவர்களுக்கான சார்ட் தயார் செய்து, ரயில் நிலையத்தில் ஒட்டி வைப்பார்கள்.

இணையத்திலும் தொலைபேசியிலும் கூட அறிந்து கொள்ளலாம். அதிலும் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றால், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை  வைத்து பயணம் செய்ய முடியாது. அது சட்டப்படி தவறு. ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குக்கோ,  கிரெடிட் கார்டு கணக்குக்கோ பணம் திரும்பப் போய்விடும். ரயில் நிலையத்தில் பதிவு செய்திருந்தால், குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் நேரடியாக  டிக்கெட்டை கேன்சல் செய்து பணம் பெற வேண்டும். இல்லையெனில் ரயில்வே அதிகாரிக்கு விண்ணப்பித்தே பெற வேண்டியிருக்கும். ஒரு சிறு  தொகையைக் கட்டணமாக எடுத்துக் கொண்டு மீதித் தொகை தரப்படும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:36 pm

ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் (GNWL) / பூல்டு கோட்டா வெயிட்டிங் லிஸ்ட் (PQWL)

முன்பதிவு செய்யும்போது எந்த வகையான வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் என்பது  கிட்டத்தட்ட ‘பாயின்ட் டூ பாயின்ட்’ சேவை மாதிரி. ரயில் கிளம்பும் இடத்திலிருந்து சென்று சேரும் கடைசி நிலையம் வரைக்கும் பயணம்  செய்வோருக்கு முன்னுரிமை அளிப்பதுதான் இந்த ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட். உதாரணமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்பவர்  பாண்டியன் எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்தால், காத்திருப்போர் பட்டியல் ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் என்று இருக்கும். காரணம், அந்த ரயில்  சேரும் கடைசி நிலையம் மதுரை.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு அதே ரயிலில் புக் செய்தால் காத்திருப்போர் பட்டியல், பூல்டு கோட்டா வெயிட்டிங் லிஸ்ட்  (PQWL) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்ல ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் புக் செய்தால் ‘ஜெனரல் வெயிட்டிங்  லிஸ்ட்’. ஏனென்றால், ராக் ஃபோர்ட் சென்று சேரும் கடைசி நிலையம் திருச்சி. இதுதான் அடிப்படை. ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட்டில் வாங்கிய  டிக்கெட், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எளிதில் கன்ஃபார்ம் ஆகிவிடும். ஆனால், பூல்டு கோட்டா வெயிட்டிங் லிஸ்டில்  இருப்போருக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆவது சற்றுக் கடினம். ஸ்லீப்பர், ஏ.சி. என்று எந்த வகுப்பாக இருந் தாலும் இந்த முறையில்தான் டிக்கெட்  கிடைக்கும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:37 pm

RQWL / RLWL / RSWL

ஒரு வழித்தடத்தில் இருக்கும் பெரிய ஸ்டேஷன்களுக்கு அருகில் இருக்கும் இடங்கள் எல்லாம் ரிமோட் கோட்டா வெயிட்டிங் லிஸ்டின் (RQWL) கீழ்  வரும். அதன்படி ரிமோட் லொகேஷன் வெயிட்டிங் லிஸ்ட் (RLWL), ரிமோட் ஸ்டேஷன் வெயிட்டிங் லிஸ்ட் (RSWL) எல்லாமே கிட்டத்தட்ட ஒரே  மாதிரியானவைதான். ஒரு வழித்தடத்தில் இரண்டு ஸ்டேஷன்களுக்கு இடையே பயணம் செய்யும் போது இந்த வெயிட்டிங் லிஸ்ட்.

உதாரணமாக, சென்னையில் இருந்து டிக்கெட் புக் செய்தால் இந்த வெயிட்டிங் லிஸ்ட் வராது. ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு புக் செய்தால் இந்த  வெயிட்டிங் லிஸ்ட் வரும். குறைவான தூரத்தில் பயணம் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த வசதி எளிதாகக் கிடைத்து விடும். றினிகீலி லிஸ்டில்  இருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைத்த பிறகு, இடம் இருந்தால் இந்த வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும். இந்த வெயிட்டிங்  லிஸ்ட்டில் குறிப்பிட்ட அளவுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படுகிறது .
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:38 pm

ரிசர்வேஷன் எகெய்ன்ஸ்ட் கேன்சலேஷன் (RAC)

முன்பதிவு செய்யும் போது ஆர்.ஏ.சி. என்று குறிப்பிட்டிருந்தால் ரயிலில் பயணம் செய்வது உறுதிப்படுகிறது. வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து, அடுத்த  கட்டமாக ஆர்.ஏ.சி.க்கு முன்னேறி வந்திருந்தாலும் பயணம் செய்யலாம். ஆனால், படுக்கை வசதியில்லாமல், இருக்கையில் அமர்ந்து செல்ல  வேண்டியிருக்கும். முன்பதிவில் டிக்கெட் கிடைத்தவர்கள் கடைசி நேரத்தில் பயணம் செய்யாவிட்டால் அந்த இருக்கை உங்களுக்குக் கிடைக்கும்.  இதுவும் சீனியாரிட்டி முறையில்தான் கிடைக்கும். இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய விருப்பமில்லை என்றால், அபராதம் இல்லாமல் கேன்சல்  செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஏ.சி. பெட்டியில் ஆறு பேருக்கும், ஸ்லீப்பர் பெட்டியில் பத்து பேருக்கும் ஆர்.ஏ.சி. முறையில் இருக்கைகள்  ஒதுக்கப்படுகின்றன.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:39 pm

தட்கல் (Tatkal)

அவசர காலத்தில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் முறை இந்த தட்கல் முறை. அதாவது, ‘விரைவு முன்பதிவு’. ஒவ்வொரு ரயிலிலும்  10 முதல் 30 சதவிகிதம் டிக்கெட்டுகள் தட்கல் முறையில் ஒதுக்கப்படுகின்றன. இதில் பயணம் செய்யக் கட்டணம் அதிகம். அதோடு பயணம் செய்யும்  நாளுக்கு முந்தைய தினத்தில்தான் முன்பதிவு செய்ய முடியும். இதிலும் CKWL என்ற வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறது. சீனியாரிட்டி முறைப்படி  டிக்கெட் கன்ஃபார்ம் ஆகும். சிரிகீலி தவிர, உறுதிப் படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தால், பணம் திரும்பக் கிடைக்காது. காலை 10  மணிக்கு அடுத்த நாள் பயணத் துக்கான தட்கல் முன்பதிவு ஆரம்பிக்கும். ரயில் நிலைய  மையங்களிலோ, இணையதளம் மூலமாகவோ தட்கல்  முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் போதே, அடையாள அட்டை அவசியம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:39 pm

எமர்ஜென்சி கோட்டா (EQ)

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும், அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையிலும்  பயணம் செய்ய எமர்ஜென்சி கோட்டா முறையில் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 20 படுக்கை வசதிகள்  (பெர்த்) மற்றும் ஏ.சி. பெட்டியில் குறைந்தது 4 இருக்கைகள் இந்த கோட்டாவில் ஒதுக்கப்படுகின்றன.

அடையாளச் சான்று (ID)

முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் எஸ்.எம்.எஸ். / ஈ-டிக்கெட் / பேப்பர் டிக்கெட் உடன், ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச்  சான்று (ஒரிஜினல்) கொண்டு செல்ல வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்யும் போது, ஒருவர் அடையாளச் சான்று வைத்திருந்தால்  போதுமானது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by செந்தில் Sun Jul 13, 2014 6:22 pm

அவசியமான தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by mohaideen Mon Jul 14, 2014 1:08 pm

அனைவரும் அறிந்துவைத்திருக்கவேண்டிய தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by பித்தன் Tue Jul 22, 2014 7:44 pm

மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 23, 2014 9:57 am

காலை 10  மணிக்கு அடுத்த நாள் பயணத் துக்கான தட்கல் முன்பதிவு ஆரம்பிக்கும். ரயில் நிலைய  மையங்களிலோ, இணையதளம் மூலமாகவோ தட்கல்  முன்பதிவு செய்யலாம்.
பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பயனிகளின் கனிவான கவனத்திற்கு... Empty Re: பயனிகளின் கனிவான கவனத்திற்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum