Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களைத் தாக்கும் விசித்திர வலி!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பெண்களைத் தாக்கும் விசித்திர வலி!
[You must be registered and logged in to see this image.]
உடலும் மனமும்
‘வாழ்க்கை வலி நிறைந்தது’ என்பது பிறந்தது முதல் பெண்களுக்குப் போதிக்கப்பட்டுப் பழக்கப்படுத்தப்படுகிறது. அதை உண்மையாக்கும் வகையில், பூப்பெய்துவது தொடங்கி, மெனோபாஸ் வரை அவளது உடல் சந்திக்கிற ஒவ்வொரு மாற்றமும் பலவித வலிகளும் வேதனைகளும் நிறைந்தவையாகவே இருக்கின்றன. இந்த வலிகள் போதாதென்று, காரணமற்ற ஏதோ ஒரு வலியால் அவதிப்படுகிற பெண்களும் ஏராளம். வலி நிவாரண மாத்திரை, மருந்துகள், வெளிப்பூச்சுக் களிம்புகள், கை வைத்தியம் என எதற்கும் கட்டுப்படாமல் எக்ஸ்ரே, ஸ்கேன் என எதிலும் காரணம் அகப்படாமல் தொடர்கிற வலிகள் அவை.
வலியை உணர்கிறவர்களுக்கு மட்டுமே தெரிகிற அந்த வேதனை, குடும்பத்தாருக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் பொய்யாகவோ, நடிப்பாகவோ, மன நோயாகவோ தெரியும். இப்படியொரு வலி உண்மைதானா? வலியைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு தீர்வே இல்லையா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு நிபுணர் குமார்.
‘‘பெண்களைக் குறி வைக்கிற இந்த விசித்திரமான வலிக்கு ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்று பெயர். 25 முதல் 60 வயதுப் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்து பேரை பாதித்தால், அதில் 9 பேர் பெண்களாகவும், ஒருவர் மட்டுமே ஆணாகவும் இருப்பார்கள். அந்தளவுக்கு இது பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். உலகளவில் 2 முதல் 4 சதவிகிதப் பெண்களுக்கு இந்த வலி இருக்கிறது.
பெண்களில் பலருக்கும் பரவலாக உடலில் வலி, கை, கால்களில் குத்தல், குடைச்சல், உடல் சோர்வு, மனத்தளர்ச்சி என ஏதோ ஒன்று இருக்கும். சாதாரண வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் இதற்குப் பலன் தராது. இது போன்று பலர், பலவித வலிகளால் வருடக் கணக்கில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடலளவில், வெளிப்புறத் தோற்றத்தில் நோய்க்கான எந்த அறிகுறிகளும் தெரியாது. ஆனால், வலி மட்டும் விடாமல் படுத்தும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இது ஒரு மனநோயாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. மிகச் சமீபத்தில்தான், வலி நிர்வாகப் பிரிவில் இப்படியொரு நோய் இருப்பதும், அதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்பது தசை சம்பந்தப்பட்ட வலிகளை ஏற்படுத்தக் கூடியது என்பதும், இன்றைய தேதியில் மக்களாலும் மருத்துவர்களாலும் சரியாக கவனிக்கப்படாத, சிகிச்சையளிக்கப்படாத, சிகிச்சை எடுக்கப்படாத ஒரு நோயாக இருப்பதும் கூட தெரிய வந்திருக்கிறது.
இந்த நோயைப் பற்றி மருத்துவர்களுக்கே கூட இன்னும் முழுமையான விழிப்புணர்வு இல்லை. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் மாதிரியான எந்தச் சோதனையின் மூலமும் இதைக் கண்டுபிடிக்கவோ, உறுதி செய்யவோ முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிற அறிகுறிகளை வைத்துதான் உறுதி செய்ய வேண்டும். வலியின் ஆரம்பத்தில் பலரும் தாமாகவே வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பார்கள். அதற்குக் கட்டுப்படாத போது, மருத்துவரைப் பார்ப்பார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகள் பலன் தராத போது, வேறு வேறு மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். வலி ஒரு பக்கமும், வலி குறையாத மன அழுத்தம் இன்னொரு பக்கமுமாக இரட்டை அவதியுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
உடல் முழுவதுமான வலி, நாள்பட்ட வலி, சோர்வு, மனத்தளர்ச்சி, தூக்கமின்மை, கழுத்து, இடுப்பு, முதுகுப் பகுதிகளில் வலி, சில நேரங்களில் மூட்டு வலி, அடிக்கடி ஏற்படுகிற தலைவலி, வயிற்றுவலி, வயிற்று உபாதைகள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வாய் உலர்ந்து போவது, கவனக்குறைவு, காலை வேளைகளில் உடல் விரைப்பு, கை, கால்களில் எரிச்சல், மறதி... இப்படி ஏதேனும் ஒன்றோ, எல்லாம் சேர்ந்தோ காணப்படும்.
மேற்சொன்ன அறிகுறிகளில் பலதும் ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு, மூட்டு நோய்களின் அறிகுறிகளாகவும் தெரிவதால், முதலில் ரத்தப் பரிசோதனை செய்து, இவற்றில் ஏதேனும் ஒரு நோய் இருக்கிறதா என்பதையும் அதன் விளைவாகத்தான் வலிக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். உடலில் தசையும் எலும்பும் சந்திக்கிற 18 இடங்களில் 11 இடங்களில் வலி இருக்கும். அந்த இடத்து வலிக்கான காரணத்தைக் கண்டறியும் எல்லா பரிசோதனை முடிவுகளும் நார்மல் என்றே வரும். வலி நிர்வாக மருத்துவரை அணுகினால், காரணத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார்.
ஃபைப்ரோமயால்ஜியா என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிறப்பு மருந்துகள், பயிற்சிகள், மன அழுத்தம் குறைக்கிற உத்திகள் போன்றவை பரிந்துரைக்கப்படும். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை குறிப்பிட்ட காலத்துக்குத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நடைப் பயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள், வலியை சமாளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை. இளஞ்சூடான நீரில் தினம் இரண்டு வேளைகள் குளிப்பதும் ஓரளவு நிவாரணம் தரும். மன அழுத்தமற்ற நிலைக்குப் பழக, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.காபி, டீ, சாக்லெட் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
வேலைகளுக்கு இடையிடையே பிடித்த செயல்கள் அல்லது பொழுதுபோக்குகளில் சிறிது நேரத்தைத் திருப்பலாம். ஒப்புக்கொள்ளாத உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். போதுமான ஓய்வும் உறக்கமும் உடற்பயிற்சியும் தினம் பின்பற்றப்பட வேண்டும்.’’
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பெண்களைத் தாக்கும் விசித்திர வலி!
அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பெண்களைத் தாக்கும் புது ஆபத்து
» பெண்களைத் திட்டாதீர்கள்
» விசித்திர உருவம் கொண்ட மரங்கள்
» நீங்கள் பார்க்காத விசித்திர சிற்பங்கள்
» ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்!
» பெண்களைத் திட்டாதீர்கள்
» விசித்திர உருவம் கொண்ட மரங்கள்
» நீங்கள் பார்க்காத விசித்திர சிற்பங்கள்
» ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|