தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன்னரைத் திருத்திய சித்தர்கள்

View previous topic View next topic Go down

மன்னரைத் திருத்திய சித்தர்கள் Empty மன்னரைத் திருத்திய சித்தர்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jul 03, 2014 9:16 pm

மன்னரைத் திருத்திய சித்தர்கள் Wmi328

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கரூரில் வாழ்ந்துவந்த மகான்களில் ஒருவர் கருவூர் சித்தர். சாதாரண குடிமக்கள் மத்தியில் ஆன்மிக விழிப்புணர்வை உருவாக்கியவர் கருவூர் சித்தர். குழந்தை பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார் கருவூரார். இவரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, கோவில்களில் விக்கிரகங்கள் செய்து வாழ்ந்துவந்தார்கள். ஒரு சமயம் போகர் திருவாடுதுறைக்கு வந்தார். அவரைச் சந்தித்த பிறகு போகரின் சீடரானார் கருவூரார். குருவின் சொல்படி நடந்து பல நற்காரியங்களை கருவூரார் செய்து வந்தார்.

ஒருமுறை தில்லை நடராஜரைக் கலப்படமில்லாத சொக்கத் தங்கத்தில் விக்கிரகமாக உருவாக்க வேண்டும் என்று மன்னர் இரணிய வர்மன் உத்தரவிட்டார். செம்போ அல்லது வேறு உலோகமோ கலக்காமல் 48 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் மன்னர் கூறினார். ஆனால் சிற்பிகள் முயன்றும் விக்கிரகத்தைச் செய்ய முடியவில்லை. மன்னர் கொடுத்த கெடுவில் 47 நாட்கள் வீணாகிவிட்டன.

தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் வருத்தப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், கரூவூராருக்கு விக்கிரகம் செய்ய வழிமுறைகளைச் சொல்லி வழியனுப்பினார். 48-வது நாளும் வந்ததால் சிற்பிகள் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்தனர். மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார் போய் நின்றார்.

“கவலை வேண்டாம். மன்னரின் விருப்பப்படி நடராஜரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளிடம் கூறினார்.

சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாதபோது உன்னால் எப்படி முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்கள்.

“என்னால் முடியும். இன்னும் ஒரு மணி நேரத்தில் செய்கிறேன்” என்றார் கருவூரார்.

விக்கிரகம் செய்ய ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார் கருவூரார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கதவு திறந்தது. வெளியே வந்த கருவூரார்,”போய்ப் பாருங்கள், விக்கிரகம் செய்தாகிவிட்டது” என்று சொன்னார்.

உள்ளே சென்றதும், கருவூராரால் வடிவமைக்கப்பட்ட ஆடலரசனின் அழகு திருமேனி உருவம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கினர். அப்போது அங்கு வந்த மன்னரும் சிலையின் அழகில் மயங்கி சிற்பிகளை பாராட்டினார்.

ஆனால் உண்மையில் சிலை செம்பு கலந்தே செய்யப்பட்டதையும், சிற்பிகளுக்கு பதிலாக கருவூரார் சிலையை வடிவமைத்ததும் மன்னருக்குத் தெரியவந்தது. உடனே கருவூராரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மன்னர். இதன் பின்னர் போகர் அங்கு தோன்றினார்.

“செம்பு கலக்காமல் எப்படி தங்க விக்கிரகம் செய்ய முடியும்” என மன்னரிடம் கேள்வி எழுப்பினார். “நாள் ஆக சுத்தத் தங்கத்தில் இருந்து வரும் ஒளி, பார்வையைக் குருடாக்கிவிடாதா” என்ற அறிவியல் தத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

“அதனால்தான் என் மாணவன் கருவூரான் சிறிது செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து விக்கிரகமாகச் செய்திருக்கிறான். போனது போகட்டும். இந்தா நீ தந்த தங்கத்துக்கு அதே சுத்த மாற்று தங்கம்,” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறினார்.

“அரசே! உன் தங்கத்தை நீ எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு போகர் சிலையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார். மன்னர் போகரின் காலில் வீழ்ந்து வணங்கித் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மன்னரைத் திருத்திய சித்தர்கள் Empty Re: மன்னரைத் திருத்திய சித்தர்கள்

Post by முரளிராஜா Mon Oct 27, 2014 7:37 am

கருவூர் சித்தர் பற்றிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மன்னரைத் திருத்திய சித்தர்கள் Empty Re: மன்னரைத் திருத்திய சித்தர்கள்

Post by செந்தில் Mon Oct 27, 2014 6:25 pm

சித்தர் பெருமானின் மகிமைகளை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மன்னரைத் திருத்திய சித்தர்கள் Empty Re: மன்னரைத் திருத்திய சித்தர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum