Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
முதுகுவலி: நாமே தடுக்கலாம்
Page 1 of 1 • Share
முதுகுவலி: நாமே தடுக்கலாம்
![முதுகுவலி: நாமே தடுக்கலாம் 2rprxo9](https://2img.net/h/oi62.tinypic.com/2rprxo9.jpg)
• வாரத்தில் ஒரு நாளாவது உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கும்போது ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் எலும்பு மூட்டுகளில் உயவுத்தன்மை குறையாமலும் பார்த்துக்கொள்ள முடியும்.
• அடிபடுவதாலும், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதாலும் ஜவ்வுகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, ஓரிடத்தில் தொடர்ந்து உட்கார்ந்துகொண்டே இருக்கக் கூடாது. குறிப்பிட்ட நேர இடைவெளியில் எழுந்து சிறிது தூரம் நடந்தால், பின்னால் பெரிதாக வரும் பிரச்சினையைத் தவிர்க்கலாம்.
• கழுத்து ஜவ்வு பாதிக்கப்பட்டால் வீக்கமும் வலியும் ஏற்படும். கம்ப்யூட்டரின் முன் தொடர்ந்து உட்கார்ந்து பல மணி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை வரலாம். அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, கழுத்துக்குத் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
• சம்மணம் போட்டு உட்காருவதைத் தற்போது மறந்து வருகிறோம். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது சம்மணம் போட்டு உட்கார்வது முதுகுத் தண்டுக்கும் இடுப்புக்கும் நல்லது.
• வலி குறைவாக இருக்கும்போது உடற்பயிற்சியின் மூலம் அதைச் சரி செய்துவிடலாம். சிலருக்குப் பிறக்கும்போதே முதுகுத் தண்டு வளைந்து காணப்படலாம். இது பிறவி குறைப்பாடு. உடற்பயிற்சி மூலம் இக்குறையை மட்டுப்படுத்த முடியும்.
• உடற்பயிற்சி செய்யும்போது தசைநார்களுக்கும், எலும்புகளுக்கும் வலு கிடைக்கும். தசை வீக்கமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது எலும்பும் ஜவ்வும்தான். எனவே, உடற்பயிற்சி முக்கியம்.
• முதுகு வலி உள்ளவர்கள் தும்மும்போது, பார்த்துத் தும்ம வேண்டும். தும்மும்போது கழுத்தும், இடுப்பும் வேலை செய்யும். கழுத்துக்கும் இடுப்புக்கும் கடுமையாக வேலையைக் கொடுத்துவிட்டால், இடுப்பு ஜவ்வு பாதிக்கப்படும்.
• நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால், காலி வயிற்றில் வாயு உருவாகித் தொல்லை ஏற்படும். எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம்.
• முறையாக உட்காராமல் இருப்பது, படுத்துக்கொண்டே கம்ப்யூட்டர் பார்ப்பது, குப்புறப் படுத்துக்கொண்டு செல்போனை மேய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது இவையெல்லாம் முதுகுவலியில் கொண்டு போய் விட்டுவிடும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: முதுகுவலி: நாமே தடுக்கலாம்
செய்யலாமே• சம்மணம் போட்டு உட்காருவதைத் தற்போது மறந்து வருகிறோம். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது சம்மணம் போட்டு உட்கார்வது முதுகுத் தண்டுக்கும் இடுப்புக்கும் நல்லது.
Re: முதுகுவலி: நாமே தடுக்கலாம்
நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால், காலி வயிற்றில் வாயு உருவாகித் தொல்லை ஏற்படும். எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம்.
![பயமா இருக்கு](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
![-](https://2img.net/i/empty.gif)
» கண்களை பரிசோதித்தால் பார்வை இழப்பை தடுக்கலாம்
» நெஞ்சு எரிச்சல் ஏன் வருகிறது அதை எப்படித் தடுக்கலாம்?
» வாயுத் தொல்லை அதிகமா இருக்கா? ஈஸியாக தடுக்கலாம்!!!
» மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்!
» முதுகுவலி....
» நெஞ்சு எரிச்சல் ஏன் வருகிறது அதை எப்படித் தடுக்கலாம்?
» வாயுத் தொல்லை அதிகமா இருக்கா? ஈஸியாக தடுக்கலாம்!!!
» மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்!
» முதுகுவலி....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|