தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பட்டீஸ்வரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

View previous topic View next topic Go down

பட்டீஸ்வரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் Empty பட்டீஸ்வரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

Post by முழுமுதலோன் Sat Jul 26, 2014 10:57 am

பட்டீஸ்வரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் T_500_1557

மூலவர் : கோதண்டராமர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : சீதை
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : பட்டீஸ்வரம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

ராம நவமி, அனுமன் ஜெயந்தி, மார்கழி மாத வழிபாடு, நவராத்திரி.

தல சிறப்பு:

ஞானசம்பந்தருக்காக அமைந்த ஆனி மாத முத்துப் பந்தல் உத்ஸசம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது இந்த கோதண்டராம சுவாமி ஆலயத்துக்கு வரும் திருஞானசம்பந்தருக்கு, கோதண்டராமருக்கு சாத்திய பட்டு வஸ்திரத்தை அணிவிப்பார்கள். இந்த மரியாதை நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் பட்டீஸ்வரம்-612 703, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

போன்:

+91 435-241 6976

பொது தகவல்:

மூன்று நிலை ராஜகோபுரத்தைத் தாண்டியதும் பிரமாண்டமான முன்மண்டபம், கருடாழ்வார், கொடிமரம், மடப்பள்ளி, கோயில் அலுவலகம் உள்ளன. இங்குள்ள மகாமண்டபம் வவ்வாத்தி மண்டபம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஜய-விஜய துவாரபாலர்களைத் தாண்டி கருவறையில் மூலவர் கோதண்டராமர் சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதம் கிழக்கு பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் ராமானுஜர் மற்றும் மணவாளா மாமுனிகள் சன்னதி உள்ளது.


பிரார்த்தனை

பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இங்குள்ள கோதண்டராமரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள கோதண்டராமருக்கு அபிஷேகம் செய்து நெய் தீபமேற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:


ராமபிரானை வந்து வணங்கிய மகரிஷிகளுள் சாலியர் என்பவரும் ஒருவர். பட்டுத் தொழில் எனப்படும் நெசவுத் தொழில் செய்து வந்த குலத்தைச் சார்ந்தமையால் இவர் பட்டுச் சாலிய மகரிஷி என அழைக்கப்பட்டார். பட்டு நெசவுத் தொழில் செய்து வருபவர்களுக்கு ஒரு தோஷம் எப்போதுமே இருந்து வந்தது. அதாவது எண்ணற்ற பட்டுப் புழுக்களைக் கொன்று, இந்தத் தொழில் செய்து வருகிறோமே என்கிற தோஷம் தான். தொழில் நிமித்தமாக நெசவாளர்களுக்கு இருக்கும் இந்த தோஷத்தைப் போக்க எண்ணினார் சாலிய மகரிஷி. தமது மூவகையான தோஷங்களையும் போக்கிக் கொண்ட ராமபிரானை பட்டீஸ்வரம் திருத்தலத்தில் தரிசித்தார் சாலிய மகரிஷி. இவரின் பக்தியில் நெகிழ்ந்த ராமன், மகரிஷியே ... வேண்டும் வரம் யாதோ? என்று கேட்டார். அதற்கு மகரிஷி பிரபோ... செய்யும் தொழில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை. எம் குலத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் பட்டுப் புழுக்களைக் கொன்று பணி செய்கின்றார்கள். இதைக் கொல்லாமல் இந்த உற்பத்தித் தொழிலைச் செய்ய முடியாது. எனவே, பட்டுப் புழுக்களைக் கொல்வதால் எம் குலப் பெருமக்களுக்கு ஏற்படும் தோஷத்தைத் தாங்கள் போக்கி அருள வேண்டும். தவிர, எம் குல மக்கள் அடிக்கடி வந்து உன்னை வணங்குவதற்கு வசதியாகத் தாங்கள் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். சாலிய மகரிஷியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராமன் இங்கேயே அருளி நெசவாளர்களின் தோஷத்தைப் போக்கினார்.




தல வரலாறு:

ராமாயணம் எல்லோருக்கும் தெரியும். மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் ராமபிரான். க்ஷத்திரிய குலத்தில் அவதரித்து, ஒரு மானிடன் சராசரியாக அனுபவிக்க வேண்டிய இன்னல்கள் அனைத்தையும் அனுபவித்து மிகச் சாதாரணமான எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் ராமபிரான். இறை அவதாரமான அவர் நினைத்திருந்தால் எப்போதோ ராவணனை சம்ஹாரம் செய்து, சீதாதேவியை மீட்டிருக்க முடியும். என்றாலும், சராசரி மனிதனுக்கு உண்டான உணர்ச்சி நிலையிலேயே இவர் வாழ்ந்து வந்தார். இதனால் தான் ராவண சம்ஹாரமும் சிறிது காலம் எடுத்துக் கொண்டது. தன் தேவியான சீதாவைக் கவர்ந்து கொண்டு சென்ற காரணத்தால் ராவணனை அழிக்க பெரும்படையுடன் இலங்கை புறப்படுகிறார் ராமபிரான். சமாதானம் சரிவர அமையாததால், யுத்தம் நிகழ்கிறது. போரின் முடிவில் மாபெரும் பிராமணனான - வீரனான சர்வ கலைகளிலும் சிறந்து விளங்கியவனுமான ராவணன், ராமபிரானால் கொல்லப்படுகிறான். சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், தோஷங்கள் ராமபிரானைப் பற்றிக் கொள்கின்றன. இந்த அவதாரத்தில் ராமன், ஒரு மனிதன். அதனால் அவருக்கும் தோஷங்கள் பற்றிக் கொள்கிறது. சிறந்த பிராமணனான ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும், போர்முனையில் எதிரிகளை வீழ்த்தும் வீரனான ராவணனைக் கொன்றதால் வீரஹத்தி தோஷமும், எண்ணற்ற கலைகளில் சிறந்து விளங்கியவன் ஆதலால் சாயஹத்தி தோஷமும் பற்றிக் கொள்கிறது. ஆக மூன்று தோஷங்கள் ராமனைப் பற்றிக் கொள்கிறது.
முதல் தோஷமான பிரம்மஹத்தி தோஷம் தன்னை விட்டு அகல, ராமேஸ்வரத்தில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து பூஜைகள் நடத்தினார். அங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி லிங்கத் திருமேனியை அபிஷேகித்து வந்ததால் பிரம்மஹத்தி தோஷம் அகன்றது. இரண்டாவதான வீரஹத்தி தோஷம் நீங்க வேதாரண்யம் சென்றார். வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தார். ஒரு லிங்கம் ஸ்தாபித்து அனுதினமும் வழிபட்டு வீரஹத்தி தோஷத்தைப் போக்கினார். மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷம் அகல்வதற்கு ராமபிரான் வந்த திருத்தலம் தான் இந்த பட்டீஸ்வரம். அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சூரிய சோம கமல புஷ்கரணி கரையில் அமர்ந்து தியானம் செய்தார். ஒரு லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். தன் அம்பு முனையால் நிலத்தைக் கீறி ஒரு தீர்த்தம் உருவாக்கினார். அதில் இருந்து தீர்த்தம் எடுத்து லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து வழிபட அவருக்கு இருந்த சாயஹத்தி தோஷமும் நீங்கியது. தேவர்களும், முனிவர்களும் ராமபிரான் மேல் மலர்களைப் பொழிந்து வணங்கினர். சர்வதோஷங்களும் ராமபிரானை விட்டு அகன்றன. ரிஷிகள் தங்களது பத்தினிகளுடன் வந்து ராமனைப் போற்றித் துதிக்கின்றனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: ஞானசம்பந்தருக்காக அமைந்த ஆனி மாத முத்துப் பந்தல் உத்ஸசம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது இந்த கோதண்டராம சுவாமி ஆலயத்துக்கு வரும் திருஞானசம்பந்தருக்கு, கோதண்டராமருக்கு சாத்திய பட்டு வஸ்திரத்தை அணிவிப்பார்கள். இந்த மரியாதை நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பட்டீஸ்வரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் Empty Re: பட்டீஸ்வரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

Post by ஸ்ரீராம் Tue Aug 26, 2014 10:11 am

சிறப்பான தலம்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» திருக்கல்யாணபுரம் அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
» அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
» திருக்கோடிக்காவல் அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
» திருச்சேறை அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum