Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனை வாங்கும்போது இதுவும் அவசியம்: சாலை அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்?
Page 1 of 1 • Share
மனை வாங்கும்போது இதுவும் அவசியம்: சாலை அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்?
சொந்தமாக ஒரு வீடு... அல்லது குறைந்த பட்சம் ஒரு வீட்டு மனையாவது வாங்கவேண்டும். இது வாடகை வீட்டில் வாடுபவர்கள் ஒவ்வொருவரின் கனவு. இதற்காக மனை வாங்கும்போது, எந்த இடத்தில் இருக்கிறது? பஸ், மின்சார ரயில் வசதி உள்ளதா? பிற போக்குவரத்து வசதிகள் என்ன? மருத்துவமனை இருக்கிறதா? என்று கேட்பதோடு விட்டுவிடுவார்கள்.மனை அமைந்துள்ள இடம், சுற்றியுள்ள இடங்களின் வளர்ச்சி, கழிவுநீர் வெளியேறும் வசதி, குடியிருப்புகள் அருகில் அமைந்துள்ளதா, மனை அமைந்துள்ள இடம் முழு வளர்ச்சி அடைந்த இடமாக இருக்கிறதா, கார்னர் சைட், குடிநீர் மற்றும் மின்சார வசதி, மண்ணின் உறுதிதன்மை இப்படி பல்வேறு வசதிகளை அடிப்படையாக வைத்து மனையை தேர்வு செய்கிறோம். இறுதியாக மனையானது உள்ளூர் திட்ட குழுமம், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி கட்டிட விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை பார்ப்போம்.
ஆனால் மனைக்கு செல்லும் சாலைகளை பற்றி அவ்வளவாக விசாரிப்பது இல்லை. தார்ச்சாலை இருக்கிறதா, மனையின் இருபுறமும் ரோடு உள்ளதா என்று கூட பார்ப்போம். சாலை அளவு என்ன என்பதை அறிந்து கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை.இப்படி சாலை அளவில் கவனம் இல்லாமல் கோட்டை விட்டுவிட்டு, மனை வாங்கினால் போதும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டால் நாம் வாங்கி போட்டுள்ள மனையில் நம் விருப்பம் போல கட்டிடத்தை கட்ட முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம். மனைக்கு செல்ல தார்சாலை உள்ளதா என்பதை மட்டுமே விசாரித்துவிட்டு உடனடியாக முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மனைகள் பிரிக்கும் போது மனைக்கு முன்புறம் 20, 40, 60 அடி என்ற கணக்கில் பிரிக்கப்பட்டிருக்கும்.
20 அடி சாலை இருந்தால் போதாதா என்று கருதி மனையை வாங்கிவிட்டால் அதிகபட்சம் 3 மாடிகள் மட்டுமே கட்ட முடியும். இதுவும் அந்தந்த உள்ளாட்சிகளை பொறுத்து மாறுபடும். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளோ அல்லது அடுக்குமாடி வணிக வளாகங்களோ கட்ட முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் ஒவ்வொரு வகையிலான சாலைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சாதாரண குடியிருப்புகள் கட்ட வேண்டுமெனில் 20 அடி சாலை இருந்தால் போதும். அடுக்குமாடி குடியிருப்புகள் என்றால் கட்டாயம் 40 அடிக்கும் மேல் இருந்தால் தான் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடமிருந்து அனுமதி கிடைக்கும். புதியதாக வீட்டு மனைகள் போடப்படும் இடங்களில் 40 அடி சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் தவனை முறை திட்டம், சலுகை விலை திட்டம் போன்ற திட்டங்களில் நூற்றுக்கணக்கான மனைகள் பிரிக்கப்பட்டுள்ள இடங்களில் 40 அடி சாலையை எதிர்பார்க்க முடியாது.
இது போன்ற இடங்களில் மனைகளை பெறுபவர்கள் மனைக்கு செல்லும் சாலைகளின் பிரதான சாலை மற்றும் மனைக்கு முன்புறம் உள்ள சாலைகளின் அகலம் உள்ளிட்டவை கட்டாயம் 40 அடிக்கும் மேல் இருக்கின்றதா என்பதை பார்த்த பிறகு தான் மனையை வாங்க முயற்சிக்க வேண்டும். மனைகள் வாங்கும் போது சாலைகளின் அகலத்தை கேட்டு தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். கண்டிப்பாக 40 அடி அகலம் கொண்ட சாலைகள் இருந்தால் தான் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு ஏற்ப சாலை அகலம் இல்லாத பட்சத்தில் கட்டிடத்திற்கான அங்கீகாரமும் கிடைக்காது வங்கி கடனும் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டுக்கனவு நிறைவேற இப்படி எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். அதற்கான சேமிப்பையும் இப்போதே தொடங்குங்கள்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|