தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர்

View previous topic View next topic Go down

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர் Empty அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர்

Post by முழுமுதலோன் Thu Aug 21, 2014 10:30 am

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர் T_500_1139

மூலவர் : வரதராஜப்பெருமாள்
உற்சவர் : வரதர்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : -
தீர்த்தம் : பெருமாள் குளம்
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : கண்ணங்குடி
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

சுவாமியை இங்கு ஒரு வைகாசி மாத அஸ்தம் நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்தனர். அன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். வெள்ளிக்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் அஸ்தம் நாட்களிலும் விசேஷ திருமஞ்சனம் உண்டு.

தல சிறப்பு:

சுவாமி சன்னதி முன் அர்த்தமண்டபத்தில் வானர ஆஞ்சநேயர் இருக்கிறார். இவர் தலையில் கிரீடம் இல்லாமல், ராமபிரானுக்கு உதவி செய்தபோது இருந்த அமைப்பில், வானரம் போலவே இருக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கீரப்பாளையம் வழி, கண்ணங்குடி - 608 602, எண்ணாநகரம் போஸ்ட், சிதம்பரம் தாலுகா,கடலூர் மாவட்டம்.

போன்:

+91 99444 62171, 93603 87690

பொது தகவல்:

அளவில் சிறிய கோயில் இது. கோபுரம் கிடையாது. கோயிலுக்குப் பின்புறம் பெருமாள் தீர்த்தக் குளம் உள்ளது.



பிரார்த்தனை

இங்கு சுவாமியின்நட்சத்திரமாக அஸ்தம் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தோருக்கான பரிகாரத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகளாலும், இதர கிரக சஞ்சாரத்தால் ஏற்படும் தீமையில் இருந்தும் நிவர்த்தி பெற, இந்த நட்சத்திரக்காரர்கள் இங்குவேண்டிக்கொள்கிறார்கள். திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, வளமான வாழ்வு அமைய தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செலுத்தி மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

தலபெருமை:


வானர அமைப்பில் ஆஞ்சநேயர்: ஏகதள விமானத்தின் கீழ், வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சுவாமி சன்னதி முன் அர்த்தமண்டபத்தில் வானர ஆஞ்சநேயர் இருக்கிறார். இவர் தலையில் கிரீடம் இல்லாமல், ராமபிரானுக்கு உதவி செய்தபோது இருந்த அமைப்பில், வானரம் போலவே இருக்கிறார். கூப்பிய இரு கைகளுக்கு நடுவே ஜபமாலை வைத்திருக்கிறார். சுவாமி எதிரேயுள்ள மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். இங்கு பெருமாளின் தசாவதார ஓவியங்களும், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களும் தொகுப்பாக எழுதப்பட்டுள்ளது.


சன்னதியே சொர்க்கம்: வேண்டும் வரங்களைத் தருபவர் என்பதால் இவருக்கு, "வரம் தரும் வரதராஜர்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவரை வணங்கினாலே வாழும் காலத்தில் சொர்க்கமும், வாழ்க்கைக்குப் பின் மோட்சமும் கிடைக்குமென்பது ஐதீகம். எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி சன்னதிக் கதவையே சொர்க்கவாசலாகத் திறக்கின்றனர். சுவாமி, இவ்வாசல் வழியே வெளியேறுவார். அப்போது, சொர்க்கவாசல் கடக்கும் உற்சவ மூர்த்தி மற்றும் பிரதான சன்னதியிலுள்ள மூலவர் வரதராஜர் என இருவரையும் ஒன்றாகத் தரிக்கலாம்.


திருமண பிரார்த்தனை: ஜாதக ரீதியாக வியாழ பகவான் பார்வையிருந்தால்தான், திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதையே, "குரு பார்வை' என்பர். இந்த பாக்கியம் கிடைக்க வியாழக்கிழமைகளில் வரதராஜப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள். ஐஸ்வர்யம் உண்டாக, குடும்பம் சிறக்க, வளமான வாழ்வு கிடைக்கவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.




தல வரலாறு:

இவ்வூரில் வசித்த பெருமாள் பக்தர் ஒருவருக்கு ஊரில் பெருமாளுக்கு கோயில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. அவருக்கு இங்கு கோயில் கட்ட, அருளும்படி சுவாமியிடம் வேண்டிக்கொண்டார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், அருகிலுள்ள ஒரு குளத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கு தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அதன்படி, ஏரிக்கு சென்ற பக்தர் சிலை இருந்ததைக் கண்டார். அச்சிலையை இங்கே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சுவாமிக்கு வரதராஜப்பெருமாள் என்ற பெயர் சூட்டப்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சுவாமி சன்னதி முன் அர்த்தமண்டபத்தில் வானர ஆஞ்சநேயர் இருக்கிறார். இவர் தலையில் கிரீடம் இல்லாமல், ராமபிரானுக்கு உதவி செய்தபோது இருந்த அமைப்பில், வானரம் போலவே இருக்கிறார்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர் Empty Re: அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர்

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 10:40 am

தல வரலாறை பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர் Empty Re: அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர்

Post by செந்தில் Sat Sep 13, 2014 1:38 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர் Empty Re: அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கண்ணங்குடி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்
» திருவட்டத்துறை அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» திருநாரையூர் அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், கடலூர்
» கானாட்டம்புலியூர் அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum