தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெடுங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை

View previous topic View next topic Go down

நெடுங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை Empty நெடுங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை

Post by முழுமுதலோன் Thu Aug 28, 2014 12:38 pm

நெடுங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை T_500_950

மூலவர் : கைலாசநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பிரசன்னநாயகி
தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : நெடுங்குடி
மாவட்டம் : புதுக்கோட்டை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

ஆடிபூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், கடைசித் திங்களில் ஐயப்பன் சன்னதியில் படிபூஜையும் நடக்கிறது. மாசி மாத மகா சிவராத்திரி விழாவில், தமிழகத்தின் பலபகுதியில் இருந்து 48 நாட்கள் விரதமிருந்து இந்த கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்களும் வருகின்றனர்.

தல சிறப்பு:

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி - 622 209, புதுக்கோட்டை மாவட்டம்.

போன்:

-

பொது தகவல்:

மூலவருக்கு காசி நாதர் என்ற பெயரும் உண்டு. கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களுடன் கோபுரங்களும் உள்ளன.


பிரார்த்தனை

பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி தேரோடும் வீதியில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும், கைலாச நாதருக்கும் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வணங்கினால் மகப்பேறு உண்டாகும்.

மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சன்னதி முன்பு மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேராக கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்


நேர்த்திக்கடன்:

ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாஸசங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மற்ற ஆண்களும், பெண்களும் அம்மனுக்கும், நாதருக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி மன ஒருமையுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்.

தலபெருமை:

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது. இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி சுவாமியை தரிசித்தால் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறும்.

இங்கு பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் கிரிவலமும், பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பஜனை வழிபாடும் நடக்கிறது.


தல வரலாறு:


புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலை குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்கு சென்றார். ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றை செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.


காசிக்கு சென்ற தம்பி சிரஞ்சீவி தாமதமாக வந்து, தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்ய சொன்னார். அண்ணன் மறுக்கவே, ஆத்திரமடைந்த தம்பி மண்ணால் செய்த லிங்கத்தையும் இந்த மலையையும் அழிக்கிறேன் பார்... என்று அண்ணனிடம் சவால் விட்டான். திருமாலை தியானித்து கடும் தவத்தில் மூழ்கினான். மூத்தவன் கலங்கினான். தம்பியில் செயலால் லிங்கத்துக்கு பாதிப்பு ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலுடன், தானும் திருமாலைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான்.


அசுர சகோதரர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்டார் திருமால் . சின்னச் சிரஞ்ஜீவிக்காக ஆதிசேஷனையும் பெரிய சிரஞ்ஜீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார். ஆதிசேஷன், மண் லிங்கம் அமைத்த மலையை அசைக்க ஆரம்பித்தது. கருடனோ அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓடிவிட்டது. கருடனும் திருமாலிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்கள் முன் காட்சியளித்த திருமால் உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இந்தத் தலம் புகழ்பெற்றுத் திகழும் என்று அருள்புரிந்து மறைந்தார்.


காலங்கள் ஓடின. சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து. இந்தப் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரிகள் சிலர் இங்கே சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தனர். அந்த லிங்கத்துக்கு ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர். மறுநாள் அந்தப் பாலுக்கு உரிய விலையாக, சிவலிங்கம் அருகில் பொற்காசுகள் இருந்ததைக் கண்டனர். அடுத்தடுத்த நாட்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து. அந்த லிங்கத் திருமேனியனுக்கு படிகாசுநாதர் என்று திருபெயர் ஏற்பட்டது. இங்கு வழிபட்டால் காசியிலும், கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்க அருளினார். 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.


13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.




சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெடுங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை Empty Re: நெடுங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை

Post by செந்தில் Thu Aug 28, 2014 12:41 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum