தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெரியகளந்தை அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

View previous topic View next topic Go down

பெரியகளந்தை அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் Empty பெரியகளந்தை அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

Post by முழுமுதலோன் Tue Sep 09, 2014 10:45 am

பெரியகளந்தை அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் T_500_91

மூலவர் : ஆதீஸ்வரர் (ஆதிசேஸ்வரன், ஆதி புரீஸ்வரர் )
உற்சவர் : சந்திரசேகர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி
தல விருட்சம் : சந்தனம்
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமிகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : குழந்தை நகர்
ஊர் : பெரியகளந்தை
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரியார் - திருப்புகழ்

திருவிழா:

ஆனி உத்திரம், ஆடிவெள்ளி, சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருளுகிறார்.சிவனின் கருவறைக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் சுனைஒன்று உள்ளதாகச் சொல்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், பெரியகளந்தை, கோயம்புத்தூர் மாவட்டம்.

போன்:

+91-4259 - 283 503

பொது தகவல்:


அம்பாள் சன்னதியில் தரப்படும் வெள்ளைக்கயிறைக் கட்டிக்கொள்ள நோய்கள் வராது என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் சனீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர் ஆகியோர் அருளுகின்றனர். தலவிநாயகரின் திருநாமம் பாலகணபதி.





பிரார்த்தனை

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அம்பாளுக்கு மஞ்சள் கயிறு கட்டி, செவ்வரளியால் பூஜை செய்திட திருமணதோஷம், புத்திரதோஷம் நீங்கும், சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்ற தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

இத்தலத்து சிவனை இந்திரன், பிரம்மன், சூரியன், வாலி, அகத்தியர், பதஞ்சலி மகரிஷி, சுந்தரானந்தர் உட்பட பலர் வழிபட்டுள்ளனர். பதஞ்சலி தவம் செய்த இடத்தில் கல்கம்பம் ஒன்று உள்ளது.

காட்டிக்கொடுத்த நந்தி: இங்கு தங்கியிருந்த படிக்காசு புலவர் என்பவர் தினமும் சிவனைக்குறித்து பாடல் பாடி, பரிசாக பொற்காசுகளைப் பெற்று வந்தார். ஒருசமயம், அவர் சுவாமியை நினைத்து மனமுருகி கண்மூடி பாடிவிட்டு விழித்த போது, சுவாமியும், அம்பாளும் அங்கில்லை. சிவன் தன்னை சோதனை செய்வதை உணர்ந்த அவர், அங்கிருந்த நந்தியிடம், " சிவனும் அம்பிகையும் எங்கே?'' என்று கேட்டார். அவர் மீது பரிவு காட்டும் வகையில் நந்திதேவர், சிவன் மறைந்திருக்கும் திசையே நோக்கி தனது தலையை திருப்பி அடையாளம் காட்டி விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் இருந்து கொண்டார். இவ்விஷயம் சிவனுக்கு தெரியாமல் இருக்குமா? தலை இருக்கும்போது வால் அசையலாமா எனக் கண்டித்தார். தங்கள் பக்தன் ஒருவன் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்ததாகக் கூறினார். நந்தியின் கருணையை பாராட்டினார் சிவன். இங்குள்ள நந்தி நேரே சிவனை பார்க்காமல் இடப்புறம் திரும்பியே இருக்கிறது. இவரை வணங்கினால், சிவனிடம் சிபாரிசு செய்து, கோரிக்கைகள் நிறைவேற உதவுவார் என்பது நம்பிக்கை.

ரிஷபத்தில் அம்பாள்: இத்தலத்தில் துர்வாசமுனிவர் யாகம் செய்து அம்பாளை குழந்தை வடிவில் பெற்றார். அவள் கன்னிப்பருவம் எய்தியதும் ஆதீஸ்வரருக்கு மணம் முடித்து வைத்தார். இந்த தேவியை துர்வாசரே இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார். புகுந்த வீட்டுக்கு வந்ததும் நந்தி தலை திரும்பியிருப்பதைப் பார்த்தாள். தன் கணவரைக் ஒரு பக்தனுக்காக காட்டிக் கொடுத்ததால் இப்படி இருப்பதாகத் தெரிய வந்ததும், அவரைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அவள், அதன் மீது அமர்ந்தாள். நந்திதேவருக்கும் மகிழ்ச்சி. சிவனை மட்டுமே சுமந்த தனக்கு அம்பிகையையும் சுமக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மேலும் மேலும் சந்தோஷப்பட்டார். கழுத்து சாய்ந்த வள்ளி: இங்கு சிவனுக்கு இடதுபின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி, தனது கழுத்தை வலப்புறம் சாய்த்தபடி காட்சி தருவது சிறப்பு. இம்முருகனைப் பற்றி பாடியுள்ள அருணகிரியார், இவ்வூரை "குழந்தை நகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அம்பிகையை துர்வாசர் யாக குண்டத்தில் இருந்து குழந்தையாகப் பெற்றதால் இந்நகருக்கு இப்படி ஒரு பெயர் வந்திருக்கலாம் என தெரிய வருகிறது.


தல வரலாறு:

படைப்புத்தொழிலை செய்வதால், தான்தான் அனைத்திலும் சிறந்தவன் என அகங்காரம் கொண்டிருந்த, பிரம்மன் தனது சாபம் நீங்க பல இடங்களிலும் சிவனை வணங்கி வந்தார். அவர், சந்தனமரங்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சுயம்புவடிவில் சிவன் இருந்ததைக் கண்டு அவரை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில், இவ்விடத்தில் கரிகாற்சோழமன்னர் கோயில் எழுப்பினார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருளுகிறார்.சிவனின் கருவறைக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் சுனைஒன்று உள்ளதாகச் சொல்கிறார்கள்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பெரியகளந்தை அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் Empty Re: பெரியகளந்தை அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

Post by செந்தில் Tue Sep 09, 2014 11:04 am

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum