தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுருளிமலை அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி

View previous topic View next topic Go down

சுருளிமலை அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி Empty சுருளிமலை அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி

Post by முழுமுதலோன் Wed Sep 10, 2014 12:10 pm

சுருளிமலை அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி T_500_471

மூலவர் : பூதநாராயணன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : புலிச்சிமரம்
தீர்த்தம் : சுரபிநதி
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சுருதிமலை
ஊர் : சுருளிமலை
மாவட்டம் : தேனி
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

சித்திரையில் மூன்று வார திருவிழா. ஆடி அமாவாசை, தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமியில் இங்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் உண்டு.

தல சிறப்பு:

இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள்பாலிக்கிறார். இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், சுருளிமலை - 625 516 தேனி மாவட்டம்.

போன்:

+91- 4554- 276715

பொது தகவல்:

சுருளியாறு, வெண்ணியாறு, கன்னிமார் ஊற்று ஆகிய மூன்று மூலிகை நீர்களும் சங்கமிக்கும் இத்தலத்திற்கு அருகிலேயே சுருதியுடன் கூடிய சுருளி எனும் சுரபிநதி நீர் அருவியாக கொட்டுகிறது. கானகத்தின் நடுவே பல மூலிகைகள் கலந்து அற்புத சக்தியுடன் விழும் இந்த அருவியில் நீராட தீராத பல நோய்களும் தீருகின்றன. சுற்றுப்பிரகாரத்தில் உக்கிர நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, வல்லப கணபதி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. முன்னோர்கள் முக்தியடைய காசி, ராமேஸ்வரம் சென்று புண்ணிய காரியம் செய்ய முடியாதோர் அமாவாசை நாளில் இங்கு வந்து "திதி' கொடுக்கின்றனர். இத்தலம் புண்ணியங்கள் செய்யும் தலமாக மட்டுமின்றி சிறந்த சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.

இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு அவல், பழங்களை நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். இத்தலத்தில் விநாயகர், வல்லபகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.



பிரார்த்தனை

இங்குள்ள சுரபி நதியில் நீராடி சுவாமியை வணங்கிட பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும், துன்பங்கள் நிவர்த்தியடைந்து நல்வாழ்வு கிட்டும், வேண்டும் வரம் கிடைக்கும், தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

நினைத்த காரியம் வெற்றி பெற, சுவாமிக்கு மாலைகள் சாத்தி தேங்காய், பழம் அபிஷேகம் செய்து நைவேத்யம் படைத்து அன்னதானம் செய்யப்படுகிறது.

தலபெருமை:

மதுரையை எரித்த கண்ணகி ஆவேசத்துடன் தெற்கே வந்த போது நெடுவேள்குன்றம் எனும் இச்சுருளிமலை வழியாகவே கடந்து சென்று பின் கூடலூர் வண்ணாத்திப்பாறை மலைக்குச் சென்றதாக தகவல் உண்டு. இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திக்கு உதாரணமாக உள்ள இம்மலையைக் குறித்து இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அழகாக கூறியுள்ளார். புண்ணிய தீர்த்தங்களையும், பல அற்புதங்கள் புரியும் எண்ணற்ற மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.


தல வரலாறு:

ஒரு முறை சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்த ராவணேஸ்வரன் ஈரேழு உலகம், அண்டசராசரங்கள், நவக்கிரகங்கள், 12 ராசிகள், 27நட்சத்திரங்கள், தேவர்கள் ஆகியோர் தனக்கு கீழே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் பலனால் அவன், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். ராவணனின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட எண்ணி பாதிக்கப்பட்ட அனைவரும் யாவரது கண்களுக்கும் புலப்படாமல் ககனமார்க்கமாக சென்று, மகாவிஷ்ணு தலைமையில்ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, தேவர்களைக் காணாத ராவணன் சனி பகவானை அனுப்பி அவர்களை கண்டறிந்து வரும்படி பணித்தான். அது முடியாமல் போனதால் நாரதரிடம், தேவர்களின் மறைவிடத்தை கண்டறியும்படி அவருக்கு ஆணையிட்டான். அப்படி தேடி வரும் போது ஒரு புற்றின் நடுவே மகரிஷி தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். நாரதர் அவரிடம் தேவர்கள் இருப்பிடம் பற்றி கேட்க, அவர் தேவர்கள் ஆலோசனை நடத்தும் இடத்தைக் கூறினார். நாரதர் மூலமாக இச்செய்தியை அறிந்து கொண்ட ராவணேஸ்வரன், கடுங்கோபம் கொண்டு தேவர்களை அழிக்க தனது அரக்கர் படையுடன் புறப்பட்டான். அவனிடமிருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு மகாவிஷ்ணு, மகரிஷி தவம் செய்த இடத்தில், பஞ்சபூதங்களின் மொத்த வடிவில், பூதசொரூபத்துடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நின்றார். அவரது பூதகோலத்தைக் கண்டு பயந்த ராவணன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். அப்போது ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு, அவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பூத நாராயணனாக உக்கிரத்துடன் இருந்த மகாவிஷ்ணுவிற்கு அன்னம் படைக்க, அதனை உண்ட அவர் தனது விஸ்வரூபத்தை அடக்கி ஒளிமயமாக காட்சியளித்தார். இவ்வாறு தேவர்களுக்கு பூதநாராயணனாக காட்சி தந்த மகாவிஷ்ணு இத்தலத்தில் வீற்றுள்ளார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள்பாலிக்கிறார். இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சுருளிமலை அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி Empty Re: சுருளிமலை அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி

Post by செந்தில் Wed Sep 10, 2014 1:08 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum