தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர்

View previous topic View next topic Go down

அருள்மிகு  ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர் Empty அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர்

Post by முழுமுதலோன் Fri Sep 19, 2014 9:54 am

அருள்மிகு  ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர் T_500_1815

மூலவர் : ஒப்பில்லாத அம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : அரியலூர்
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

சித்திரை, ஆடி மாதம்

தல சிறப்பு:

கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரியபெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில் அரியலூர்


பொது தகவல்:

கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரியபெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன. கருவறையில் சப்த கன்னியர் இருக்கிறார்கள். அருகிலுள்ள சன்னதியில் பத்ரகாளியம்மன் சீற்றம் சிறிதும் இல்லாமல் சிரித்த முகத்தினினளாகக் காட்சியளிக்கிறாள், கணபதி, கந்தன் சன்னதியும் அமைந்துள்ளது. வெளியில் முனியப்பசாமி, அய்யனார், கருப்பனார் சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை

வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடவும், சகல செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

மஞ்சள், குங்குமம், வளையல் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

ஒப்பில்லாத அம்மன் ஏழு கன்னியர்களின் அம்சம் என்பதால் ஓர் உருவே ஏழுருவானதாகச் சொல்கிறார்கள். மஞ்சள், குங்குமம், வளையல் சார்த்தி அம்மனை வழிபடுவோர்க்கு வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடுவது நிச்சயம் என்று சொல்கிறார்கள். பொங்கலிட்டு வணங்கினால் சகல செல்வங்களும் பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கிருக்கும் காவல் தெய்வங்களின் சன்னதியில் தான் பலி நேர்த்திக்கடன் நடத்துகிறார்கள்.

தல வரலாறு:


வளையல் வியாபாரி ஒருவர் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு வியாபாரம் செய்ய சென்றிருக்கிறார். ஒருநாள் தெருதெருவாக சுற்றிவந்து அவர் வளையல் விற்று வந்தபோது அவர் எதிரே ஒரு சின்ன பெண் நின்றுகொண்டு. வளையல்காரரே எனக்கு வளையல் வேண்டும் தருவீர்களா? என்று தன் பிஞ்சு கரங்களை நீட்டி கேட்டுக்கொண்டிருந்தாள். குட்டிப்பெண் சுட்டித்தனம் எதுவும் செய்யறாளோ என்று அவர் யோச்சிருக்கிறார். என்ன பார்க்கறீங்க? வளையலுக்கு காசு தருவேனா, மாட்டேனான்னுதானே, அந்தத் தெருவுல இருக்கிற பெரிய வீடு எங்க அண்ணனுதுதான் அவர்கிட்டே ஒப்பில்லாதவளுக்கு வளையல் போட்டு விட்டதா சொல்லி காசு வாங்கிக்கொள்ளுங்கள். என்று குழந்தை சொல்லிருக்கிறாள். வளையல்காரரும் அவளுடைய கைநிறைய வளையல்களைப் போட்டுவிட்டுருக்கிறார். குழந்தை சந்தோஷமாக கலகல வென்று சிரித்துக்கொண்டே ஓடிப்போய்விட்டாள். சிறுமி சொன்ன வீட்டில் காசை வாங்கிக்கொள்வதற்காக போன வளையல்காரர் திகைத்துவிட்டாராம். ஏன்னென்றால் அது அந்த ஊர் ராஜா ஒப்பில்லாத மழவராயரோட அரண்மனை! ராஜாவீட்டுப் பெண்ணா தன்கிட்டே வளையல் வாங்கிருப்பாள் என்று தயங்கினாலும் கேட்டுத்தான் பார்ப்போம் என்று நுழைந்து கேட்டுவிட்டார் வியாபாரி.

அரண்மனையில் அப்படி ஒரு பெண்குழந்தை இல்லை என்று சொன்னதுடன், ஏமாற்றுவதாக என்னி வளையல்காரரை திட்டி அடித்திருக்கிறார்கள். ஒப்பில்லாதவள்னு பெயர்கூட சொன்னாளேன்னு நம்பினேன் இப்படி ஏமாற்றிவிட்டாளே என்று அழுதார் வளையல்காரர். சட்டென்று ஒருவிஷயம் புரிந்திருக்கிறது ராஜாவுக்கு தன்னோட தங்கை என்று சொல்லி அவரிடம் வளையல் வாங்கிக் கொண்டது தங்களோட குலதெய்வமான ஒப்பில்லாதவள் தான் என்று உடனே ராஜா மன்னிப்பு கேட்டுவிட்டு ஏராளமான பொன்னும் பொருளும் வளையல்காரருக்கு கொடுத்து அனுப்பினார். குழந்தையாக வந்து அம்மன் எந்த இடத்தில் அமர்ந்து வளையல் போட்டுக்கொண்டாலோ அங்கு ஒரு கோயில்கட்டி அம்மனை எழுந்தருளும்படி வேண்டியிருக்கிறார் ராஜா. அம்மனும் அருள்வாக்கில் சரி என்று சொல்லிவிட்டாள்.



சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரியபெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அருள்மிகு  ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர் Empty Re: அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர்

Post by முரளிராஜா Wed Nov 26, 2014 9:12 am

தல வரலாறை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum