Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எலும்பு வலுவாக
Page 1 of 1 • Share
எலும்பு வலுவாக
யார் வலுவான எலும்புடையவர்
எலும்பு வலிமை பெற்றவர்களின் குதிகால்கள், கணுக்கால்கள், முழங்கால்கள், முன் கைகள், கழுத்து, முகவாய்க்கட்டை, தலை, கணுக்கள், எலும்புகள், நகங்கள், பற்கள் ஆகியவை பருத்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் மிகுந்த உற்சாகம் உடையவர்களாகவும், பேராற்றல் பெற்றவர்களாகவும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை, உறுதியான உடல் அமைப்பு, நீண்ட ஆயுள் ஆகியவைகளைப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள்.
எலும்பில் வலிவு பெற்றவர்களின் உறுப்புக்கள் வலுவானவை ஆனால் மெல்லியவை. அவர்கள் பலம் மிகுந்தவர்கள். அவர்களுடைய உடலின் நிறம் அழகாகவும் குரல் இனிமையாகவும் அமைந்திருக்கும். அவர்களுடைய மூட்டுக்கள் பருத்தும் நீண்டும், உருண்டும் இருக்கும்.
- சரகஸம்ஹிதை
நமது மூட்டுகள்
எலும்புகள் பலவித மூட்டுக்களால் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்படுகின்றன. எலும்பு மூட்டுகள் அசையும் மூட்டுகள் (உதாரணம் தோள்பட்டை) மற்றும் அசையா மூட்டுகள் (உதாரணம் மண்டை - ஓடு) என்று பிரிக்கப்படுகின்றன. மூட்டுகளில் எலும்பு களின் இணைப்பு தசை நார்களால் (Ligaments) கட்டப்படுகிறது. இந்த தசை நார்கள் எலும்பையும், எலும்பையும் இணைக்கும். வேறொரு தசை நாணாகிய "டென்டான்" (Tendons) தசையும் எலும்பையும் இணைக்கிறது. அதாவது எலும்பும் எலும்பும் சேர, லிகாமென்ட், எலும்பும் தசையும் சேர டென்டான்கள்.
மூட்டுக்களின் உள்ளே, எலும்புகள் ஒரு நயமான வழவழப்பான பொருளான Articular Cartillage எனும் குருத்தெலும்பால் மூடப் பட்டிருக்கின்றன. மேலாடை போல் மூட்டை மூடும் இந்த கால் அங்குலம் பருமனான குருத்தெலும்பு 'அதிர்ச்சிகளை' தாங்கும். இந்த குருத்தெலும்பையும் மூடுகிறது ஒரு மூட்டு சுரப்பு ஜவ்வு (Synovial membrane) இந்த ஜவ்விலிருந்து சுரக்கும் ஸினோவியல் திரவம் குருத்தெலும்புக்கு உரமிடும், மசக்கை எண்ணையாகவும் செயல் படுகிறது. தவிர எலும்புகளுக்கு சத்துப் பொருட்களையும் தருகிறது.
குருத்தெலும்புகளுக்கு (Cartillage) வலி தெரியாது. அதில் வலி உணர்வை அறிந்து கொள்ளும் நரம்புகள் இல்லை. ஆனால் சினோவியல் திசுக்களில் வலி உணரும் நரம்புகள் உள்ளன.
அசையும் மூட்டுக்களில் பல வகை உண்டு அவை
1. நழுவும் மூட்டுகள் - ஒன்றின் மேல் ஒன்று வழுக்கிச் செல்லும் எலும்புகள் உதாரணம் - கணுக்கால் மூட்டு, மணிக்கட்டு
2. பந்து கிண்ண மூட்டு - பந்து போல் உருண்டையாக இருக்கும் எலும்பு, கிண்ணம் போன்ற உட்குழி உள்ள எலும்பில் சுழல்வது. உதாரணம் - தோள், இடுப்பு மூட்டுகள்
3. கீல் மூட்டுகள் - இவை மூட்டுகளை ஒரு பக்கம் மாத்திரம் திரும்ப விடும் உதாரணம் - முழங்கை, முழங்கால்.
4. சுழலச்சு மூட்டுகள் - வெளியே துருத்திக் கொண்டிருக்கும் எலும்பை மற்றொரு எலும்பு அதை சுற்றி சுழல்வது போன்ற அமைப்பு. உதாரணம் - மண்டையை தாங்கி நிற்கும் முதல் முள்ளெலும்பு.
நிலைக்கு கொண்டு வர முடியும்! இதற்கு ஆனால் சில மாதங்கள் கூட ஆகலாம்.
எலும்பு வலுவடைய
1. பால், பால் சார்ந்த உணவுகள் - மோர், சீஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. வெந்தய கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.
3. ராகி கால்சியம் செறிந்த தானியம். எலும்புக்கு வலிமை கூட்ட ஒரு சமையல் குறிப்பு.
4. புகை பிடிக்காதீர்கள். எலும்புகள் பாதிக்கப்படும்.
5. உடல் எடையை சரியான அளவில் வைத்து, சமச்சீர் உணவு உண்டு, உடற்பயிற்சி செய்தால் தசை, எலும்புகள் வலிமையடையும்.
6. வைட்டமின் 'டி' கிடைக்க, காலை வெய்யிலில் 15 நிமிடம் நிற்கவும்.
7. தினமும் ஒரு வேக வைத்த முட்டையை கொடுத்து வந்தால் சிறுவர்களின் எலும்புகள் பலப்படும் .
எலும்புகள் பலப்பட லேகியம்
தேவை
மாதுளை விதைகள் - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
உலர்ந்த திராட்சை - 100 கிராம்
புளிக்கூழ் - 25 கிராம்
உலர்ந்த துளசி இலைகள் - 25 கிராம்
கஸ்தூரி பிசின் - 10 கிராம்
செய்முறை
உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து களிம்பாக பசைபோல் அரைத்துக் கொண்டு, புளிக் கூழுடன் சேர்க்கவும். இத்துடன் மாதுளை விதைகளை அரைத்து சேர்க்கவும். சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் துளசி இலைகள், கஸ்தூரி இவற்றை சேர்த்து இன்னும் கால் மணி நேரம் கொதிக்க விடவும். இந்த லேகியத்தை படுக்கும் முன் 1/2 - 1 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
குழந்தைகளின் எலும்புகள் பலப்பட வாகபட்டர் சொல்லும் வெளிப்பூச்சு தைலம் ஷீரபால தைலம். 41 மூலிகைகள் கலந்த நல்லெண்ணையாகும். பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம். நமது நாட்டில், குறிப்பாக தென்னிந்தியாவில், பல வகை ஆயுர்வேத தைலங்கள், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக கிடைக்கின்றன. குழந்தை பிறந்த முதல் 2 மாதங்களில், தாய்க்கு தசமூலாரிஷ்டமும் சௌபாக்கிய சுண்டியும் கொடுப்பது வழக்கம். இதனால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு இவற்றின் சாரம் போய்ச்சேரும்.
பல வித மூட்டு வலிகள்
அண்மைக்காலத்தில் நடுவயதி னரையும் வயது முதிர்ந்தவர்களையும் பாதிக்கின்ற நோய்களில் முதலிடம் வகிப்பது மூட்டு மற்றும் எலும்பு தொடர்புடைய நோய்கள் தான். எலும்பு நோய்களைப் பற்றிப் பேசுகின்ற போது ருமாடிஸம் (Rheumatism) என்ற சொல்லும் ஆர்த்ரைட்டிஸ் (Arthritis) என்ற சொல்லும் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட போதும் இவை எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதைத் தெளிவாகக் கூற முடிவதில்லை.
ஆர்த்ரைடீஸ் என்னும் சொல் பொதுவாக பலவித மூட்டுவலி / மூட்டுப் பிடிப்புகளை ஒன்றாக சேர்த்து சொல்லும் வார்த்தை. நிதானமாக, உடலை சீரழித்து முடக்கிப் போடும் வியாதி ஆர்த்ரைடீஸ். உடலில் ஊடுருவி, ஊனத்தை உண்டாக்கும். வலியையும் வேதனையையும் தரும் நோய்.
மூட்டுக்களில் வீக்கம், வலி, விறைத்து போதல், இவைகள் ஆர்த்ரைடீஸின் முக்கிய அறிகுறிகள். ஆர்த்ரைடீஸ் பெரும்பாலும் பெண்களையே மிக அதிகமாக தாக்குகிறது. ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்களை தாக்குகிறது. உலகில் நாலில் ஒருவர், இந்த மூட்டுவலி, மூட்டுப்பிடிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். 50 வயதுக்கு மேல், ஏதாவது ஒரு வகை ஆர்த்ரைடீஸ் வருவது சகஜம்.
ஆர்த்ரைடீஸில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. 200 வகை வியாதிகள் ஏதாவது ஒரு ஆர்த்ரைடீஸை உருவாக்கும்.
மூட்டுகள் வலுவடைய
• கசகசா 100 கிராம், இசப்கோல் 50 கிராம் இவற்றை பொடித்து, 15 நிமிடம் குறைந்த தீயில் 250 மி.லி. ரோஜா எண்ணெயில் இட்டு காய்ச்சவும். இந்த எண்ணெய்யை தினமும் படுப்பதற்கு முன் மூட்டுக்களில் தடவி, மிருதுவாக மசாஜ் செய்யவும்.
• காலையில் மூட்டுக்களை சுடுநீரில் கழுவவும்.
நன்றி -உணவு நலம்
எலும்பு வலிமை பெற்றவர்களின் குதிகால்கள், கணுக்கால்கள், முழங்கால்கள், முன் கைகள், கழுத்து, முகவாய்க்கட்டை, தலை, கணுக்கள், எலும்புகள், நகங்கள், பற்கள் ஆகியவை பருத்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் மிகுந்த உற்சாகம் உடையவர்களாகவும், பேராற்றல் பெற்றவர்களாகவும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை, உறுதியான உடல் அமைப்பு, நீண்ட ஆயுள் ஆகியவைகளைப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள்.
எலும்பில் வலிவு பெற்றவர்களின் உறுப்புக்கள் வலுவானவை ஆனால் மெல்லியவை. அவர்கள் பலம் மிகுந்தவர்கள். அவர்களுடைய உடலின் நிறம் அழகாகவும் குரல் இனிமையாகவும் அமைந்திருக்கும். அவர்களுடைய மூட்டுக்கள் பருத்தும் நீண்டும், உருண்டும் இருக்கும்.
- சரகஸம்ஹிதை
நமது மூட்டுகள்
எலும்புகள் பலவித மூட்டுக்களால் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்படுகின்றன. எலும்பு மூட்டுகள் அசையும் மூட்டுகள் (உதாரணம் தோள்பட்டை) மற்றும் அசையா மூட்டுகள் (உதாரணம் மண்டை - ஓடு) என்று பிரிக்கப்படுகின்றன. மூட்டுகளில் எலும்பு களின் இணைப்பு தசை நார்களால் (Ligaments) கட்டப்படுகிறது. இந்த தசை நார்கள் எலும்பையும், எலும்பையும் இணைக்கும். வேறொரு தசை நாணாகிய "டென்டான்" (Tendons) தசையும் எலும்பையும் இணைக்கிறது. அதாவது எலும்பும் எலும்பும் சேர, லிகாமென்ட், எலும்பும் தசையும் சேர டென்டான்கள்.
மூட்டுக்களின் உள்ளே, எலும்புகள் ஒரு நயமான வழவழப்பான பொருளான Articular Cartillage எனும் குருத்தெலும்பால் மூடப் பட்டிருக்கின்றன. மேலாடை போல் மூட்டை மூடும் இந்த கால் அங்குலம் பருமனான குருத்தெலும்பு 'அதிர்ச்சிகளை' தாங்கும். இந்த குருத்தெலும்பையும் மூடுகிறது ஒரு மூட்டு சுரப்பு ஜவ்வு (Synovial membrane) இந்த ஜவ்விலிருந்து சுரக்கும் ஸினோவியல் திரவம் குருத்தெலும்புக்கு உரமிடும், மசக்கை எண்ணையாகவும் செயல் படுகிறது. தவிர எலும்புகளுக்கு சத்துப் பொருட்களையும் தருகிறது.
குருத்தெலும்புகளுக்கு (Cartillage) வலி தெரியாது. அதில் வலி உணர்வை அறிந்து கொள்ளும் நரம்புகள் இல்லை. ஆனால் சினோவியல் திசுக்களில் வலி உணரும் நரம்புகள் உள்ளன.
அசையும் மூட்டுக்களில் பல வகை உண்டு அவை
1. நழுவும் மூட்டுகள் - ஒன்றின் மேல் ஒன்று வழுக்கிச் செல்லும் எலும்புகள் உதாரணம் - கணுக்கால் மூட்டு, மணிக்கட்டு
2. பந்து கிண்ண மூட்டு - பந்து போல் உருண்டையாக இருக்கும் எலும்பு, கிண்ணம் போன்ற உட்குழி உள்ள எலும்பில் சுழல்வது. உதாரணம் - தோள், இடுப்பு மூட்டுகள்
3. கீல் மூட்டுகள் - இவை மூட்டுகளை ஒரு பக்கம் மாத்திரம் திரும்ப விடும் உதாரணம் - முழங்கை, முழங்கால்.
4. சுழலச்சு மூட்டுகள் - வெளியே துருத்திக் கொண்டிருக்கும் எலும்பை மற்றொரு எலும்பு அதை சுற்றி சுழல்வது போன்ற அமைப்பு. உதாரணம் - மண்டையை தாங்கி நிற்கும் முதல் முள்ளெலும்பு.
நிலைக்கு கொண்டு வர முடியும்! இதற்கு ஆனால் சில மாதங்கள் கூட ஆகலாம்.
எலும்பு வலுவடைய
1. பால், பால் சார்ந்த உணவுகள் - மோர், சீஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. வெந்தய கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.
3. ராகி கால்சியம் செறிந்த தானியம். எலும்புக்கு வலிமை கூட்ட ஒரு சமையல் குறிப்பு.
4. புகை பிடிக்காதீர்கள். எலும்புகள் பாதிக்கப்படும்.
5. உடல் எடையை சரியான அளவில் வைத்து, சமச்சீர் உணவு உண்டு, உடற்பயிற்சி செய்தால் தசை, எலும்புகள் வலிமையடையும்.
6. வைட்டமின் 'டி' கிடைக்க, காலை வெய்யிலில் 15 நிமிடம் நிற்கவும்.
7. தினமும் ஒரு வேக வைத்த முட்டையை கொடுத்து வந்தால் சிறுவர்களின் எலும்புகள் பலப்படும் .
எலும்புகள் பலப்பட லேகியம்
தேவை
மாதுளை விதைகள் - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
உலர்ந்த திராட்சை - 100 கிராம்
புளிக்கூழ் - 25 கிராம்
உலர்ந்த துளசி இலைகள் - 25 கிராம்
கஸ்தூரி பிசின் - 10 கிராம்
செய்முறை
உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து களிம்பாக பசைபோல் அரைத்துக் கொண்டு, புளிக் கூழுடன் சேர்க்கவும். இத்துடன் மாதுளை விதைகளை அரைத்து சேர்க்கவும். சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் துளசி இலைகள், கஸ்தூரி இவற்றை சேர்த்து இன்னும் கால் மணி நேரம் கொதிக்க விடவும். இந்த லேகியத்தை படுக்கும் முன் 1/2 - 1 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
குழந்தைகளின் எலும்புகள் பலப்பட வாகபட்டர் சொல்லும் வெளிப்பூச்சு தைலம் ஷீரபால தைலம். 41 மூலிகைகள் கலந்த நல்லெண்ணையாகும். பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம். நமது நாட்டில், குறிப்பாக தென்னிந்தியாவில், பல வகை ஆயுர்வேத தைலங்கள், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக கிடைக்கின்றன. குழந்தை பிறந்த முதல் 2 மாதங்களில், தாய்க்கு தசமூலாரிஷ்டமும் சௌபாக்கிய சுண்டியும் கொடுப்பது வழக்கம். இதனால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு இவற்றின் சாரம் போய்ச்சேரும்.
பல வித மூட்டு வலிகள்
அண்மைக்காலத்தில் நடுவயதி னரையும் வயது முதிர்ந்தவர்களையும் பாதிக்கின்ற நோய்களில் முதலிடம் வகிப்பது மூட்டு மற்றும் எலும்பு தொடர்புடைய நோய்கள் தான். எலும்பு நோய்களைப் பற்றிப் பேசுகின்ற போது ருமாடிஸம் (Rheumatism) என்ற சொல்லும் ஆர்த்ரைட்டிஸ் (Arthritis) என்ற சொல்லும் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட போதும் இவை எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதைத் தெளிவாகக் கூற முடிவதில்லை.
ஆர்த்ரைடீஸ் என்னும் சொல் பொதுவாக பலவித மூட்டுவலி / மூட்டுப் பிடிப்புகளை ஒன்றாக சேர்த்து சொல்லும் வார்த்தை. நிதானமாக, உடலை சீரழித்து முடக்கிப் போடும் வியாதி ஆர்த்ரைடீஸ். உடலில் ஊடுருவி, ஊனத்தை உண்டாக்கும். வலியையும் வேதனையையும் தரும் நோய்.
மூட்டுக்களில் வீக்கம், வலி, விறைத்து போதல், இவைகள் ஆர்த்ரைடீஸின் முக்கிய அறிகுறிகள். ஆர்த்ரைடீஸ் பெரும்பாலும் பெண்களையே மிக அதிகமாக தாக்குகிறது. ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்களை தாக்குகிறது. உலகில் நாலில் ஒருவர், இந்த மூட்டுவலி, மூட்டுப்பிடிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். 50 வயதுக்கு மேல், ஏதாவது ஒரு வகை ஆர்த்ரைடீஸ் வருவது சகஜம்.
ஆர்த்ரைடீஸில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. 200 வகை வியாதிகள் ஏதாவது ஒரு ஆர்த்ரைடீஸை உருவாக்கும்.
மூட்டுகள் வலுவடைய
• கசகசா 100 கிராம், இசப்கோல் 50 கிராம் இவற்றை பொடித்து, 15 நிமிடம் குறைந்த தீயில் 250 மி.லி. ரோஜா எண்ணெயில் இட்டு காய்ச்சவும். இந்த எண்ணெய்யை தினமும் படுப்பதற்கு முன் மூட்டுக்களில் தடவி, மிருதுவாக மசாஜ் செய்யவும்.
• காலையில் மூட்டுக்களை சுடுநீரில் கழுவவும்.
நன்றி -உணவு நலம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வேர்கள் வலுவாக இருந்தால் கூந்தல் உதிராது
» எலும்பு வலிமை பெற.....
» எலும்பு பற்றிய தகவல்கள்....
» எலும்பு தேய்மானம்
» எலும்பு நோய்களில் இருந்து தப்பிக்க . . .
» எலும்பு வலிமை பெற.....
» எலும்பு பற்றிய தகவல்கள்....
» எலும்பு தேய்மானம்
» எலும்பு நோய்களில் இருந்து தப்பிக்க . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|