Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருமணங்களை யார் நடத்துவது?
Page 1 of 1 • Share
திருமணங்களை யார் நடத்துவது?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ, இல்லையோ, இருமனங்கள் ஒன்றுபடும் திருமணம்தான் மகிழ்ச்சியான திருமணமாக இருக்கமுடியும். அதனால்தான், அனைத்து மதங்களிலும், அனைத்து இனங்களிலும் திருமணத்தை நடத்திவைக்கும்போது, மணப்பெண்–மணமகன் இருவருக்குமே இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.
ஆனால், சமீபகாலங்களில் பல திருமணங்கள் வக்கீல்கள் அறையில் நடக்கிறது. இயற்கையான ஈர்ப்பு காரணமாக சிறுவயதிலேயே இளம்பெண்கள் இதுதான் காதல் என்று நினைத்துக்கொண்டு, காதலனின் எண்ணப்படி இதுபோல ரகசிய திருமணங்களுக்கு சம்மதித்து விடுகிறார்கள். 2009–ம் ஆண்டுக்கு முன்பு எந்த ஒரு திருமணம் என்றாலும் சரி, கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும் என்று சட்டம் கிடையாது. விருப்பப்பட்டவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம் என்று இருந்தது.
ஆனால், உச்சநீதிமன்றம் சீமா பிஸ்வால் வழக்கை விசாரித்தபிறகு, எந்த மதம் என்றாலும் சரி, அனைத்து திருமணங்களும் கட்டாயமாக பத்திரப்பதிவு
அலுவலகங்களில் பதிவு செய்யப்படவேண்டும், இதற்குரிய சட்டங்களை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்றவேண்டும் என்று உத்தரவிட்டது. தமிழக அரசு 2009–ம் ஆண்டு தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தை நிறைவேற்றிய நேரத்தில் பத்திர பதிவுத்துறையை கலந்து ஆலோசிக்கவில்லை, அவர்களுக்குத்தானே நடைமுறை சிக்கல்கள் தெரியும் என்று அப்போதே ஒரு குறை கூறப்பட்டது.
அப்போது எந்த திருமணம் என்றாலும் சரி, அது நடந்த இடம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் இருக்கிறதோ, அந்த அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஒரு விண்ணப்பபாரத்தில் மணமக்கள் இருவரின் படத்தையும் ஒட்டி நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பினால் மட்டும்போதும் என்று இருந்தது. ஆனால், இந்த முறையில் பல தவறுகள் நடக்கின்றன என்று பல குறைபாடுகள் கூறப்படுகின்றன.
பதிவு செய்வதற்கு முன்னால், திருமணங்கள் இறைவழிபாட்டு தலங்களிலோ, மதஅடிப்படையிலோ, பெரியவர்கள் பலர் முன்னிலையில் சீர்திருத்த திருமணங்களாகவோ நடக்கவேண்டும். ஆனால், சமீபகாலங்களாக வக்கீல்கள் முன்னிலையில் நடந்ததாக பதிவு செய்யப்படுவதாக கூறப்படுவது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதுபோன்ற ஒரு திருமணம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கில் ஒருபெண், தன் வீட்டில் வேலை பார்க்க வந்த ஒரு தச்சுதொழிலாளி, தனக்கு தெரியாமலேயே தன்னை அவருடைய மனைவி என்று பதிவு செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி, இதுபோல பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
இதில், கடந்த ஆண்டில் மட்டும் 120 வக்கீல்கள் வடசென்னை பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் 1,559 திருமணங்கள் தங்கள் முன்னிலையில் நடந்ததாக பதிவு செய்துள்ளனர் என்றும், ராயபுரம் பதிவாளர் அலுவலகத்தில் 48 வக்கீல்கள் 1,937 திருமணங்களை பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். ஜார்ஜ்டவுன் கோர்ட்டு வக்கீல்கள் சங்க அறையில் மட்டும் ஒரே ஒரு வக்கீல் 205 திருமணங்களை நடத்திவைத்ததாக பதிவு செய்துள்ளார்.
திருமணங்களை யார் நடத்தி வைப்பது? இப்படி ரகசிய திருமணங்கள், போலி திருமணங்கள் நடப்பதால் சமுதாயம் என்ன ஆகும்? என்று அனைவரும்
கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், நீதிபதிகள் எஸ்.ராஜேசுவரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். வக்கீல்கள்
அறையிலோ, வக்கீல்கள் முன்னிலையிலோ நடந்ததாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோல திருமணங்களை நடத்திவைக்கும் வக்கீல்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
யார் முன்னிலையில், எவ்வாறு திருமணங்கள் நடத்தப்பட வேண்டும்?, பொதுவாக சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள வேலைப்பளு காரணமாக திருமணங்களை நன்கு விசாரித்து பதிவு செய்ய நேரம் இருக்காது. எனவே, உண்மைத்தன்மையை நன்கு கண்டறியும் திறமைகொண்ட சிறப்பு திருமண பதிவாளர் அலுவலகங்கள் வேண்டும். பதிவு செய்ய வரும்போது மணமக்கள் இருவரும் ஆஜராக வேண்டும், இருவரின் மனப்பூர்வமான சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்பதுபோல, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு திருத்த சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுவதே இந்த பிரச்சினைக்கு தீர்வாக முடியும்.
- தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: திருமணங்களை யார் நடத்துவது?
யாரை பழிவாங்க இதை படிச்சுகிட்டு இருக்கீங்க செந்தில்செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா
Similar topics
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?
» சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?
» அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|