Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓஷோவின் பதில்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
ஓஷோவின் பதில்கள்
. சந்தோஷம் என்றால் என்ன?
தியானம் சந்தோஷத்தை கொண்டு வருகிறது என்ற சிந்தனை ஏன் மக்களின் மனதில் எழுகிறது? உண்மையில் அவர்கள் சந்தோஷமான மனிதனை காணும்போதெல்லாம் அவர்கள் எப்போதும் ஒரு தியானதன்மையுள்ள மனதை அறிந்து வந்துள்ளனர். – இரண்டு விஷயங்கள் தொடர்பு பெற்று விட்டன. எப்போதெல்லாம் அவர்கள் ஒரு அழகான தியான ஒளிவட்டம் ஒரு மனிதனை சூழ்ந்திருப்பதை கண்டார்களோ, அந்த மனிதன் அதிக சந்தோஷத்தோடு இருப்பதை, பரவச அதிர்வோடு, பிரகாசமாக இருப்பதை அறிந்து வந்துள்ளனர். இரண்டு விஷயங்களும் தொடர்புள்ளவையாகிவிட்டன. நீ தியானதன்மையோடு இருக்கும்போது சந்தோஷம் வருவதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே தலைகீழாக உள்ளது. நீ சந்தோஷமாக இருக்கும்போது தியானம் வருகிறது.
ஆனால் சந்தோஷமாக இருப்பது கடினம். தியானத்தை கற்றுக் கொள்வது எளிது. சந்தோஷமாக இருப்பது எனில் உன்னுடைய வாழ்க்கைமுறையில் ஒரு தடாலடி மாற்றம், ஒரு திருப்பம் – ஏனெனில் இழப்பதற்கு நேரம் இல்லை. ஒரு திடீர் மாற்றம் – ஒரு திடீர் இடி முழக்கம் – ஒரு தொடர்பறுந்த நிலை…….. நீ திரும்பவும் பிறந்திருக்கிறாய். நீ திரும்பவும் வாழ்க்கையை உன்னுடைய பெற்றோர்கள் பழக்கவழக்கத்தை, உன்னுடைய சமுதாயம் உன்னுடைய நாடு, திணிக்காமல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்போது எப்படி வாழ்ந்திருப்பாயோ, உன்னை தொந்தரவு செய்ய யாரும் இல்லாவிட்டால் எப்படி இருந்திருப்பாயோ, அப்படி வாழ தொடங்குகிறாய் ஆனால் நீ தொந்தரவு செய்யப்பட்டுவிட்டாய்.
உன்மேல் திணிக்கப்பட்ட அத்தனை பழக்க வழக்கங்களையும் நீ உதறியாக வேண்டும் மற்றும் நீ உன்னுடைய சொந்த ஒளியைக் கண்டறிய வேண்டும். பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே, ஏனெனில் சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம் அது. துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பதுதான். பணத்திற்க்கும் சந்தோஷத்திற்க்கும் சம்பந்தம் இல்லை. நீ சந்தோஷமாக இருக்கும்பொழுது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ அதனை சந்தோஷத்திற்காக உபயோகப்படுத்துவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமயானால், நீ அந்த பணத்தை மேலும் சந்தோஷம் இல்லாமல் இருப்பதற்காக பயன்படுத்துவாய். பணம் வெறும் ஒரு சார்பற்ற சக்தி.
நான் பணத்திற்கு எதிரானவல்ல. என்னை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதே. நான் பணத்திற்கு எதிரானவல்ல, பணம் ஒரு அதிகரிக்கும்கருவி. நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷத்தை அடைவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷமற்ற தன்மையை அடைவாய். ஏனெனில் உன்னுடைய பணத்தை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் – உன்னுடைய பணம் உன்னுடைய பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும். நீ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய், உன்னிடம் சக்தி உள்ளது, நீ உனது சக்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? உன்னுடைய சக்தியை வைத்து மேலும் அதிக விஷத்தை உனக்கு நீயே கொடுத்துக் கொள்வாய். நீ மேலும் அதிக துன்பபடுவாய்.
பணம் சந்தோஷத்தை கொண்டு வரப் போகிறது என்பதைப் போல மக்கள் பணத்தை தேடுகிறார்கள். கௌரவம் சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது என்பதைப் போல மக்கள் கௌரவத்தைக் தேடுகிறார்கள். வேறு எங்காவது மேலும் அதிக பணம் கிடைக்குமென்றால் எந்த நொடியில் வேண்டுமானாலும் மக்கள் அவர்களுடைய பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ள, அவர்களுடைய வழிகளை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
முல்லா மகள் வீட்டிற்கு வந்து அவள் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம் அந்த ஊரிலேயே மிகப் பணக்காரனாக உள்ளவன்தான் என்றும், அவன்தான் அந்த பிள்ளைக்கு தந்தை என்றும் கூறினாள். முல்லா மிகவும் கோபமடைந்தார். அவர் அந்த பணக்காரனின் வீட்டிற்கு துப்பாக்கியுடன் விரைந்து சென்றார். அவர் அந்த பணக்காரனை ஒரு மூலையில் பிடித்து தள்ளி, “இப்போது நீ உனது கடைசி மூச்சை விட்டுக் கொள், அல்லது கடவுளிடம் கூற வேண்டிய பிரார்த்தனை ஏதாவது இருந்தால் கூறிக்கொள்” எனக் கூறினார். பணக்காரன் புன்சிரிப்புடன், “நீங்கள் ஏதாவது கிறுக்குத்தனமாக செய்துவிடுமுன் கேளுங்கள். ஆமாம், உங்களுடைய மகள் என்னால் கர்ப்பமடைந்திருப்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு பையன் பிறந்தால் அந்த பையனுக்காக வங்கியில் நான் ஒரு இலட்சரூபாய் போட்டு வைத்து விடுகிறேன், ஒரு பெண் பிறந்தால் அந்தப் பெண்ணுக்காக ஐம்பதினாயிரம் ரூபாய் நான் வங்கியில் போட்டு விடுகிறேன்” எனக் கூறினான். முல்லா அவனுடைய துப்பாக்கியை எடுத்து விட்டு, “ஐயா, ஏதாவது தவறு நடந்து கர்ப்பம் கலைந்துவிட்டால், அல்லது வேறு ஏதாவது நடந்துவிட்டால் நீங்கள் திரும்பவும் என் பெண்ணுக்கு ஒரு வாய்ப்புத் தர தயாரா?” எனக் கேட்டான்.
SOURCE : A SUDDEN CLESH OF THUNDER நன்றி : ஓஷோ தமிழ்
தியானம் சந்தோஷத்தை கொண்டு வருகிறது என்ற சிந்தனை ஏன் மக்களின் மனதில் எழுகிறது? உண்மையில் அவர்கள் சந்தோஷமான மனிதனை காணும்போதெல்லாம் அவர்கள் எப்போதும் ஒரு தியானதன்மையுள்ள மனதை அறிந்து வந்துள்ளனர். – இரண்டு விஷயங்கள் தொடர்பு பெற்று விட்டன. எப்போதெல்லாம் அவர்கள் ஒரு அழகான தியான ஒளிவட்டம் ஒரு மனிதனை சூழ்ந்திருப்பதை கண்டார்களோ, அந்த மனிதன் அதிக சந்தோஷத்தோடு இருப்பதை, பரவச அதிர்வோடு, பிரகாசமாக இருப்பதை அறிந்து வந்துள்ளனர். இரண்டு விஷயங்களும் தொடர்புள்ளவையாகிவிட்டன. நீ தியானதன்மையோடு இருக்கும்போது சந்தோஷம் வருவதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே தலைகீழாக உள்ளது. நீ சந்தோஷமாக இருக்கும்போது தியானம் வருகிறது.
ஆனால் சந்தோஷமாக இருப்பது கடினம். தியானத்தை கற்றுக் கொள்வது எளிது. சந்தோஷமாக இருப்பது எனில் உன்னுடைய வாழ்க்கைமுறையில் ஒரு தடாலடி மாற்றம், ஒரு திருப்பம் – ஏனெனில் இழப்பதற்கு நேரம் இல்லை. ஒரு திடீர் மாற்றம் – ஒரு திடீர் இடி முழக்கம் – ஒரு தொடர்பறுந்த நிலை…….. நீ திரும்பவும் பிறந்திருக்கிறாய். நீ திரும்பவும் வாழ்க்கையை உன்னுடைய பெற்றோர்கள் பழக்கவழக்கத்தை, உன்னுடைய சமுதாயம் உன்னுடைய நாடு, திணிக்காமல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்போது எப்படி வாழ்ந்திருப்பாயோ, உன்னை தொந்தரவு செய்ய யாரும் இல்லாவிட்டால் எப்படி இருந்திருப்பாயோ, அப்படி வாழ தொடங்குகிறாய் ஆனால் நீ தொந்தரவு செய்யப்பட்டுவிட்டாய்.
உன்மேல் திணிக்கப்பட்ட அத்தனை பழக்க வழக்கங்களையும் நீ உதறியாக வேண்டும் மற்றும் நீ உன்னுடைய சொந்த ஒளியைக் கண்டறிய வேண்டும். பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே, ஏனெனில் சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம் அது. துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பதுதான். பணத்திற்க்கும் சந்தோஷத்திற்க்கும் சம்பந்தம் இல்லை. நீ சந்தோஷமாக இருக்கும்பொழுது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ அதனை சந்தோஷத்திற்காக உபயோகப்படுத்துவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமயானால், நீ அந்த பணத்தை மேலும் சந்தோஷம் இல்லாமல் இருப்பதற்காக பயன்படுத்துவாய். பணம் வெறும் ஒரு சார்பற்ற சக்தி.
நான் பணத்திற்கு எதிரானவல்ல. என்னை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதே. நான் பணத்திற்கு எதிரானவல்ல, பணம் ஒரு அதிகரிக்கும்கருவி. நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷத்தை அடைவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷமற்ற தன்மையை அடைவாய். ஏனெனில் உன்னுடைய பணத்தை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் – உன்னுடைய பணம் உன்னுடைய பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும். நீ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய், உன்னிடம் சக்தி உள்ளது, நீ உனது சக்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? உன்னுடைய சக்தியை வைத்து மேலும் அதிக விஷத்தை உனக்கு நீயே கொடுத்துக் கொள்வாய். நீ மேலும் அதிக துன்பபடுவாய்.
பணம் சந்தோஷத்தை கொண்டு வரப் போகிறது என்பதைப் போல மக்கள் பணத்தை தேடுகிறார்கள். கௌரவம் சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது என்பதைப் போல மக்கள் கௌரவத்தைக் தேடுகிறார்கள். வேறு எங்காவது மேலும் அதிக பணம் கிடைக்குமென்றால் எந்த நொடியில் வேண்டுமானாலும் மக்கள் அவர்களுடைய பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ள, அவர்களுடைய வழிகளை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
முல்லா மகள் வீட்டிற்கு வந்து அவள் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம் அந்த ஊரிலேயே மிகப் பணக்காரனாக உள்ளவன்தான் என்றும், அவன்தான் அந்த பிள்ளைக்கு தந்தை என்றும் கூறினாள். முல்லா மிகவும் கோபமடைந்தார். அவர் அந்த பணக்காரனின் வீட்டிற்கு துப்பாக்கியுடன் விரைந்து சென்றார். அவர் அந்த பணக்காரனை ஒரு மூலையில் பிடித்து தள்ளி, “இப்போது நீ உனது கடைசி மூச்சை விட்டுக் கொள், அல்லது கடவுளிடம் கூற வேண்டிய பிரார்த்தனை ஏதாவது இருந்தால் கூறிக்கொள்” எனக் கூறினார். பணக்காரன் புன்சிரிப்புடன், “நீங்கள் ஏதாவது கிறுக்குத்தனமாக செய்துவிடுமுன் கேளுங்கள். ஆமாம், உங்களுடைய மகள் என்னால் கர்ப்பமடைந்திருப்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு பையன் பிறந்தால் அந்த பையனுக்காக வங்கியில் நான் ஒரு இலட்சரூபாய் போட்டு வைத்து விடுகிறேன், ஒரு பெண் பிறந்தால் அந்தப் பெண்ணுக்காக ஐம்பதினாயிரம் ரூபாய் நான் வங்கியில் போட்டு விடுகிறேன்” எனக் கூறினான். முல்லா அவனுடைய துப்பாக்கியை எடுத்து விட்டு, “ஐயா, ஏதாவது தவறு நடந்து கர்ப்பம் கலைந்துவிட்டால், அல்லது வேறு ஏதாவது நடந்துவிட்டால் நீங்கள் திரும்பவும் என் பெண்ணுக்கு ஒரு வாய்ப்புத் தர தயாரா?” எனக் கேட்டான்.
SOURCE : A SUDDEN CLESH OF THUNDER நன்றி : ஓஷோ தமிழ்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோவின் பதில்கள்
அங்கீகாரத்திற்கான தேவை
அங்கீகரிக்கப் படுதலும் அடையாளம் காணப்படுதலும் எல்லோரின் தேடுதலாக இருக்கிறது என்பதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். நாம் அடையாளம் கண்டு கொள்ளப்படாவிடில் நாம் யாருமில்லை, பிரயோஜனமேயில்லை என நமக்கு சொல்லித்தரப்பட்டிருப்பதால் நமது வாழ்க்கை முறையே அப்படித்தான் இருக்கிறது.
காரியம் முக்கியமில்லை, அதன்மூலம் கிடைக்கும் அங்கீகாரம் தான் பெரிதாக இருக்கிறது. இது விஷயங்களை தலைகீழாக மாற்றி விடுகிறது.
காரியம்தான் முக்கியம். சந்தோஷம் அதில்தான் இருக்கிறது. நீ காரியத்தைத்தான் செய்ய வேண்டும், அடையாளத்தைத்தான் தேட வேண்டியதில்லை. ஏனெனில் நீ படைக்கும் போது சந்தோஷத்தை பெறுகிறாய், நீ காரியத்தை அதற்காகவே செய்கிறாய்.
நீ நேசிக்கும் வேலையை செய், அங்கீகாரத்தை தேடாதே. அப்படி வந்தால் சரிதான், வரவில்லையென்றால் அதை நினைக்காதே. உன்னுடைய திருப்தி அந்த காரியத்தில் தான் வரவேண்டும். வேலை எதுவாக இருந்தாலும் அதை நேசித்து, அங்கீகாரம் தேடாமல் அதை அனுபவித்து செய்யும் கலையை, இந்த சிறிய விஷயத்தை எல்லோரும் கற்றுக் கொண்டால் நமக்கு இன்னும் அழகான கொண்டாடும் அழகான உலகம் கிடைக்கும். இப்போதுள்ள முறைப்படி உலகம் உனக்கு இன்னும் துயரத்தைத் தான் தருகிறது. நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை நீ நேசிப்பதாலோ, அதை உன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்பதாலோ அதை நீ செய்வதில்லை, உலகம் அங்கீகரிக்கப்பதாலும், பரிசு தருவதாலும், கோல்ட் மெடல், நோபிள் பரிசு தருவதாலும் தான் செய்கிறாய்.
ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு நோபிள் பரிசு தர முடியாது – இதனால் படைப்பு திறனின் உள்ளார்ந்த மதிப்பை அவர்கள் எடுத்து விடுகிறார்கள், மேலும் கோடிக்கணக்கான மக்களின் திறமையை அழித்து விடுகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் அங்கீகாரத்திற்கான ஆசையை உருவாக்கி விடுகிறாய், அதனால் யாரும் அவர்கள் செய்வதை அனுபவித்து, சந்தோஷமாக, அமைதியாக, மௌனமாக செய்வதில்லை.
மேலும் வாழ்க்கை சிறிய விஷயங்களில்தான் இருக்கிறது. அந்த சிறிய விஷயங்களுக்காக பரிசு எதுவும் கிடைக்காது, அரசாங்கத்தில் மரியாதை எதுவும் கிடைக்காது, பல்கலைகழகத்தில் பட்டம் எதுவும் கிடைக்காது.
நீ எதற்காக அங்கீகாரத்தைப்பற்றி கவலைப்படுகிறாய் நீ செய்யும் வேலையை நீ நேசிக்க வில்லையென்றால்தான் அங்கீகாரம் தேடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டும். அப்போதுதான் அதில் பொருளிருக்கிறது, ஏனெனில் அது மாற்றாக தோன்றுகிறது. நீ உனது வேலையை வெறுக்கிறாய், நீ அதை செய்ய விரும்பவில்லைஆனாலும் நீ அதை செய்கிறாய், ஏனெனில் அங்கே அங்கீகாரம் கிடைக்கிறது. நீ பாராட்டப்படுகிறாய், அடையாளம் காணப்படுகிறாய். அங்கீகாரத்தைப்பற்றி கவலைப் படுவதற்கு பதிலாக நீ உனது வேலையை மறுபரிசீலனை செய். நீ அதை செய்ய விரும்புகிறாயா, செய் – அவ்வளவுதான். நீ அதை செய்ய விரும்பவில்லையா அப்போது மாற்றிக் கொள்.நீ அங்கீகாரம் பெற வேண்டும் எனவும் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உன்னை தூண்டிக் கொண்டே இருப்பார்கள். இது மக்களை கட்டுபாட்டில் வைத்திருக்க உதவும் ஒரு தந்திரமான முறையாகும்.
ஒரு அடிப்படையான விஷயத்தை நினைவில் கொள். நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை விரும்பி செய், அதில் அங்கீகாரம் தேடாதே. அது பிச்சையெடுப்பதைப் போன்றது. ஏன் ஒருவர் அங்கீகாரம் தேட வேண்டும் ஏன் ஒருவர் அடையாளம் காணப்படுவதில் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்.
உன்னுள் ஆழ்ந்து பார் நீ செய்வதை நீ விரும்பாமல் இருக்கலாம், நாம் தவறான வழியில் போகிறோமோ என்ற பயம் உனக்கு இருக்கலாம், எல்லோரும் பாராட்டப்படுவதன் மூலம் நீ நாம் சரிதான் என்ற உணர்வைப் பெறலாம். அங்கீகாரம் நீ சரியான இலக்கை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம்.
இது உன்னுடைய உணர்வுதான். இதற்கும் வெளி உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் ஏன் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருக்கையில், நீயே சார்ந்தவனாகி விடுகிறாய்
நான் நோபல் பரிசை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக இந்த உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா மதங்களிலிருந்தும் வரும் கண்டனத்தை நான் பெரிதாக மதிக்கிறேன். நோபல் பரிசை நான் ஏற்றுக் கொண்டால் நான் சார்ந்து இருப்பவனாகி விடுகிறேன். நான் என்னை மதிக்கவில்லை, பதிலாக நோபள் பரிசை மதிக்கிறேன் என்றாகி விடும். இப்போது நான் என்னை மதிக்கிறேன் வேறு எதற்க்கும் நான் மதிப்பளிக்கவில்லை. இந்த வழியில் நீ தனித்துவமானவனாக இருக்கலாம். இப்படி தன்னுடைய வழியில் முழுமையான சுதந்திரத்தில் வாழ்வது, உன்னுடைய சொந்த காலில் நிற்பது, தன்னுடைய சொந்த முயற்சியில் இருப்பது ஒரு மனிதனை உண்மையான நிலை பெற்றவனாகவும் வேரூன்றியவனாகவும் மாற்றும். அதுதான் ஒரு மனிதன் மலர்தலின் ஆரம்பம்.
தன்னைப் பற்றிய உணர்வு சிறிதளவாவது இருக்கும் மனிதன் தனது அன்பில், தனது சொந்த முயற்சியில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்படாமல் வாழ்வான். உனது வேலை எந்த அளவு மதிப்பு வாய்ந்ததோ அந்த அளவு குறைவாகத்தான் உனக்கு மரியாதை கிடைக்கும். மேலும் உனது வேலை மிகுந்த புத்திகூர்மை கொண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில் உனது வாழ்நாளில் உனக்கு மதிப்பு கிடைக்காது. நீ கண்டனம் செய்யப் படுவாய். இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கடந்த பிறகு உனக்கு சிலை வடிக்கப்படும். நீ எழுதிய புத்தகங்கள் மதிக்கப்படும். ஒரு உண்மையான அறிவாளியை புரிந்து கொள்ள இந்த சாதாரண மனித குலத்திற்கு மூன்று நூற்றாண்டுகள் தேவைப்படும். இந்த இடைவெளி மிகப் பெரியது. முட்டாள்களால் மதிக்கப்பட நீ அவர்களது கோட்பாட்டிற்க்குள் அடங்க வேண்டும், அவர்களது எதிர்பார்ப்பின்படி இருக்க வேண்டும். இந்த நோய் பிடித்த மனித குலம் மதிக்க வேண்டுமானால் நீ அவர்களை விட நோய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் உன்னை மதிப்பார்கள். ஆனால் அதனால் நீ பெறுவது என்ன நீ உனது ஆன்மாவை இழக்கிறாய், நீ எதையும் பெறுவதில்லை.
BEYOND PSYCHOLOGY நன்றி : ஓஷோ தமிழ்
அங்கீகரிக்கப் படுதலும் அடையாளம் காணப்படுதலும் எல்லோரின் தேடுதலாக இருக்கிறது என்பதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். நாம் அடையாளம் கண்டு கொள்ளப்படாவிடில் நாம் யாருமில்லை, பிரயோஜனமேயில்லை என நமக்கு சொல்லித்தரப்பட்டிருப்பதால் நமது வாழ்க்கை முறையே அப்படித்தான் இருக்கிறது.
காரியம் முக்கியமில்லை, அதன்மூலம் கிடைக்கும் அங்கீகாரம் தான் பெரிதாக இருக்கிறது. இது விஷயங்களை தலைகீழாக மாற்றி விடுகிறது.
காரியம்தான் முக்கியம். சந்தோஷம் அதில்தான் இருக்கிறது. நீ காரியத்தைத்தான் செய்ய வேண்டும், அடையாளத்தைத்தான் தேட வேண்டியதில்லை. ஏனெனில் நீ படைக்கும் போது சந்தோஷத்தை பெறுகிறாய், நீ காரியத்தை அதற்காகவே செய்கிறாய்.
நீ நேசிக்கும் வேலையை செய், அங்கீகாரத்தை தேடாதே. அப்படி வந்தால் சரிதான், வரவில்லையென்றால் அதை நினைக்காதே. உன்னுடைய திருப்தி அந்த காரியத்தில் தான் வரவேண்டும். வேலை எதுவாக இருந்தாலும் அதை நேசித்து, அங்கீகாரம் தேடாமல் அதை அனுபவித்து செய்யும் கலையை, இந்த சிறிய விஷயத்தை எல்லோரும் கற்றுக் கொண்டால் நமக்கு இன்னும் அழகான கொண்டாடும் அழகான உலகம் கிடைக்கும். இப்போதுள்ள முறைப்படி உலகம் உனக்கு இன்னும் துயரத்தைத் தான் தருகிறது. நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை நீ நேசிப்பதாலோ, அதை உன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்பதாலோ அதை நீ செய்வதில்லை, உலகம் அங்கீகரிக்கப்பதாலும், பரிசு தருவதாலும், கோல்ட் மெடல், நோபிள் பரிசு தருவதாலும் தான் செய்கிறாய்.
ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு நோபிள் பரிசு தர முடியாது – இதனால் படைப்பு திறனின் உள்ளார்ந்த மதிப்பை அவர்கள் எடுத்து விடுகிறார்கள், மேலும் கோடிக்கணக்கான மக்களின் திறமையை அழித்து விடுகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் அங்கீகாரத்திற்கான ஆசையை உருவாக்கி விடுகிறாய், அதனால் யாரும் அவர்கள் செய்வதை அனுபவித்து, சந்தோஷமாக, அமைதியாக, மௌனமாக செய்வதில்லை.
மேலும் வாழ்க்கை சிறிய விஷயங்களில்தான் இருக்கிறது. அந்த சிறிய விஷயங்களுக்காக பரிசு எதுவும் கிடைக்காது, அரசாங்கத்தில் மரியாதை எதுவும் கிடைக்காது, பல்கலைகழகத்தில் பட்டம் எதுவும் கிடைக்காது.
நீ எதற்காக அங்கீகாரத்தைப்பற்றி கவலைப்படுகிறாய் நீ செய்யும் வேலையை நீ நேசிக்க வில்லையென்றால்தான் அங்கீகாரம் தேடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டும். அப்போதுதான் அதில் பொருளிருக்கிறது, ஏனெனில் அது மாற்றாக தோன்றுகிறது. நீ உனது வேலையை வெறுக்கிறாய், நீ அதை செய்ய விரும்பவில்லைஆனாலும் நீ அதை செய்கிறாய், ஏனெனில் அங்கே அங்கீகாரம் கிடைக்கிறது. நீ பாராட்டப்படுகிறாய், அடையாளம் காணப்படுகிறாய். அங்கீகாரத்தைப்பற்றி கவலைப் படுவதற்கு பதிலாக நீ உனது வேலையை மறுபரிசீலனை செய். நீ அதை செய்ய விரும்புகிறாயா, செய் – அவ்வளவுதான். நீ அதை செய்ய விரும்பவில்லையா அப்போது மாற்றிக் கொள்.நீ அங்கீகாரம் பெற வேண்டும் எனவும் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உன்னை தூண்டிக் கொண்டே இருப்பார்கள். இது மக்களை கட்டுபாட்டில் வைத்திருக்க உதவும் ஒரு தந்திரமான முறையாகும்.
ஒரு அடிப்படையான விஷயத்தை நினைவில் கொள். நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை விரும்பி செய், அதில் அங்கீகாரம் தேடாதே. அது பிச்சையெடுப்பதைப் போன்றது. ஏன் ஒருவர் அங்கீகாரம் தேட வேண்டும் ஏன் ஒருவர் அடையாளம் காணப்படுவதில் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்.
உன்னுள் ஆழ்ந்து பார் நீ செய்வதை நீ விரும்பாமல் இருக்கலாம், நாம் தவறான வழியில் போகிறோமோ என்ற பயம் உனக்கு இருக்கலாம், எல்லோரும் பாராட்டப்படுவதன் மூலம் நீ நாம் சரிதான் என்ற உணர்வைப் பெறலாம். அங்கீகாரம் நீ சரியான இலக்கை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம்.
இது உன்னுடைய உணர்வுதான். இதற்கும் வெளி உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் ஏன் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருக்கையில், நீயே சார்ந்தவனாகி விடுகிறாய்
நான் நோபல் பரிசை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக இந்த உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா மதங்களிலிருந்தும் வரும் கண்டனத்தை நான் பெரிதாக மதிக்கிறேன். நோபல் பரிசை நான் ஏற்றுக் கொண்டால் நான் சார்ந்து இருப்பவனாகி விடுகிறேன். நான் என்னை மதிக்கவில்லை, பதிலாக நோபள் பரிசை மதிக்கிறேன் என்றாகி விடும். இப்போது நான் என்னை மதிக்கிறேன் வேறு எதற்க்கும் நான் மதிப்பளிக்கவில்லை. இந்த வழியில் நீ தனித்துவமானவனாக இருக்கலாம். இப்படி தன்னுடைய வழியில் முழுமையான சுதந்திரத்தில் வாழ்வது, உன்னுடைய சொந்த காலில் நிற்பது, தன்னுடைய சொந்த முயற்சியில் இருப்பது ஒரு மனிதனை உண்மையான நிலை பெற்றவனாகவும் வேரூன்றியவனாகவும் மாற்றும். அதுதான் ஒரு மனிதன் மலர்தலின் ஆரம்பம்.
தன்னைப் பற்றிய உணர்வு சிறிதளவாவது இருக்கும் மனிதன் தனது அன்பில், தனது சொந்த முயற்சியில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்படாமல் வாழ்வான். உனது வேலை எந்த அளவு மதிப்பு வாய்ந்ததோ அந்த அளவு குறைவாகத்தான் உனக்கு மரியாதை கிடைக்கும். மேலும் உனது வேலை மிகுந்த புத்திகூர்மை கொண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில் உனது வாழ்நாளில் உனக்கு மதிப்பு கிடைக்காது. நீ கண்டனம் செய்யப் படுவாய். இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கடந்த பிறகு உனக்கு சிலை வடிக்கப்படும். நீ எழுதிய புத்தகங்கள் மதிக்கப்படும். ஒரு உண்மையான அறிவாளியை புரிந்து கொள்ள இந்த சாதாரண மனித குலத்திற்கு மூன்று நூற்றாண்டுகள் தேவைப்படும். இந்த இடைவெளி மிகப் பெரியது. முட்டாள்களால் மதிக்கப்பட நீ அவர்களது கோட்பாட்டிற்க்குள் அடங்க வேண்டும், அவர்களது எதிர்பார்ப்பின்படி இருக்க வேண்டும். இந்த நோய் பிடித்த மனித குலம் மதிக்க வேண்டுமானால் நீ அவர்களை விட நோய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் உன்னை மதிப்பார்கள். ஆனால் அதனால் நீ பெறுவது என்ன நீ உனது ஆன்மாவை இழக்கிறாய், நீ எதையும் பெறுவதில்லை.
BEYOND PSYCHOLOGY நன்றி : ஓஷோ தமிழ்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோவின் பதில்கள்
மிகவும் பயனுள்ள பகிர்வு ஜோர்பா.
உங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் பயனுள்ளது. மகிழ்ச்சி!!!
உங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் பயனுள்ளது. மகிழ்ச்சி!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஓஷோவின் கதைகள்
» ஓஷோவின் சின்ன கருத்துக்கள்
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
» குருவின் பதில்கள்
» சத்குரு பதில்கள்
» ஓஷோவின் சின்ன கருத்துக்கள்
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
» குருவின் பதில்கள்
» சத்குரு பதில்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|