தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொக்குச் சிந்தனை-தனக்கு எது தேவை என்பதில் தெளிவு வேண்டாமா?

View previous topic View next topic Go down

கொக்குச் சிந்தனை-தனக்கு எது தேவை என்பதில் தெளிவு வேண்டாமா? Empty கொக்குச் சிந்தனை-தனக்கு எது தேவை என்பதில் தெளிவு வேண்டாமா?

Post by நாஞ்சில் குமார் Sat Nov 15, 2014 10:29 pm

மனம் மயங்குதே...

‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு...’ என்கிறார் வள்ளுவர். இரைக்காக கரையில் காத்திருக்கும் கொக்கு. அதன் முன்னால் தண்ணீரில் சிறு மீன்கள் துள்ளி ஓடும். கொக்கு கொத்தித் தின்னாமல் ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் காத்திருக்கும். இதைப் பார்க்கிற பெரிய மீன்கள், கொக்கு தம்மை ஒன்றும் செய்யாது என்கிற நினைப்பில் கொக்கின் முன்னால் துள்ளி விளையாடத் தொடங்கும். அத்தனை நேரம் அமைதி காத்த கொக்கு, அந்த மீன்களைக் கொத்தி இரையாக்கிக் கொள்ளும். பகுத்தறிவு இல்லாத கொக்குக்கே இத்தனை சாதுரியம் இருக்கும் போது, ஆறறிவு கொண்ட மனிதனுக்கு இருக்க வேண்டாமா? தனக்கு எது தேவை என்பதில் தெளிவு வேண்டாமா?

‘‘நல்லா படிக்கிற பொண்ணு... காலேஜ்ல எல்லாத்துலயும் முதல்ல வருவா. அப்படிப்பட்டவளை காலேஜுக்கு அனுப்பாம வச்சிருக்கிறது எங்களுக்கே சங்கடமாத்தான் இருக்கு. ஆனாலும், அவ வாழ்க்கை தப்பாப் போயிடக் கூடாதேங்கிற பயத்துலதான் காலேஜுக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டோம்... அவளுக்கு நல்லவிதமா நாலு வார்த்தை புத்திமதி சொல்லி, மனசை மாத்தினீங்கன்னா நல்லது மேடம்...’’ என்றபடி நிஷாவின் அம்மா, அப்பா, அக்கா, அக்கா கணவர், இன்னும் சொந்த பந்தங்கள் பலரும் என்னை சந்திக்க வந்தார்கள்.

நிஷாவின் அம்மாதான் முதலில் ஆரம்பித்தார்... ‘‘நிஷா எங்களுக்கு முதல் பொண்ணு. அவளுக்குக் கீழே ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. ஒரு வீட்லேருந்து அவளை பெண் கேட்டு வந்தாங்க. பையன் லட்சணமா இருந்தான். நல்ல குடும்பமா தெரிஞ்சது. அவ படிப்பை முடிக்கட்டும், அப்புறம் பேசி முடிக்கலாம்னு இருந்தோம். இது எதுவும் நிஷாவுக்கு தெரியாது. ஆனா, அந்தப் பையனோட தெருவுல குடியிருக்கிற ஒரு பொண்ணு நிஷாவோட காலேஜ்ல படிக்கிறா. அவ மூலமா நிஷாவுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு. அவ நிஷாகிட்ட பையனோட போட்டோவை காட்டி, ‘இவன்தான் உன்னை பெண் கேட்டு வந்தவன்’னு சொல்லியிருக்கா.

அதுலேருந்து அவளுக்கு அந்தப் பையன் மேல ஒரு ஆசை. இதுக்கிடையில நாங்க விசாரிச்சதுல அவங்க குடும்பம் நாங்க நினைச்ச மாதிரி இல்லை.. எங்க பொண்ணுக்கு சரிப்படாதுனு தெரிய வந்தது. அந்த ஐடியாவை அப்படியே விட்டுட்டோம். இவளோ அவன்தான் வேணும்னு உருகறா. ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க. அவன் வேண்டாம்னு சொன்னதுலேருந்து சாப்பிட மாட்டேங்கிறா... தூங்க மாட்டேங்கிறா... இப்படித்தான் 3 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பையன் வீட்லேருந்து கேட்டு வந்தாங்க. ரொம்ப சின்ன பொண்ணு... இப்ப வேண்டாம்னு சொன்னோம். ஆனா, எங்களுக்குத் தெரியாம ரெண்டு பேரும் ஃப்ரெண்டாகி, பேசிக்க ஆரம்பிச்சாங்க.

ஒன்றரை வருஷம் கழிச்சு தான் அதை விட்டா. இப்ப இப்படியொரு பிரச்னை... நீங்கதான் அவ மனசை மாத்தணும்...’’ என்றவரை அமைதிப்படுத்திவிட்டு, நிஷாவிடம் தனியே பேசினேன். ‘‘உன் காதல் எவ்வளவு உறுதியான துனு நீ நிரூபிச்சிட்டால் உங்கம்மா-அப்பாகிட்ட நானே பேசுறேன்...’’  என்றபடி அவளுடன் பேசத்  தொடங்கினேன். காதல், இனக் கவர்ச்சி, கல்யாணம், தாம்பத்தியம் எனப் பல விஷயங்கள் குறித்தும் அவளுக்கு உள்ள புரிதல் பற்றிப் பேச வைத்தேன். 18 வயதில் அவள் எல்லா விஷயங்களையும்  தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பது வியக்க வைத்தது. 15 வயதில் எழுந்த காதலைப் பற்றி மட்டுமின்றி, அதற்கு முன்பான இனக் கவர்ச்சி களையும் பகிர்ந்து கொண்டாள்.

‘‘எனக்கு 15 வயசிருக்கும் போது, அவன்தான் என்னை லவ் பண்றதா சொன்னான். ‘எஸ்.எம்.எஸ். பண்ணலைன்னா செத்துடுவேன்’னான். அதனால அனுப்பினேன்... அப்புறம் ஒருநாள் அவனே திடீர்னு மெசேஜ் அனுப்பறதை நிறுத்திட்டான். நானும் விட்டுட்டேன்...’’‘‘கொஞ்ச நாள் எங்கக் குடும்பம் வெளிநாட்ல இருந்தது. 6 வயசிருக்கும் போது, பக்கத்து வீட்டுப் பையனை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு... எந்நேரமும் அவன்கூடவே இருப்பேன். ஒண்ணா சாப்பிடுவோம். விளையாடுவோம். 12 வயசுல ஸ்கூல்ல படிக்கிற பையன் மேல ஒரு கிரஷ் வந்துச்சு. அவனை ரொம்பப் பிடிச்சது. 14 வயசுல இந்தியா வந்துட்டோம். அதுக்குப் பிறகு தான் என்னைப் பெண் கேட்டு வந்தாங்க. அந்தப் பையனோட பேசிட்டிருந்தேன்.

இப்ப இவன்... ஆனா, இந்த முறை நான் உறுதியா இருக்கேன். இவனைத்தான் நான் கல்யாணம்  பண்ணிக்குவேன். வீட்ல முதல்ல அவனைப் பத்தி நல்ல விதமா சொல்லிட்டிருந்தாங்க. திடீர்னு அவங்க குடும்பம் சரியில்லைங்கிறாங்க...’’ என அழ ஆரம்பித்தாள்.‘‘இந்தப் பையன் இல்லாவிட்டா உங்கம்மா அப்பா வேற பையனைப் பார்ப்பாங்களே... அப்படி அவங்க பார்க்கிற பையன், இவனைவிட அழகானவனா, பெட்டரா இருந்தா உன் மனசு மாறுமா?’’ என்ற என் கேள்விக்கு ‘இல்லை’ என உறுதியான பதில் வந்தது அவளிடமிருந்து. ‘‘புதுசா மொபைல் வாங்கணும்னு முடிவு பண்றே... உன் ஃப்ரெண்ட் வச்சிருக்கிறதைவிட அட்வான்ஸ்டு மாடல் வாங்க ஆசைப்பட்டு கடைக்குப் போய் லேட்டஸ்ட் மாடல் போன் கேட்கறே... கடைக்காரரும் காட்டறாரு... அதே நேரம், ‘இந்த மாடல் பத்தி நிறைய கம்ப்ளெயின்ட் வருது.

வாங்கினவங்க பலரும் திருப்பிக் கொடுத்துட்டு வேற மாடல் வாங்கிட்டுப் போறாங்க. நாங்களும் கம்பெனிகிட்ட சொல்லியிருக்கோம். இதுல உள்ள பிரச்னைகளை சரி பண்ணி, அடுத்த மாடல் வர இன்னும் நாலஞ்சு மாசமாகும். நீங்க எதிர்பார்க்கிற அத்தனை ஃபீச்சர்ஸும் உள்ள மாதிரி இன்னொரு போன் இருக்கு. இது வரைக்கும் ஒரு புகார் இல்லை. பார்க்கறீங்களா’னு கேட்கிறார். நீ புத்திசாலிப் பெண்ணா இருந்தா என்ன செய்வே?’’ என்றேன். சற்று நேரம் யோசித்தவள், ‘கடைக்காரர் சொல்ற இன்னொரு மாடலை பார்ப்பேன்’’ என்றாள். ‘‘அதுதான் வாழ்க்கை. உயிரற்ற செல்போனுக்கு பொருந்தற இந்த விதி, உயிருள்ள மனுஷனுக்கும் பொருந்தும்தானே...’’ என்றேன். ஏதோ புரிந்தவள் போல யோசித்தாள்.

‘‘உனக்குப் பிடிச்ச ஹீரோவோட படம் பார்க்கறே... அந்தப் படத்துல அந்த ஹீரோ சூப்பரா நடிச்சிருக்காரு... அவர் டான்ஸ் சூப்பர்... நடிப்பு அசத்தல்’னு சொல்றது புத்திசாலித்தனமா? இல்லைனா அந்த ஹீரோவை நிஜ ஹீரோவா நினைச்சு உருகறது புத்திசாலித்தனமா? உனக்கு இப்பதான் 20 வயசு. இதுக்குள்ளயே உனக்குத் தெரிஞ்சும் தெரியாமலும் பலரோட கவனத்தையும் ஈர்த்திருக்கே... 22 வயசுல கல்யாணம் பண்ற முடிவுல இருக்கே. அதுக்குள்ள  வாழ்க்கையில நீ இன்னும் நிறைய பேரை சந்திப்பே... இப்ப ஒருத்தரைப் பார்த்துப் பிடிச்சிட்டா, ‘அவர்தான் எனக்கான என் கணவர்’னு ஒரு முடிவுக்கு வராதே. இப்ப உனக்குப் பிடிச்சவங்களை விடவும் பெட்டரான நபர்களை சந்திப்பே... உங்கம்மா அப்பாவை சந்தேகப்படாதே...

அவங்க உன் காதலை வேணா எதிர்க்கலாமே தவிர, உனக்கு நல்ல கணவர் அமையணும் என்பதுல உன்னைவிட அதிக அக்கறை கொண்டவங்க...’’ என்றேன். நிஷாவின் பெற்றோருக்கும் ஆலோசனை அவசியப்பட்டது.‘‘உங்க பொண்ணு மனசுல உண்டான இந்தத் தடுமாற்றத்துக்கு நீங்களும் ஒரு வகையில காரணம். சின்ன வயசுலயே திருமணத்தைப் பத்தியும் எதிர்காலக் கணவரைப் பத்தியும் அதிகமா பேசி, ஆசைகளை வளர்த்திருக்கீங்க. ஒவ்வொரு முறை அவளை பெண் கேட்டு வரும் போதும், அந்தப் பையனைப் பத்தி அவகிட்டயே பேசியிருக்கீங்க. வரும் சம்பந்தங்கள் நல்லதா, கெட்டதானு நீங்க ஆராய்ச்சி பண்றதுக்கு முன்னாடியே அவ மனசுல ஆசையைத் தூண்டறபடி விவரிச்சிருக்கீங்க. பிறகு அது சரியில்லைனு நீங்க ஒரு முடிவுக்கு வரும் போது, அவளுக்கு கோபமும் ஏமாற்றமும் வருது.

காதல் என்பது ஒரு உணர்வு. அதைத் தாண்டி, அந்த உணர்வை பிடிவாதமான இனக் கவர்ச்சியா உங்களையும் அறியாம மாத்தியிருக்கீங்க. இந்த வயசுல அவளுக்கு படிப்புதான் முக்கியம். படிப்புலேருந்து கவனத்தை திசைத் திருப்பற வகையில அவளுக்கு மாப்பிள்ளை தேடற படலத்தை நடத்தி, அனாவசியமா குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கீங்க. பெற்றோர் எப்போதும் பிள்ளைகளோட ஏற்றத்துக்குக் காரணமா இருக்கணுமே தவிர, தடுமாற்றத்துக்குக் காரணமாகக் கூடாது...’’ எனச் சொல்லி அனுப்பினேன்.

பயிற்சி

துணிமணி வாங்குவதில் தொடங்கி, பெரிய முதலீடுகள் செய்கிற வரை இந்தக் காலத்தில் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான ஆப்ஷன்கள் உண்டு. தேவைக்கு அதிகமான சப்ளை இருக்கும் காலமிது. ஒன்றை விட இன்னொன்று சிறப்பாகக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பார்த்த மாத்திரத்தில் ஒன்றின் மேல் ஆசைப்படுவதும் முதல் பார்வையிலேயே காதல் வயப்படுவதும் அடுத்தடுத்து காத்திருக்கிற வாய்ப்புகளை கவனிக்கத் தவறுகிறவர்கள் செய்கிற காரியம். உங்களுக்கு முன் 100 வாய்ப்புகள் இருக்கின்றனவா..? அத்தனையையும் பாருங்கள். ஒரு கட்டத்தில் அதில் ஒன்றில் உங்கள் மனம் லயிக்கும். அதுதான் உங்களுக்கானது என மனசு சொல்லும். அப்போது அதைத் தேர்ந்தெடுக்கத் தயாராகுங்கள். காதலுக்கு மட்டுமின்றி, வாழ்க்கையின் எல்லா விஷயங்களுக்குமே இந்த கொக்குச் சிந்தனை பொருந்தும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum