Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முதலீட்டில் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
முதலீட்டில் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
[You must be registered and logged in to see this image.]
முதலீடு தொடர்பான விஷயங்களை, கணவர் பார்த்துக் கொள்வார் என, பெண்கள் அலட்சி யமாக இருக்க கூடாது என்கிறார், நிதி ஆலோசகர், ஸ்ரீதேவி: சேமிப்பில், நம் பெண்கள் எப்போதுமே ராணிகளாக இருக்கின்றனர். தனியாக எந்த திட்டமிடலும் இல்லாமலே, குறிப்பிட்ட அளவு பணத்தை பெண்கள் சேமிப்பதை, வீடுகளில் பார்க்கலாம். ஆனால், முதலீடு என, வரும் போது மட்டும், நம் பெண்கள் இரண்டு அடி தள்ளி நிற்பது ஏன் என, புரியவில்லை.முதலீடு என்பது ஆண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என, தவறாக நினைக்கின்றனர். ஆனால், முதலீடு பற்றிய விஷயங்களை பெண்கள் அறிந்திருப்பதுடன், தங்கள் குடும்பத்தின் நிதி தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்வதும் அவசியம். அதாவது, குடும்பத்தின் வருமானம், செலவு, மீதமுள்ள தொகையில் எவ்வளவு சேமிக்கப்படுகிறது, இதனால் கிடைக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு போன்ற விவரங்களை, தெரிந்து வைத்திருக்க வேண்டும்.ஏனெனில், பெரும்பாலான ஆண்கள், ஏதாவது சூழ்நிலையில் முதலீட்டை துவங்கி, பின் அதை அப்படியே மறந்திருப்பர். இதனால், முதலீடு செய்த பணம், நஷ்டம் அல்லது அந்த முதலீடு என்ன ஆனது என, கவனிக்காமல் அப்படியே இருப்பதால், அவசரத்திற்கு பயன்படாமல் போகும். எனவே, நிதி தொடர்பான விஷயங்கள் அனைத்தையுமே கணவர் பார்த்துக் கொள்வார் என, பெண்கள் அலட்சியமாக இருக்க கூடாது.'இன்சூரன்ஸ் பிரிமீயம்' செலுத்தும் தேதி போன்ற முதலீட்டு திட்டங்களின் தேதியை முன்னரே அறிந்து, அதற்கு ஏற்ற தேதிக்குள் பணம் கட்ட திட்டமிடலாம். மேலும், முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என்பதை கவனித்து, கணவருக்கு தொடர்ந்து தெரியப்படுத்தினாலே, முதலீடு குறித்த தகவல்களை, உங்கள் கணவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.முதலீட்டில் மிக முக்கி யமானது, ஆவணம். ஆவணம் இல்லை என்றால், முதலீட்டை திரும்ப பெறுவதில் சிக்கல் உருவாகும். எனவே, முதலீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தெரிந்து பத்திரமாக வைத்திருப்பதுடன், நகல் எடுத்து வைக்கலாம். நிஜ ஆவணம் தொலைந்து விட்டால், நகல் மூலம் முதலீட்டை திரும்ப பெறலாம்.நீங்களோ அல்லது உங்கள் கணவரோ செய்யும், எல்லா வகையான முதலீட்டிலும், உங்களுக்குப் பின் யாருக்கு சொந்தம் சேர வேண்டும் என்பவரான, 'நாமினி'யின் பெயரை குறிப்பிடுவது முக்கியம். திருமணத்திற்கு முன், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களின் பெயர்களை, நாமினியாக குறிப்பிட்டு இருக்கலாம். திருமணம் ஆன பின், இவற்றை கட்டாயம் மாற்ற வேண்டும். ஏனெனில், அசம்பாவிதங்கள் ஏதாவது நிகழும் போது, முதலீட்டை திரும்ப பெறுவதில் சிக்கல் உருவாவதை, இதன் மூலம் தடுக்க முடியும்.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: முதலீட்டில் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
நல்ல பயனுள்ள குடும்ப ஆலோசனை
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: முதலீட்டில் பெண்கள் கவனிக்கவேண்டியவை!
விழிப்புணர்வு தரும் தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» முதலீட்டில் 10%-க்கு மேல் தங்கம் வேண்டாம்: மணப்புரம் பைனான்ஸ் சிஇஓ பேட்டி
» ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவக்கம் முதல் தலைவராக இந்தியர்
» குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில் கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி
» பெண்கள்....!
» முதலீட்டில் 10%-க்கு மேல் தங்கம் வேண்டாம்: மணப்புரம் பைனான்ஸ் சிஇஓ பேட்டி
» ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவக்கம் முதல் தலைவராக இந்தியர்
» குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில் கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி
» பெண்கள்....!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|