Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாகலூர் அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
நாகலூர் அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம்
மூலவர் : லலிதா திரிபுரசுந்தரி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : நாகலூர்
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
பவுர்ணமியன்று, மாலை 4 மணி முதல் சிறப்பு பூஜை மற்றும் தேர்பவனி உண்டு. நவராத்திரி.
தல சிறப்பு:
மகாமேரு வடிவத்திலேயே கோயில் அமைந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில் நாகலூர், ஏற்காடு, சேலம் மாவட்டம்.
போன்:
+91 4281- 291 241
பொது தகவல்:
கிரானைட் கற்களால், 42 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட மஹாமேருவின் உள்ளே, மூலவராக லலிதா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கிறாள். கோபுரத்தின் மூன்று திசைகளிலும், ஆகம விதிப்படி சப்தமாதர்களின் மூவரான பிராஹ்மி, வைஷ்ணவி, கவுமாரி ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பிரகாரத்தில் தேக்கு மரத்தினால், கலைநயத்துடன் மயில்மீது அருள்பாலிக்கும் சரஸ்வதி தேவி, விஸ்வரூப விஷ்ணு, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகியோரின் ஆள் உயர சிலைகள் பிரமிக்க வைக்கிறது. ஈசான்ய மூலையில் தட்சணாமூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது.
பிரார்த்தனை
நினைத்த காரியம் நிறைவேற, காரியத்தடை நீங்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பூஜைகள்: ஆகம விதிப்படி தினமும் நான்கு கால பூஜை நடக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில், அம்பாளுக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
கோயில் உருவான விதம்: ஸ்ரீ சக்ரத்தில் எல்லா தெய்வங்களும் அடங்கியுள்ளன. அதில் உள்ள, 9 ஆவரணங்களை உருவப்படுத்தும்போது, மகாமேருவாக காட்சியளிக்கிறது. மகாமேருவை சரியான திசையில், சரியான முறையில் பிரதிஷ்டை செய்யும் போது, அந்த இடத்தில் பிரபஞ்சத்தின் (உலக) சக்தி குவியும். தியானம் பழகாதவர்கள் கூட அதன் மூலம் கிடைக்கும் அமைதியை இங்கு உணர முடியும்.
தல வரலாறு:
சக்தியில்லையென்றால் எதுவும் இயங்காது. உலகில் முதன்முதலில் தோன்றியவள் அன்னை ஆதி சக்தி, அவளிடம் இருந்தே, படைத்தல், காத்தல், அழித்தல் பணிகளைப் பிரம்மா, விஷ்ணு, சிவன் வடிவில் இருந்து செய்கிறாள் என அம்பாள் உபாசகர்கள் கூறுகின்றனர். உலகமெங்கும் வியாபித்துள்ள சக்தியை வணங்குவதற்கு உருவம் வேண்டுமென மும்மூர்த்திகளும் கேட்டனர். ஆதி பராசக்தியே முன்வந்து, தன் அம்சமாக ஸ்ரீசக்ரத்தையும், அதன் வடிவமான மகாமேருவையும் (மலை) வழங்கினாள். இப்படி ஆதிபராசக்தியின் அம்சமாக உள்ள ஸ்ரீசக்ரத்தை கோயில்கள் மட்டுமின்றி, வீடுகட்டும்போது கூட பிரதிஷ்டை செய்வது வழக்கமாக உள்ளது. ஸ்ரீ சக்ரத்துக்கு உருவம் கொடுக்கும் போது, அது மஹாமேருவாக உருவெடுக்கிறது. அம்மனின் காலடியில் சிறிய அளவில் பஞ்சலோகத்தில், மகாமேரு இருக்கும். ஆனால், மகாமேரு வடிவத்திலேயே ஒரு கோயில், சேலம் மாவட்டம், ஏற்காடு அருகேயுள்ள நாகலூரில் அமைந்துள்ளது. அமைதியான
சூழலில், தென்றல் வீசும் ஆரோக்கியமான இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் சென்று வந்தால் மனஅமைதி கிடைக்கும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மகாமேரு வடிவத்திலேயே கோயில் அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நாகலூர் அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மாடம்பாக்கம் அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில், சென்னை
» அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், சேலம்
» அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்,சேலம்
» வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்
» அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம்
» அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், சேலம்
» அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்,சேலம்
» வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்
» அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|